search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுவில் விஷம்"

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அடுத்துள்ள காளிச்செட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 58). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவரை குடும்பத்தினர் காப்பாற்றி விட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 18-ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டார்.

    இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது மகன் சம்பத்குமார் (25) சிறுவலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடி ப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் அப்பகுதி மக்களி–டையே பெரும் சோகத்தை–யும், அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஊதாக்கட்டை (எ) ஆறுமுகம் என்பவரது மகன் அய்யனார் (வயது 22). இவர் வெளியூரில் தங்கி கொத்த–னார் வேலை பார்த்து வரு–கிறார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த–தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக தனது சொந்த ஊரான புளியங் குளம் கிராமத்திற்கு அய்ய–னார் வந்திருந்தார். திருவிழா–வையொட்டி கலை நிகழ்ச்சி முடிந்த நிலையில் நேற்று காலை அய்யனார் வெளி–யில் சென்று விட்டார்.

    இதற்கிடையே எம்.புளியங்குளம் அருகேயுள்ள மயிலி ரெயில்வே பாலத் திற்கு அடியில், மதுவில் பூச்சி மருந்தை குடித்த நிலை–யில் அய்யனார் உயிருக்கு போராடி கொண்டிருப்ப–தாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற நண்பர்கள் மற்றும் உறவி–னர்கள் அவரை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அதன்பின்னர் அங்கி–ருந்து மேல் சிகிச்சைக்காக அய்யனார் அருப்புக் கோட்டை அரசு மருத்துவ–மனைக்கு கொண்டு செல் லப்பட்டார். இருப்பினும் உடல் முழுவதும் விஷம் பரவிய நிலையில் வழியி–லேயே அய்யனார் பரிதாப–மாக உயிரிழந்தார். இதனை–யடுத்து அவரது தாய் அழகு மீனாள் கொடுத்த புகா–ரின்பேரில் வழக்குப் பதிவு செய்த திருச்சுழி போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    வெளியூரில் தங்கி கொத் தனார் வேலை பார்த்து வந்த அய்யனார் சொந்த ஊரில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களி–டையே பெரும் சோகத்தை–யும், அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.

    • சுந்தரம் (வயது 56) . இவர் கடந்த 7-ந் தேதி அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட மனைவி கோபத்தில் திட்டினார்.
    • இதனால் மன வருத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துமயக்கநிலையில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்

    கடலூர்:

    சிதம்பரம் அருகே வாசப்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சுந்தரம் (வயது 56) . இவர் கடந்த 7-ந் தேதி அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட மனைவி கோபத்தில் திட்டினார். இதனால் மன வருத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனையடுத்து இவரது மகன் குணசேகரன் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • 2-வது மனைவிக்கு குழந்தை இல்லாததால் கொத்தனார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார்.திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே அரிசிபெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 37). கொத்தனார். இவருக்கு கன்னிகா என்ற பெண்ணுடன் திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தியாகராஜன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தியாகராஜன் மதுவில் விஷம் கலந்து குடித்தார் . இதில் மயக்கம் அடைந்த தியாகராஜனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிர் இழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே குடிப்பதற்கு பணம் தராததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • ஒருவரிடம் ரூ. 200 வாங்கி க்கொண்டு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி மதுவில் கலந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே ராமையாம் பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களையும் அதே பகுதியில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் சரிவர வேலைக்கு செல்வதில்லை. கடந்த மூன்றாம் தேதி வீட்டில் 2 மகள்கள் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்துவிட்டனர். இதனால் அதே பகுதி சேர்ந்த நபர் ஒருவரிடம் ரூ. 200 வாங்கி க்கொண்டு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி மதுவில் கலந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    இந்த விசயம் மனைவி மற்றும் மகளுக்கு தெரிய வரவே அதிர்ச்சி அடைந்து அவரை முண்டியமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திகேயன் இறந்தார். இது குறித்து வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 4 முறை தற்கொலைக்கு முயன்றவர் மதுவில் விஷம் கலந்து குடித்து பலியானார்.
    • அம்ரூஸ் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி நிலையில் இருந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே வடக்கு வழதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்ரூஸ் (வயது 51). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று அம்ரூஸ் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி நிலையில் இருந்தவரை, அவர்களது உறவினர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம் ரூஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இவர் ஏற்கனவே நான்கு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷம் குடித்து இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×