search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்கல் திட்டம்
    X

    தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்கல் திட்டம்

    • விவசாயிகளும் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு மின் இணைப்பு வழங்கும் திட்டம் (தட்கல்) இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
    • 7.5-10 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம், 10-15 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சம் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது

    விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பம் பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு மின் இணைப்பு வழங்கும் திட்டம் (தட்கல்) இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் அலுவலகத்தில் விருப்ப கடிதம் மற்றும் உரிய வருவாய் ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விருப்பம் மனு அளிப்பதற்கு முன்பே பெயர் மாற்றம், புல எண் மாற்றம் மற்றும் தேவைப்படின் தடையில்லா சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்தத் திட்டத்தில் மின் பளு மாற்றத்திற்கு அனுமதி இல்லை. மேலும் இந்தத் திட்டத்தில் 15 எச்.பி. வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.5 லட்சம், 5-7.5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.75 லட்சம், 7.5- 10 குதிரை திறனுள்ள மின் மோட்டார் களுக்கு ரூ.3 லட்சம், 10-15 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சம் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

    விருப்பமுள்ள விவசாயிகள் உரிய தொகையை செலுத்தி விரைந்து மின் இணைப்பு பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×