search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடியில் நர்சு மாயம்
    X

    ஏர்வாடியில் நர்சு மாயம்

    • நிரோஷா வள்ளியூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த 16-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    களக்காடு:

    ஏர்வாடி பெருந்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் நிரோஷா (வயது20). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 16-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆதம் அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான நிரோஷாவை தேடி வருகிறார்.

    Next Story
    ×