search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrical connection"

    • இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.
    • ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் கோட்ட அளவிலான மாதாந்திர மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் குமாா் நகா் மின்சார வாரிய துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.

    இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனா். திருப்பூா் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.

    இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு தாமதமின்றி விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நாகை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின் அலுவலகங்களிலும் நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
    • வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் அதை உடனே இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் செயற்பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின் அலுவலகங்களிலும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

    மின் இணைப்பு உரிமையாளர்கள், குடியிருந்து வரும் வாடகைதாரர்கள் ஆதார் அட்டையுடன் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்தில் காண்பித்து ஆதார் எண்ணை இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

    மேலும் நுகர்வோர் வசதிக்காக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களில் பிரத்தியேகமாக உள்ள வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் அதை உடனே இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்தந்த நுகர்வோர், தங்கள் பகுதிக்கு கொடுக்கப்பட்ட செல் போன் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

    நாகை - 9445853931, வெளிப்பாளையம்-9445853933, நாகூர் - 9445853934, திருமருகல்-9445853931, கங்களாஞ்சேரி- 9445853935, சிக்கல்-9445853940, வேளாங்கண்ணி- 9445853938, கீழ்வேளூர் -– 9448583936, திருக்குவளை- –9445853937, திருப்பூண்டி- –9445853939, வேதாரண்யம்-–9445853941, வாய்மேடு-9445853942, கரியா பட்டினம்- –9445853943, விழுந்தமாவடி- –9445853944 ஆகிய செல்போன் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

    அனைத்து மின் நுகர்வோர் இந்த சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்தி ஆதார் எண்களை இணைத்து வருகிற 31-ந் தேதிக்குள் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த நாட்களில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பலவித மின் விபத்துக்களை சுட்டிக்காட்டி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    • மின் இணைப்பில், இ.எல்.சி.டி., (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) எனப்படும் உபகரணம் ஏற்கனவே மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டு வருகிறது.

    அவினாசி:

    இடி, மின்னல், மழையின் போது ஏற்படும் மின்கசிவு மற்றும் மின் பழுது காரணமாக விபத்து நேரிடுகிறது. சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது. இதை தவிர்க்க அனைத்து மின்நுகர்வோரும் ஆர்.சி.டி., எனப்படும் உபகரணத்தை அவரவர் மின் இணைப்பில் பொருத்திக் கொண்டால் விபத்து தவிர்க்க முடியும் என தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட மின்வாரியத்தினர் கூறியதாவது:-

    மின் இணைப்பில், இ.எல்.சி.டி., (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) எனப்படும் உபகரணம் ஏற்கனவே மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே மின் கசிவு மற்றும் மின் பழுதால் மின் விபத்து நேரிடுவது தொடர்வதால் அந்த உபகரணத்தை காட்டிலும் கூடுதல் பலன் தரும் ஆர்.சி.டி., உபகரணம் பொருத்த மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்த உபகரணத்தை மின் இணைப்பில் பொருத்திக் கொள்ளும் போது மின் கசிவு மற்றும் மின் பழுதின் போது மின்சாரம் பாய்ந்தால் உடனடியாக அந்த மின் இணைப்பு தாங்கிய மீட்டர் செயலிழக்கும் (டிரிப்). இதனால் காயம், உயிர் சேதம் ஏற்படாது.

    புதிதாக மின் இணைப்பு வாங்குவோர் உட்பட அனைவரும் கட்டாயம் ஆர்.சி.டி., உபகரணம் பொருத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். சந்தையில் ஒருமுனை இணைப்புக்கான ஆர்.சி.டி., உபகரணம் 800 முதல் 1,200 ரூபாய், மும்முனை மின் இணைப்புக்கான ஆர்.சி.டி., 2,500 முதல் 2,800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இவ்வாறு மின்வாரியத்தினர் கூறினர்.கடந்த நாட்களில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பலவித மின் விபத்துக்களை சுட்டிக்காட்டி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
    • சேதமடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே, குன்னம் ஊராட்சி, பெரம்பூர் பாப்பாகுளம் பகுதியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மின்கம்பத்தை புதிதாக மாற்றி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார், மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து மின்சார வாரியம் சார்பில் சேதம் அடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில்ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார் மின்வாரிய உதவி மின் பொறியாளர் (சீர்காழி மேற்கு) சுமத்திரா, ஊர் பொதுமக்கள் எலக்ட்ரீசியன் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது.
    • கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி எல்லையில் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் சார்பில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி ஆரம்பத்தில், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்தது,

    பின்னர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, கல்லூரிக்கு என்ற தனி இடத்தை தேர்வு செய்து, கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு, கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு, நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, அரசு கல்லூரியாக மாறியது. அரசு கல்லூரியாக மாறிய பின்பு, கல்லூரி கட்டிடத்திற்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பிற்கான மின் கட்டண தொகை 17 மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்தது.

    மின்சார வாரியம், பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் கற்பித்தல் தடை பட்டு விடக்கூடாது என்பதற்காக, மின் இணைப்பை துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில், கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது. மின் கட்டண தொகை அதிகமான நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் நன்னிலம் அலுவலகத்தில் இருந்து மின்சார வாரிய ஊழியர்கள் நன்னிலம் அரசு கல்லூரிக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர்.

    இதனால் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் கவுரவ பேராசிரியர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு தரப்பட்ட மின்னிணைப்பு, மின் கட்டண பாக்கியை துண்டிக்கப்பட்டது நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சுஜித் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
    • சுஜித் கஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ருத்திராயம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித் (வயது 22). பெயிண்டர். இவருக்கும் மகேஷ் என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    கடந்த 20-ந் தேதி இவர் தனது மனைவியிடம் கஞ்சம்பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது சுஜித் கஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சுஜித்தின் உடலை ஆய்வு செய்த போது அவர் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அன்னூர் போலீசார் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுஜித் திருட்டுத்தனமாக கள் எடுத்து குடிக்க மரத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் விவசாயியான பனைமரத்து ேதாட்டத்தை சேர்ந்த துரை (59), ஊத்துபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி (45), ருத்திராயம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (49), கிழக்குவலவை சேர்ந்த பழனிசாமி (57), தாசம்பாளையத்தை சேர்ந்த வெங்கிட்டான் (50), கஞ்சம்பள்ளியை சேர்ந்த முத்துக்குமார் (50) ஆகியோரை கைது செய்தனர்.

    சுஜித் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து முக்கிய குற்றவாளியான துரையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். ஆனால் அதில் எனக்கு போதிய வருமானம் இல்லை. இதனையடுத்து எனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் கள் எடுத்து விற்பனை செய்யலாம் என முடிவு செய்தேன். அதன்படி 110 தென்னை மரத்தில் இருந்து கள் எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தேன். இரவு நேரத்தில் நான் வீட்டிற்கு சென்ற போது தென்னை மரத்தில் இருந்து கள் திருட்டு போனது. இதனை தடுப்பதற்காக 110 தென்னை மரங்களிலும் இரும்பு கம்பியால் சுற்றி இரவு நேரத்தில் மட்டும் அதில் மின்சாரம் செலுத்தி வந்தேன். இதனால் கள் திருட்டு குறைந்தது. கடந்த 21-ந் தேதி ஏற்கனவே போதையில் இருந்த சுஜித் கள் குடிப்பதற்காக எனது ேதாட்டத்துக்கு வந்துள்ளார். நான் விற்பனையை முடித்து விட்டு சென்று விட்டேன். இதனையடுத்து அவர் தென்னை மரத்தில் மின் இணைப்பு இருப்பது தெரியாமல் கள் எடுப்பதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி இறந்தார். மறுநாள் காலையில் ேதாட்டத்துக்கு சென்ற நான் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் கள் குடிக்க வந்த 5 பேருடன் சேர்ந்து சுஜித்தின் உடலை சிறிது தூரம் கொண்டு சென்று போட்டு விட்டு வந்தோம்.

    சட்டவிரோதமாக மின் இைணப்பு கொடுத்து இருந்தால் விசாரணை நடத்தி போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் தென்னை மரங்களில் சுற்றி இருந்த இரும்பு கம்பிகளை அகற்றினேன். பின்னர் ஏதும் தெரியாதது போல இருந்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். கைது செய்யப்பட்ட 6 பேர் மீது கொலைக்கு நிகரான உயிரிழப்பை ஏற்படுத்துதல், ஆதாரங்களை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

    • நுகா்வோா்களின் மாதாந்திர மின் கட்டணத்துடன் சோ்த்து செலுத்தும் விதமாக மின்சார விதி உள்ளது.
    • தற்காலிக மின்சார இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றம் செய்யப்படாமல் இருப்பதால், மின்சார கட்டணம் மிக அதிகமாக வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் குமாா் நகரில் உள்ள மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் செயற்பொறியாளா் சண்முகசுந்தரம் தலைமையில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள், மின்சார வாரிய அலுவலா்கள் பங்கேற்றனா்.

    இதில் திருப்பூா் அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பு பொதுச் செயலாளா் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    மின்சார இணைப்புகளுக்கு வழங்கியுள்ள மின் பழுவை விட கூடுதலாக பயன்படுத்தினால் அதற்கான கூடுதல் கட்டணத்தை மின்சார வாரிய இணைதளம் மூலமாக பதிவேற்றம் செய்து, நுகா்வோா்களின் மாதாந்திர மின் கட்டணத்துடன் சோ்த்து செலுத்தும் விதமாக மின்சார விதி உள்ளது.

    ஆனால், திருப்பூா் பகுதிகளில் உள்ள பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட இடங்களில் உள்ள இணைப்புகளில் கூடுதலாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக ஊழியா்களை நுகா்வோா்களை தொடா்பு கொண்டு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என அபராதம் செலுத்த வேண்டும் என மிரட்டுவதுடன், நுகா்வோா்களிடம் தவறான தகவல்களை தெரிவித்து அதிக பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது குறித்து தீா்வு காண வேண்டும்.

    திருப்பூா் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு தற்காலிக மின்சார இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றம் செய்யப்படாமல் இருப்பதால், மின்சார கட்டணம் மிக அதிகமாக வருகிறது. எனவே, இதில் உள்ள குளறுபடிகளை கலைந்து தற்காலிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றம் செய்ய விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக வீட்டு மின் இணைப்பாக மாற்றம் செய்ய சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது

    • அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
    • உடுமலை ஒன்றியத்தில் 143 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

    உடுமலை:

    3வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரம்ப கல்வி, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல், மொழி, அறிவு மற்றும் சமூக மன எழுச்சி வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு அடித்தளமாக இருப்பவை அங்கன்வாடி மையங்கள்.

    ஆனால்பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில், மின் வசதி இருப்பதில்லை. இதனால் மின்விளக்கு, மின் விசிறி உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்களையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளும், அமைப்பாளர்களும் இதனால் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    குழந்தைகளின் ஊட்டச்சத்து உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தும் அங்கன்வாடி மையங்கள், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வகையில் உடுமலை ஒன்றியத்தில் மின் வசதி இல்லாத 25 அங்கன்வாடி மையங்களில்புதிதாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கென மின்வாரியத்திற்கு, வைப்புத்தொகையாக தலா 2,650 ரூபாய் வீதம், 66,250 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வீணா கூறியதாவது: -

    உடுமலை ஒன்றியத்தில் 143 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 25 மையங்களில் மின் வசதி இல்லாதிருந்தது. மின்வசதிக்கு ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.

    • விவசாயிகளும் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு மின் இணைப்பு வழங்கும் திட்டம் (தட்கல்) இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
    • 7.5-10 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம், 10-15 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சம் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது

    விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பம் பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு மின் இணைப்பு வழங்கும் திட்டம் (தட்கல்) இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் அலுவலகத்தில் விருப்ப கடிதம் மற்றும் உரிய வருவாய் ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விருப்பம் மனு அளிப்பதற்கு முன்பே பெயர் மாற்றம், புல எண் மாற்றம் மற்றும் தேவைப்படின் தடையில்லா சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்தத் திட்டத்தில் மின் பளு மாற்றத்திற்கு அனுமதி இல்லை. மேலும் இந்தத் திட்டத்தில் 15 எச்.பி. வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.5 லட்சம், 5-7.5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.75 லட்சம், 7.5- 10 குதிரை திறனுள்ள மின் மோட்டார் களுக்கு ரூ.3 லட்சம், 10-15 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சம் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

    விருப்பமுள்ள விவசாயிகள் உரிய தொகையை செலுத்தி விரைந்து மின் இணைப்பு பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் நகரப்பகுதியில் மின் இணைப்பு பெறுவது சவாலாக மாறியுள்ளது.
    • உள்ளாட்சி அமைப்புகளிடம் பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயமாகியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் பகிர்மானத்தில், பனியன் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் 2 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்தநிலையில் வளர்ந்து வரும் நகரப்பகுதியில் வீடு, கடைகள் மின் இணைப்பு கிடைக்காமல் தத்தளித்து வருகின்றன.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் நகரப்பகுதியில் மின் இணைப்பு பெறுவது சவாலாக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான கடைகளுக்கு இணைப்பு பெற முடியவில்லை. வீட்டு இணைப்பாக இருந்தால் மாதம் 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்துவோம். தற்காலிக இணைப்பில் 5000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. பணி நிறைவு சான்று கிடைக்காததால், மக்களுக்கு நஷ்டம். மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் அவர்களும் கண்டுகொள்வதில்லை. தமிழக அரசு தலையிட்டு வணிக வளாகம், வீடுகள் மின் இணைப்பு பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்றனர்.

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பினர், முதல்வருக்கு அனுப்பிய மனுவில், பணி நிறைவு சான்று கிடைக்காமல் திருப்பூரில் மட்டும் வீடுகள், கடைகள் என 800 கட்டடங்கள் மின் இணைப்பு பெற முடியாமல் உள்ளன.தற்காலிக மின் இணைப்பை பயன்படுத்துவதால், மின் கட்டணமாக 200 முதல் 400 ரூபாய்க்கு பதிலாக, 4,000 ரூபாய் வரை செலுத்தி வருகின்றனர். தமிழக அரசு இதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கூறுகையில்,மாநகராட்சி வார்டுகளில், கட்டுமான பணி நிறைவடைந்தது என விண்ணப்பித்தால் கள ஆய்வு நடத்தி பணி நிறைவு சான்று வழங்கப்படும். சான்று வழங்குவதில் எவ்வித குழப்பமோ, தயக்கமோ இல்லை. இதுவரை பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்என்றார்.

    மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின் பாபு கூறியதாவது:-

    கடந்த 2019 முதல் மின் இணைப்பு வழங்க, உள்ளாட்சி அமைப்புகளிடம் பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயமாகியுள்ளது. மூன்று குடியிருப்புகள் வரை கட்டப்படும் வீடுகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு உள்ளது. அதிலும் கட்டிடத்தின் மொத்த உயரம், 12 மீட்டருக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.மற்ற வீடுகள், கடைகள், தொழிற்சாலை கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் தேவை. உள்ளாட்சி அமைப்புகளிடம் பெறும் கட்டிட உரிமத்தில் உள்ளபடியே கட்டடம் அமைந்துள்ளது என்பதை உறுதி செய்யவே பணி நிறைவு சான்றிதழ் கேட்கிறோம். பணி நிறைவு சான்றிதழ் இல்லாவிட்டால் மின் இணைப்பு வழங்க இயலாது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SterliteProtest #NGT


    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது. இது இறுதி தீர்ப்பு இல்லை. இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல நிபந்தனைகள் உள்ளன. அதனை பற்றி தற்போது ஆலோசிக்க வேண்டியது இல்லை.

    மக்கள் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. உடனடியாக மின்இணைப்பு எதுவும் வழங்கப்படவில்லை. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்று தான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதிகாக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். #SterliteProtest #NGT

    ×