என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் விவசாயி தற்கொலை
- விவசாயி தற்கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் எதற்காக தற்கொலை செய்தார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள வழிசோதனை பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). விவசாயி. இவர் கடந்த 24-ந் தேதி மதியம் வாகன விபத்தில் காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் சங்கரை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உள்ள வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் மனைவி மஞ்சுளா இருந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் சங்கர் திடீரென எழுந்து கழிவறைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறினார். உடனே மஞ்சுளா இப்போது செல்லவேண்டாம். டாக்டர் வந்தபின்பு செல்லலாம் என்று கூறினார்.
ஆத்திரமடைந்த சங்கர் அவரது மனைவியை தள்ளிவிட்டு திடீரென கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். பின்னர் வெகுநேரமாகியும் வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மஞ்சுளா கூச்சல்போட்டார். உடனே வார்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சங்கர் லுங்கியால் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் எதற்காக தற்கொலை செய்தார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்