search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer suicide"

    • விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.
    • விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் திருநாவலூர் அருகே கிழக்குமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43) விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு திரும ணம் ஆகி மனைவி 1 மகள் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.

    இதனை அடுத்து நேற்று கிழக்கு மருதூர் அருகே சிவா பட்டினம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா கரன் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று சிவ குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • திருநாவலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பரவநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 64). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவி மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்தார். இது குறித்து சுப்பிரமணியின் மகன் நாகராஜ் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற–னர். 

    • விவசாயி தற்கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் எதற்காக தற்கொலை செய்தார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள வழிசோதனை பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). விவசாயி. இவர் கடந்த 24-ந் தேதி மதியம் வாகன விபத்தில் காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் சங்கரை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உள்ள வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் மனைவி மஞ்சுளா இருந்தார்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் சங்கர் திடீரென எழுந்து கழிவறைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறினார். உடனே மஞ்சுளா இப்போது செல்லவேண்டாம். டாக்டர் வந்தபின்பு செல்லலாம் என்று கூறினார்.

    ஆத்திரமடைந்த சங்கர் அவரது மனைவியை தள்ளிவிட்டு திடீரென கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். பின்னர் வெகுநேரமாகியும் வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மஞ்சுளா கூச்சல்போட்டார். உடனே வார்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சங்கர் லுங்கியால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் எதற்காக தற்கொலை செய்தார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிபோதையில் வந்த கணவனை மனைவி திட்டியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீராசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வசனாங்குப்பம் சேர்ந்தவர் வீராசாமி (வயது 58).விவசாயி. சம்பவத்ன்று குடித்துவிட்டு வீராசாமி வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அவரது மனைவி சுமதி குடிபோதையில் வந்த கணவர் வீராசாமியை திடீரென்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீராசாமி விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீராசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம்.
    • அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 40) விவசாயி இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம். நேற்று அதே பகுதியில் கோவில் திருவிழா நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை அருள் செல்வம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் மனைவியிடையே வாய் தகராறு ஏற்பட்டு குடும்பத் தகராறாக மாறியது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் செல்வம் தனது வீட்டின் முன்னாள் இருந்த மற்றொரு கூரை வீட்டிற்கு சென்று அங்கு மனைவி சேலையால் தூக்கில் தொங்கினார்.

    இதைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அருள் செல்வம் மனைவி மஞ்சமாதா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விஸ்வநாதனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • விஸ்வநாதன் நேற்று முந்திரித்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வடக்கு பரணம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 36). விவசாயி. இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகளும் உள்ளனர்.

    விஸ்வநாதனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடன் சுமை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த விஸ்வநாதன் நேற்று முந்திரித்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் விஸ்வநாதனின் மனைவி கவிதா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக் கம் அருகே உள்ள நங்கமங்க லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சடகோபன் ( வயது 50 ) , விவ சாயி .

    இவர் கடந்த சில நாட்களாக உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்துள்ளார் . இந்த நிலையில் கடந்த 16 - ந் தேதி நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த விஷத்தை குடித் துள்ளார் .

    ஆபத்தான நிலை யில் இருந்த அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந் தார் . இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • விழுப்புரம் அருகே குடிப்பதற்கு பணம் தராததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • ஒருவரிடம் ரூ. 200 வாங்கி க்கொண்டு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி மதுவில் கலந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே ராமையாம் பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களையும் அதே பகுதியில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் சரிவர வேலைக்கு செல்வதில்லை. கடந்த மூன்றாம் தேதி வீட்டில் 2 மகள்கள் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்துவிட்டனர். இதனால் அதே பகுதி சேர்ந்த நபர் ஒருவரிடம் ரூ. 200 வாங்கி க்கொண்டு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி மதுவில் கலந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    இந்த விசயம் மனைவி மற்றும் மகளுக்கு தெரிய வரவே அதிர்ச்சி அடைந்து அவரை முண்டியமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திகேயன் இறந்தார். இது குறித்து வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சேகருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது
    • இதில் மனமுடைந்த சேகர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த காரைகாட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 35), விவசாயி. இவருடைய மனைவி வாசுகி.

    இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சேகருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 14-ந் தேதி மதுபானம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த சேகர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சேகர் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விழுப்புரம் அருகே மழை வெள்ளத்தில் நெற்பயிர் மூழ்கியதால் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வானூர்:

    விழுப்புரம் அருகே கிளியனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோவடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 46) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார்.

    கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இந்த தொடர் மழையின் காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாஸ்கரன் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் பிணமாக தொங்கிய பாஸ்கரனை பார்த்து அவரது மனைவி செல்வி கதறி அழுதார்.

    இதுகுறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா அருகே ஊர்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள பூண்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 55) விவசாயி. இவருக்கும் ஊர்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த சந்திரன் நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள சுண்டக்காப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது50). விவசாயியான இவர் தோட்டத்தில் பட்டுக்கூடு வளர்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அன்பழகன் நேற்று மதியம் தனது விவசாயதோட்டத்தில் பூச்சிமருந்தை குடித்து  மயங்கி கிடந்தார்.  

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனேஅவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபெற்ற அன்பழகன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்த அன்பழகனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளார்.
    ×