search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephant attack"

    ஆழியாறு அணை அருகே யானை தாக்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி ஆழியாறு அணை அருகே நவமலைபதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் ராஜீ என்கிற முருகன் (வயது37). இவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா.

    இவர்களின் மகள் ரஞ்சனி (7), அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சித்ரா தனது மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொள்ளாச்சிக்கு சென்றார். மாலை விரைவில் வீட்டிற்குள் வந்துவிடலாம் என்பதால் மின்விளக்கினை ஒளிரச்செய்யாமல் சென்றுள்ளார்.

    தாய்-மகள் இருவரும் இரவு 7.30 மணியளவில் நவ மலைபதிக்கு திரும்பினர்.அங்கிருந்து செல்போனில் டார்ச் விளக்கு அடித்தபடி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் முன்பு இருந்த அரிசியினை வனப்பகுதியில் உலா வந்த காட்டு யானை தின்று கொண்டிருந்தது.

    இருட்டாக இருந்ததால் யானை நிற்பதை அவர்கள் கவனிக்கவில்லை. திடீரென மின்விளக்கு ஒளியினை பார்த்த காட்டு யானை அவர்களை நோக்கி ஓடிவந்தது. இதனை பார்த்த இருவரும் யானையிடம் இருந்து தப்ப ஓடினர். அப்போது சிறுமி ரஞ்சனியால் ஓட முடியவில்லை.

    அவரை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. பின்னர் யானை அங்கிருந்து ஓடி புதருக்குள் மறைந்தது. யானை தாக்கியதில் காயமடைந்த சிறுமியை மீட்டு குடியிருப்பு வாசிகள் உதவியுடன் கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.செல்லும் வழியிலேயே சிறுமி ரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை, ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வனத்துறை ஊழியர்கள் நவமலைபதி பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். யானை நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் பீதியடைந்தனர்.

    யானை தாக்கி உயிரிழந்த சிறுமி ரஞ்சனியின் உடல் இன்று காலை பிரேபரிசோதனை செய்யப்படுகிறது. வனத்துறை சார்பில் உடனடி நிவாரணமாக ரூ.50 ஆயிரம் கொடுக்கப்பட்டது. மேலும் ரூ.3.50 லட்சம் அரசு நடைமுறைப்படி விரைவில் ரஞ்சனியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

    கோவை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி மற்றும் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள கொண்டனூர் புதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சன். இவரது மனைவி பொன்னம்மாள் (80). இவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ஒற்றை காட்டு யானை நின்று கொண்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் விரைந்து நடக்க ஆரம்பித்தார்.

    அவரை துரத்தி சென்ற காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசாரும் பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறையினரும் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் யானை தாக்கி பலியான பொன்னம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை ஆனைக்கட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (62). இவர் கேரள மாநில எல்லையில் சோலையூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார்.

    இன்று காலை அவர் வீடு திரும்புவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டு யானை தொழிலாளி ரங்கசாமியை துதிக்கையால் தூக்கி வீசியது.

    இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளது. இந்த யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடு ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    மேலும் ஆனைக்கட்டி பகுதியில் யானை தாக்கி பொது மக்கள் பலியாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பாலக்காடு அருகே வன ஊழியரை யானை மிதித்து கொன்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு கண்ணோடு பகுதியை சேர்ந்தவர் மோகனன் (59). இவர் வாளையாறு வனத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மாலை 5 மணியளவில் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள வேலஞ்சேரியில் காட்டு பகுதியில் இருந்து 3 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வாளையாறு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களுடன் மோகனனும் சென்று இருந்தார்.

    அவர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு காட்டு யானை திரும்பி வந்து வன ஊழியர் மோகனனை துதிக்கையால் இழுத்து கீழே போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

    யானையை விரட்டும் போது தப்பி ஓடிய மற்ற ஊழியர்களான விஸ்வநாதன், சசி ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் தலைமை வன அதிகாரி சுரேந்திர நாத் அங்கு விரைந்து சென்றார். வேறு ஊழியர்களை வரவைழத்து யானைகள் காட்டுக்குள் விரட்டப்பட்டது.

    யானை தாக்கி உயிர் இழந்த மோகனன் உடல் மீட்கப்பட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    யானை தாக்கி பலியான மோகனன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் முதல் கட்டமாக ரூ. 5 லட்சம் இன்று வழங்கப்படும் எனவும் தலைமை வனஅதிகாரி சுரேந்திர நாத் தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அலசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்.

    இவரது மகன் ஸ்ரீராம் (வயது30). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்.

    நேற்று இரவு ஸ்ரீராம் தனது தோட்டத்திற்கு வழக்கம்போல் காவலுக்கு சென்றார். அப்போது இரவு சுமார் 12 மணியளவில் 5 யானைகள் கூட்டமாக அங்கு வந்துள்ளது.

    யானைகள் வருவதை கண்டு டார்ச் விளக்கை ஆன் செய்தார். அப்போது வெளிச்சத்தை கண்டு பயந்துபோன ஒரு யானை வேகமாக வந்து ஸ்ரீராமை நோக்கி வந்தது. யானை வருவதை கண்டு அவர் தப்பி ஓட முயற்சித்தார். உடனே யானை அவரை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் கை, கால், விலா எலும்பு நொறுங்கியதால் வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த ஸ்ரீராமை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வன சரகர் வெங்கடாசலம் மற்றும் வனகாப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஸ்ரீராமுக்கு ஆறுதல் கூறினர்.

    இந்த பகுதியில் தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகுந்து பொது மக்களை தாக்குவதால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.

    தற்போது இந்த பகுதியில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை வனத்துறையினர் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பாலக்கோடு அருகே ஒற்றை யானை தாக்கியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரிகுட்டனூர் கிராமத்தை சேர்ந்த பொன்னூகான் (வயது50) என்பவர் வனப்பகுதியில் மாடுகளை மேய்த்து வருபவர். இவர் வழக்கம்போல் காலை வேளையில் 50-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை மொரப்பூர் வனசரகத்திற்க்கு உட்பட்ட சீங்காடு வனப்பகுதியில் மாடுகளை மேச்சலுக்கு விட்டுள்ளார். மாலை நேரத்தில் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும்போது எதிர்பாரத விதமாக அவ்வழியாக தண்ணீர் தேடிவந்து ஒற்றை யானை பொன்னூகானை தாக்கி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    இதனை பார்த்த அப்பகுதி ஆடு, மாடு மற்றும் விறகு வெட்டுபவர்கள் பாலக்கோடு வனத்துறை மற்றும் மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தண்ணீர் தேடிவரும் யானைகளால் தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க பொதுமக்கள் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துசெல்ல வனத்துறை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    துடியலூர் அருகே யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    மதுரை மாவட்டம் மனக்காலகுடியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தடாகம் அருகே உள்ள ஆனைகட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த யானை லட்சுமணனை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலியானார். 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை ஆனைகட்டி அருகே உள்ள கண்டிவழியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கூலித் தொழிலாளி.

    இவர் நேற்று இரவு கொண்டனூர்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் பணப்பள்ளியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை துதிக்கையால் முருகனை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் யானை தாக்கி முருகன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் வனத்துறையினர் மற்றும் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    கோவை பூச்சியூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அடிக்கடி மலைப்பகுதியில் இருந்து இறங்கி வந்து மலையடிவார பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விளைபொருட்களை நாசப்படுத்தி செல்கிறது.

    இந்த மலையடிவார பகுதியில் ஹைடெக் சிட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு அடிக்கடி யானைகள் வரும் என்பதால் இங்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த பகுதிக்கு சென்று மது குடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.

    நேற்று இரவு இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது மலைப்பகுதியில் இருந்து 2 யானைகள் இறங்கி வந்தது. இதனை பார்த்த இளைஞர்கள் அலறியடித்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை பார்த்த யானைகள் இளைஞர்களை விரட்ட தொடங்கியது.

    அப்போது ஒரு ஆண் யானை சென்னை சிட்டலபாக்கம் நேரு நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 37), துடியலூர் ஆர்.எஸ். ரோட்டை சேர்ந்த மனோஜ் கார்த்திக் (31) ஆகியோரை துதிக்கையால் தூக்கி வீசியது.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி யானைகளை காட்டுக்குள் விரட்டினர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
    ஆந்திர மாநில எல்லையில் காட்டு யானை தாக்கி வனத்துறை அதிகாரி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Elephant

    சித்தூர்:

    ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் பல கிராமங்கள் உள்ளன. அங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் தமிழ்நாடு எல்லையையொட்டி, ஆந்திர மாநில பகுதியில் உள்ள நூனேப்பள்ளி கிராமத்தில் காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்தன.

    இதுபற்றி ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், இரு மாநில வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் குழுக்களாக சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சற்று தூரம் சென்று, அங்குள்ள நீரோடையில் படுத்துக் கொண்டன. அதனை ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

    அப்போது ஒரு யானை வேகமாக ஓடி வந்து, ஆந்திர மாநில வனத்துறை அதிகாரி மாரப்பா என்பவரை தாக்கியது. அதில் அவர், படுகாயம் அடைந்தார். அவரை, சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாரப்பா பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி நூனேப்பள்ளி கிராம மக்கள் கூறுகையில், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லையோரம் வனப்பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. அங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கர்நாடகத்தில் இருந்து வரும் காட்டு யானைகள் நூனேப்பள்ளி கிராமத்தில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகளால் விவசாயிகள், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர். #Elephant

    கோவை அருகே சித்த வைத்தியரை யானை மிதித்து கொன்றது.இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள முள்ளங்காடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் கிட்டி (75). சித்த வைத்தியர். நேற்று இவர் மூலிகை பறிக்க வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றார்.

    ஆனால் இரவு நேரமாகியும் கிட்டி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடி வெள்ளியங்கிரி மலை பகுதிக்கு சென்றனர்.

    இன்று காலை முள்ளங்காடு ஊர் தலைவர் ரமேஷ் அத்தி மரக்குட்டை ஜல்லி மேடு பகுதியில் கிட்டியை தேடி சென்றார். அப்போது அங்கு கிட்டி பிணமாக கிடந்தார். அவரது குடல் வெளியே தள்ளியபடி இருந்தது.

    கிட்டியை யானை மிதித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து போளூவாம் பட்டி வனத்துறையினருக்கும் ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வருவாய் ஆய்வாளர் குபேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினார்கள்.

    யானை தாக்கி பலியான கிட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இப்பகுதியில் கடந்த 4 வருடத்தில் 7 பேர் யானை தாக்கி இறந்து உள்ளனர். இதனால் ஆதிவாசி மக்கள் பீதியில் உள்ளனர்.

    குடியாத்தத்தில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த 11 காட்டு யானைகள் வாழை தோட்டத்தை நாசப்படுத்தியது. இதில் வாழை மரங்கள் சாய்ந்தது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்தவர் குத்துஷ் (வயது 56). இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் தனகொண்ட பள்ளியில் உள்ளது. அந்த 5 ஏக்கரில் வாழை பயிரிடபட்டு வாழைகள் குலைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்நிலையில் ஆந்திர வனபகுதியில் இருந்து 8 பெரிய யானை 3 குட்டியானை உள்பட 11 காட்டு யானைகள் இன்று அதிகாலை 2,30 மணிக்கு அவரது தோட்டத்தில் புகுந்தது. அங்கு 1 மணி நேரம் துவம்சம் செய்த யானைகள் வாழை தோட்டத்தினை நாசப்படுத்தியது.

    இதில் வாழை மரங்கள் சாய்ந்தது. சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி குத்துஷ் யானைகளை கண்டு மிரண்டு போனார்.

    இது குறித்து குடியாத்தம் வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். வன அலுவலர் மகேந்திரன், வனவர் ரவி, காப்பாளர் பூபதி, வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகள் வெடித்து யானைகளை அங்கிருந்து விரட்டினர்.

    அந்த யானைகள் ஆம்பூரான்பட்டி, தீர்த்தமலை பகுதிக்கு சென்றது. செல்லும் வழியில் உள்ள மரங்களையெல்லாம் துவம்சம் செய்தது. தற்போது யானைகள் தீர்த்த மலையில் முகாமிட்டு உள்ளது. இந்த யானைகளை ஆந்திர வனபகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்த யானை தாக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போடூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா (வயது50). விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை தனது தும்பிக்கையால் அவரை தாக்கி தூக்கி வீசியது. 

    இதில் படுகாயமடைந்த செல்லப்பா சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக செல்லப்பா இறந்தார். 

    இறந்து போன செல்லப்பாவுக்கு திட்டம்மா என்ற மனைவியும், அலமேலு என்ற மகளும் உள்ளனர்.
    கோவை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பால் வியாபாரியை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூரை சேர்ந்தவர் ரமேஷ் (35). பால் வியாபாரி. நேற்று இரவு பால் எடுக்க தொண்டாமுத்தூரில் இருந்து விராலியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விராலியூர் அருகே வரும் போது சாலையின் எதிர்புறம் திடீரென வந்த ஒற்றை காட்டு யானை சுரேஷை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த பகுதியில் யானையை விரட்டும் பணியில் இருந்த வனத்துறையினர் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது ரமேஷ் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே வனத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ரமேசை மீட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத் திரிக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேசின் மோட்டார் சைக்கிளையும் யானை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. உயிர் பலி வாங்கிய யானை தொடர்ந்து நரசீபுரம் விராலியூர் பகுதியில் முகாமிட்டு இருக்கிறது.

    விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்து வரும் அந்த யானை தற்போது உயிர் பலி வாங்கி உள்ளது. எனவே கும்கி யானையை கொண்டு உடனடியாக ஒற்றை காட்டு யானையை காட்டுக்குள் துரத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    ×