search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ervadi"

    • கடந்த 1 மாதத்திற்கு முன்பு செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து பேசினார்.
    • விஷம் குடித்த நிஷாந்த் மயங்கி விழுந்தார்.

    களக்காடு:

    ஏர்வாடி ரஸ்தா, சேனையர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). இவரது மனைவி அம்பிகா (44). செல்வராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

    இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தியபடி இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி அம்பிகாவிற்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் அம்பிகாவின் பராமரிப்பில் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து பேசினார். அப்போது ஆத்திரத்தில் அவரது மகன் நிஷாந்த் (19) அவரை தாக்கினார். இதையடுத்து தந்தையை தாக்கி விட்டோமே என்று நிஷாந்த் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இதற்கிடையே கடந்த 19-ந் தேதி நண்பர்களை பார்க்க செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற நிஷாந்த் விஷம் குடித்தபடி வீட்டிற்கு திரும்பி வந்து, மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • நிரோஷா வள்ளியூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த 16-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    களக்காடு:

    ஏர்வாடி பெருந்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் நிரோஷா (வயது20). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 16-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆதம் அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான நிரோஷாவை தேடி வருகிறார்.

    • சுபாஷ் லோடு ஏற்றுவதற்காக தினேஷ் ராஜாவின் ஆட்டோவை அழைத்தார்.
    • தினேஷ்ராஜா சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள ஒத்தக்கடை, நடுத்தெருவை சேர்ந்தவர் தினேஷ் ராஜா (வயது41). இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுபாஷ் (29) என்பவர் லோடு ஏற்றுவதற்காக தினேஷ் ராஜாவின் ஆட்டோவை அழைத்தார். ஆனால் தினேஷ் ராஜா செல்ல மறுத்து விட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று சுபாஷ், அவரது நண்பர் ராகவேந்திர சர்மா (28), சண்முகபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (24), தளபதி சமுத்திரம் பிளசண்ட் நகரை சேர்ந்த ஆலன் (22) ஆகியோர் லோடு ஆட்டோவில் வந்து, தினேஷ்ராஜாவை கம்பால் சரமாரியாக தாக்கி னர். இதுபோல தினேஷ் ராஜாவும், அவரது மனைவி தங்கபழமும் சேர்ந்து சுபாஷையும், ராகவேந்திர சர்மாவையும் கம்பால் தாக்கினர். இந்த மோதலில் தினேஷ்ராஜா, சுபாஷ், ராக வேந்திரசர்மா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    இதில் தினேஷ்ராஜா சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையிலும், சுபாஷ், ராகவேந்திர சர்மா நெல்லை அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி இரு தரப்பினரும் ஏர்வாடி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

    இதையடுத்து ஏர்வாடி போலீசார் இரு தரப்பை சேர்ந்த தினேஷ்ராஜா, அவரது மனைவி தங்கபழம், சுபாஷ், ராகவேந்திர சர்மா, விக்னேஷ், ஆலன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
    • அதனடிப்படையில் இன்று ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

    அதனடிப்படையில் இன்று ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பா ளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ரீமா பைசல், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, ஏர்வாடி தி.மு.க. செயலாளர் சித்திக், ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள், ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • தளவாய்புரம் பஞ்சாயத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • பஞ்சாயத்தை சோலை வனமாக்கும் அரசின் திட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    ஏர்வாடி:

    தளவாய்புரம் பஞ்சாயத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பஞ்சாயத்துக்கு ட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பஞ்சாயத்தை சோலை வனமாக்கும் அரசின் திட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, டி.வி.எஸ். அறக்கட்டளை முருகன், களக்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி, ஒன்றிய பொறியாளர் பிரவின், பணி மேற்பார்வையாளர் சீனிவாச ராகவன், நல்லையா பீட்டர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாச பெருமாள், ஊராட்சி செயலர் திருமலை நம்பி, பணிதள பொறுப்பாளர் நாச்சியார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று இரவு 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு உள்ளனர்.
    • தளபதிசமுத்திரம் மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி பெரியார்நகரை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 31). இவரும், இவரது நண்பரும் நாகர்கோவில் அருகே உள்ள கோணத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    கட்டுப்பாட்டை இழந்தது

    நேற்று இரவு 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு உள்ளனர். நள்ளிரவில் நாங்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

    இதில் வினோத்குமாரும், அவரது நண்பரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் 2 பேரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பலி

    ஆனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தின்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்றும் அவர்கள் மீது மோதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏர்வாடி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்பேத்கர் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் முயற்சியால் தற்போது அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.

    ஏர்வாடி:

    ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 33 வருடங்களாக இந்த ஊர் பொதுமக்கள் வெளியூர் செல்ல அருகில் உள்ள தளவாய்புரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து தங்களது போக்குவரத்து பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

    இதனால் மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பலமுறை அம்பேத்கர் நகரில் பஸ் நின்று செல்ல மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில் தளவாய்பு ரம் பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தீவிர முயற்சியால் தற்போது அம்பேத்கர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.

    கடந்த 33 வருடங்களாக நிறைவேறாத மக்களின் கோரிக்கையை பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் நிறைவேற்றி வைத்துள்ளதாக இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    • ஏர்வாடி பகுதியில் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
    • வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஏர்வாடி:

    வேளாண்மை துறை சார்பில் களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேளாண் பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் களக்காடு சிங்கிகுளம் பஞ்சாயத்து சமுதாய நலக்கூடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.

    இத்திட்டத்தை பற்றிய விரிவான கருத்தாக்கத்தை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது வழங்கினார். சிங்கிகுளம் கால்நடை உதவி மருத்துவர் ஜான் ரவிகுமார் ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம் செய்யும் செயல் விளக்கத்தை எடுத்துரைத்தார்.

    வேளாண்மை பொறியியல்துறையின் திட்டங்களை உதவி பொறியாளர் அருணா விளக்கி கூறினார். தோட்டக்கலையின் திட்டங்களை தோட்டக்கலை உதவி அலுவலர் முத்துவிநாயகம் விளக்கி கூறினார்.

    வேளாண் வணிக துறை சார்ந்த திட்டங்களை உதவி வேளாண் அலுவலர் முத்து வீர் சிங் விளக்கி கூறினார். பல்வேறு வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.

    உதவி கால்நடை மருத்துவர் ராமகிருஷ்ணன் கால்நடை மருத்துவ முகாமை நடத்தினார். இதில் களக்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது தலைமை தாங்கினார். சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவர் முத்தையா சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்று பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அஞ்சனாதேவி செய்திருந்தார். கோவிலம்மாள்புரம் வேளாண்மை அலுவலர் வானுமாமலை, தோட்டக்கலை அலுவலர் இசக்கியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அப்துல் ரவூப், செங்களாகுறிச்சி கிராம துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர் காமாட்சி, உதவி கால்நடை மருத்துவர் சிந்தியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×