search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife dispute"

    திருபுவனை அருகே கார் மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே உள்ளது ஆண்டியார் பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). கார் மெக்கானிக். இவரது மனைவி வேல்விழி (24). இவர்களுக்கு சாதனாஸ்ரீ (3½) என்ற பெண் குழந்தையும், 2 வயதில் பிரசோத் என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று மகன் பிரசோத்தின் பிறந்த நாளாகும். இதனையொட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாட மகேந்திரனும், வேல்விழியும் முடியு செய்தனர். ஆனால், பிறந்தநாள் விழா கொண்டாட பணம் இல்லாததால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    பின்பு வேல்விழி வெளியே சென்று விட்டார். அப்போது மகேந்திரன் வீட்டுக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து வேல்விழி வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்த போது, கணவர் மகேந்திரன் மின் விசிறியில் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கு வதை பார்த்து கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து தூக்கில் பிணமாக தொங்கிய மகேந்திரன் உடலை கீழே இறக்கினர்.

    இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுரண்டை அருகே குடும்பம் நடத்த வர மறுத்த தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    ஆலங்குளம்:

     சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை மாஞ்சோலை தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 26). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இதையடுத்து கணவரை பிரிந்து ஈஸ்வரி தனது தாய் வீடான பூலாங்குளத்திற்கு வந்துவிட்டார். இந்நிலையில் பாலமுருகன் பூலாங்குளத்தில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாலமுருகன், ஈஸ்வரியை அரிவாளால் வெட்டினார். 
     
    இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தார்.
    சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு சடையன்கிணறு பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல் (வயது 60) விவசாயி. இவரது மனைவி மரிய பாக்கியம். சித்திரைவேலுக்கு குடி பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதில் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இதில் மனமுடைந்த அவர் கடந்த 15-ந்தேதி தனது தோட்டத்தில் மதுவில் விஷத்தை கலந்து குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சித்திரைவேல் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கோரிமேட்டில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பூ வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    கோரிமேடு ஆனந்தா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவர் அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் பூக்கடை வைத்து பூ வியாபாரம் செய்து வந்தார்.

    இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று மாலை பூ வியாபாரம் முடிந்ததும் ஆறுமுகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவி மாரியம்மாளிடம் தகராறு செய்தார்.

    மேலும் மாரியம்மாளை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் போதை தெளிந்ததும் மனைவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    ஆனாலும் மனைவியை தாக்கியதை நினைத்து ஆறுமுகம் மனமுடைந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்க டேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    அவனியாபுரம்:

    மதுரை சொக்கிகுளம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது30). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன.

    முத்துப்பாண்டி அடிக்கடி மது அருந்தியதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பாண்டிச்செல்வி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    அவரை சமரசம் செய்து வீட்டுக்கு வரும்படி முத்துப் பாண்டி அழைத்தார். ஆனால் பாண்டிச்செல்வி வர மறுத்து விட்டாராம்.

    இதனால் மனவேதனை அடைந்து முத்துப்பாண்டி அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். பின்னர் சின்ன அனுப்பானடி சிந்தா மணி தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் மணிராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பொம்மிடி அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த தச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 41), தச்சு தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் 10-ம் வகுப்பும், 2-வது மகள் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வெளியூருக்கு சென்றுவிடுவார். பின்னர் ஒருவாரம், 10 நாள் கழித்து வீட்டுக்கு வருவார்.

    இதேபோல மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வெளியூர் சென்ற அவர் வீட்டுக்கு வந்தார். குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றும், இனிமேல் சேர்ந்து வாழலாம் என்றும் மனைவியிடம் கூறினார். ஆனால் அவரது பேச்சை மனைவி நம்பவில்லை. உறவினர்களை அழைத்து பேசி பின்னர் சேர்ந்து வாழலாம் என்று கூறி விட்டார். இதனால் மனம் உடைந்த சரவணன் வீட்டுக்குள் சென்று திடீரென்று அங்குள்ள ஓட்டு வீடு மரத்தில் மனைவி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சரவணன் பிணத்தை கைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    திருவாரூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரன் தெருவை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த சிவஞானராணி (21) என்ற இளம்பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது சிவஞானராணி 2 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 8-ந்தேதி கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது சிவஞானராணி, முரளிதரனை கண்டித்து பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த முரளிதரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டார். அந்த சமயத்தில் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முரளிதரனை மீட்டனர். பின்னர் அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முரளிதரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முரளிதரனின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உடன்குடி:

    உடன்குடி புதுமணை கோட்டைவிளையைச் சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது 37) கட்டிட தொழிலாளி இவருக்கு குடி பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி தேவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியிடம் கோபித்து கொண்டு சென்ற முத்துபாண்டி காலை வரை வீடு திரும்பவில்லை. நேற்று மனைவி தேவி கணவனை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது ஊருக்கு ஒதுக்குபுறம் உள்ள அரளி பூந்தோட்டம் கிணற்றில் இறந்து கிடந்தார். 

    திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து முத்துபாண்டி உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்.

    இது சம்பந்தமாக குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×