search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Project Camp"

    • 7நாட்கள் சிறப்பு நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது/
    • சாமளாபுரம் பெரியகுளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் 7நாட்கள் சிறப்பு நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது/

    அதன்படி கடந்த 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாமளாபுரம் பெரியகுளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளானது கோவை இயற்கை கழகத்தின் தலைவர் செல்வராஜ் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சாமளாபுரம் குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பும் ,பின்னர் சாமளாபுரம் பகுதியில் தூய்மைப்பணியும் மேற்கொண்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மழைகாடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.பின்னர் கடந்த 31-10-2022-ந்தேதி (திங்கட்கிழமை) ரோட்டரி சோமனூர் மற்றும் லிட்ரசி பள்ளி நிர்வாகம் இணைந்து சாமளாபுரம் பேரூராட்சி க்குட்பட்ட அய்யம்பாளையம்,காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் (6 இடங்களில்) ஆபத்தான வளைவுகளில் குவிகண்ணாடி அமைத்தனர். மேலும் 7 இடங்களில் குவிகண்ணாடி அமைக்கவுள்ளனர்.பின்னர் மாலை 6 மணிக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நீர்மேலாண்மை என்ற தலைப்பில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.

    அதனைத்தொடர்ந்து 1-11-2022-ந்தேதி (திங்கட்கிழமை) சாமளாபுரம் பகுதியில் லிட்ரசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கள்ளப்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு சமுதாய பொறுப்பும் தனிமனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் கா.வி.பழனிச்சாமி லிட்ரசி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து இன்று சாமளாபுரம் பேரூராட்சி க்குட்பட்ட பகுதிகளில் லிட்ரசி பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளை சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் வருகிற 4-11-2022-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் ஆர்.ராமமூர்த்தி, நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

    • ஏர்வாடி பகுதியில் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
    • வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஏர்வாடி:

    வேளாண்மை துறை சார்பில் களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேளாண் பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் களக்காடு சிங்கிகுளம் பஞ்சாயத்து சமுதாய நலக்கூடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.

    இத்திட்டத்தை பற்றிய விரிவான கருத்தாக்கத்தை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது வழங்கினார். சிங்கிகுளம் கால்நடை உதவி மருத்துவர் ஜான் ரவிகுமார் ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம் செய்யும் செயல் விளக்கத்தை எடுத்துரைத்தார்.

    வேளாண்மை பொறியியல்துறையின் திட்டங்களை உதவி பொறியாளர் அருணா விளக்கி கூறினார். தோட்டக்கலையின் திட்டங்களை தோட்டக்கலை உதவி அலுவலர் முத்துவிநாயகம் விளக்கி கூறினார்.

    வேளாண் வணிக துறை சார்ந்த திட்டங்களை உதவி வேளாண் அலுவலர் முத்து வீர் சிங் விளக்கி கூறினார். பல்வேறு வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.

    உதவி கால்நடை மருத்துவர் ராமகிருஷ்ணன் கால்நடை மருத்துவ முகாமை நடத்தினார். இதில் களக்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது தலைமை தாங்கினார். சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவர் முத்தையா சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்று பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அஞ்சனாதேவி செய்திருந்தார். கோவிலம்மாள்புரம் வேளாண்மை அலுவலர் வானுமாமலை, தோட்டக்கலை அலுவலர் இசக்கியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அப்துல் ரவூப், செங்களாகுறிச்சி கிராம துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர் காமாட்சி, உதவி கால்நடை மருத்துவர் சிந்தியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×