search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாவலூர் அருகே  கடன் சுமையால் விவசாயி தூக்கு போட்டு தற்கொலை
    X

    திருநாவலூர் அருகே கடன் சுமையால் விவசாயி தூக்கு போட்டு தற்கொலை

    • விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.
    • விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் திருநாவலூர் அருகே கிழக்குமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43) விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு திரும ணம் ஆகி மனைவி 1 மகள் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.

    இதனை அடுத்து நேற்று கிழக்கு மருதூர் அருகே சிவா பட்டினம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா கரன் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று சிவ குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×