search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி அருகே மோதல்:ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் - 6 பேர் மீது வழக்கு
    X

    ஏர்வாடி அருகே மோதல்:ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் - 6 பேர் மீது வழக்கு

    • சுபாஷ் லோடு ஏற்றுவதற்காக தினேஷ் ராஜாவின் ஆட்டோவை அழைத்தார்.
    • தினேஷ்ராஜா சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள ஒத்தக்கடை, நடுத்தெருவை சேர்ந்தவர் தினேஷ் ராஜா (வயது41). இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுபாஷ் (29) என்பவர் லோடு ஏற்றுவதற்காக தினேஷ் ராஜாவின் ஆட்டோவை அழைத்தார். ஆனால் தினேஷ் ராஜா செல்ல மறுத்து விட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று சுபாஷ், அவரது நண்பர் ராகவேந்திர சர்மா (28), சண்முகபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (24), தளபதி சமுத்திரம் பிளசண்ட் நகரை சேர்ந்த ஆலன் (22) ஆகியோர் லோடு ஆட்டோவில் வந்து, தினேஷ்ராஜாவை கம்பால் சரமாரியாக தாக்கி னர். இதுபோல தினேஷ் ராஜாவும், அவரது மனைவி தங்கபழமும் சேர்ந்து சுபாஷையும், ராகவேந்திர சர்மாவையும் கம்பால் தாக்கினர். இந்த மோதலில் தினேஷ்ராஜா, சுபாஷ், ராக வேந்திரசர்மா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    இதில் தினேஷ்ராஜா சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையிலும், சுபாஷ், ராகவேந்திர சர்மா நெல்லை அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி இரு தரப்பினரும் ஏர்வாடி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

    இதையடுத்து ஏர்வாடி போலீசார் இரு தரப்பை சேர்ந்த தினேஷ்ராஜா, அவரது மனைவி தங்கபழம், சுபாஷ், ராகவேந்திர சர்மா, விக்னேஷ், ஆலன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×