search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளறுபடி"

    • பணிகளில் குளறுபடி காரணமாக தரக்குறைவு இருப்பதாக புகாா்கள் எழுந்து உள்ளன.
    • புனரமைப்பு பணிகளின் தரமும் கேள்விக்குறியாக உள்ளன என தன்னாா்வலா்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    ஊட்டி,

    ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆங்கிலேயா் காலத்தில் கட்டபட்டது. இன்றளவும் பழமை மாறாமல் வலிமையாகவும், கம்பீரமாகவும் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலும் காட்சி தருகிறது.

    நூற்றாண்டுகளை கடந்தும் கட்டிடங்கள் உறுதியாக உள்ளன. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அந்த பணிகளில் குளறுபடி காரணமாக தரக்குறைவு இருப்பதாக புகாா்கள் எழுந்து உள்ளன.

    ஊட்டி கலெக்டர் அலுவலக முகப்பில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பெயா்ப் பலகை சிதலமடைந்த நிலையில் உள்ளது. அதில் 'ஆா்' எழுத்து பதித்த சில நாட்களிலேயே கீழே விழுந்து விட்டது. எனவே ஒட்டுமொத்த புனரமைப்பு பணிகளின் தரமும் கேள்விக்குறியாக உள்ளன என தன்னாா்வலா்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    • ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.
    • புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, செபஸ்தி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உறுப்பி னர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

    ஜெகதீஷ் (துணை தலைவர்):

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கோடை காலத்தில் மாணவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் மண்பானையில் குடிநீர் வைக்க வேண்டும்.

    ஞானசேகரன் (சிபிஎம்):

    நத்தப்பள்ளம் முதல் செம்பியவேளூர் வரை உள்ள பழுதடைந்த சாலையை செப்பனிட்டு புதிய சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீஷ், ரம்யா, முத்துலட்சுமி, தீபா ஆகிய 4 உறுப்பினர்களும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    மாசிலாமணி (தி.மு.க.):

    கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பிலாற்றங்கரையின் இருபுறமும் மண்சாலையாக உள்ளது.

    இதை தார்சா லையாக மாற்றி தர வேண்டும்.

    உதயகுமார் (தி.மு.க.):

    தமிழக அரசு குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு முன்பு ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.

    கஸ்தூரி குஞ்சையன் (தி.மு.க.):

    வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.

    தமிழரசி (தலைவர்):

    உறுப்பினர்களின் கோரிக்கை களை முன்னுரிமைகளின் அடிப்படையில் படிப்படி யாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • ராமநாதபுரத்தில் வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளது.
    • மனை ஒதுக்கீடு செய்வதற்கு குலுக்கல் நடந்தபோது வெளியூர் நபர்களின் விண்ணப்பங்கள் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் வீட்டுமனை திட் டப்பகுதியில் உள்ள 72 மனைகள் மொத்த கொள் முதல் செய்வதற்கு 2022 நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 14-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    1,453 சதுரடி கொண்ட ஒரு மனையின் விலை ரூ.16 லட்சத்து 69 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி உள்ள பகுதி என்பதால் மனை வாங்குவதற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3,093 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    நேற்று ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள தனியார் மகாலில் குலுக்கல் முறையில் மனை கள் ஒதுக்கீடு செய்யும் முகாம் மதுரை கோட்ட மேற்பார்வை பொறியாளர் மூர்த்தி தலைமையில், செயற்பொறியாளர் பாண்டி யராஜ், கண்காணிப்பாளர் நாகராஜன், கலெக்டர் சார்பில் பார்வையாளராக உதவி ஆணையர் குருசந்தி ரன் முன்னிலையில் நடந்தது.

    மனை ஒதுக்கீடு செய்வ தற்கு குலுக்கல் நடந்தபோது வெளியூர் நபர்களின் விண்ணப்பங்கள் உள்ளதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஒரே எண்ணில் 2 டோக்கன் இடம் பெற்றுள்ளதாக கூறி பொதுமக்கள் அதி காரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தொடர்ந்து கூச்ச லிட்டதால் குலுக்கல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் முன்னி லையில் வெளிப்படையாக குலுக்கல் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தா விட்டால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

    மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் என்று தேர்தல் வாக்குறுதி தந்த தி.மு.க. அந்த வாக் குறுதியை இன்னமும் நிறைவேற் றவில்லை. இது ஒரு புறம் இருக்க 60 நாட் களுக்கு சரியாக ரீடிங் எடுப்பதிலும் குளறு படி நடக்கிறது. பல இடங்களில் காலம் தள்ளி வந்து கணக்கெ டுக்கிறார்கள். அதன் காரணமாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் யூனிட் கூடி விடுகிறது.

    இதன் காரணமாக கட்டண விகிதமும் தாறு மாறாக எகிறுகிறது. ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தா விட்டால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டுமென விதிகள் உள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதில் மக் கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

    அதே வேளை நுகர்வோருக்கு மின்வாரியத்தால் ஏற்படுகிற பாதிப்புகளுக்கு எந்தவித நிவாரணமும் இல்லை. மொத்தத்தில் இந்த ஆட்சியில் மக்கள் எல்லா வகை யிலும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மதுரை மாணவி தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் யு.ஜி.சி. நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    மதுரை

    தமிழகம் முழுவதும் யு.ஜி.சி. நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக மதுரையில் இருந்து ஒரு மாணவி விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு காலை நேரத்தில் ஒரு கடிதம் வந்தது. அதில் அந்தப் மாணவிக்கு மதுரையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அவருக்கு மாலை நேரத்தில் நுழைவுச்சீட்டு வந்தது. அதில் உங்களுக்கு கன்னியாகுமரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது தொடர்பாக 

    • நுகா்வோா்களின் மாதாந்திர மின் கட்டணத்துடன் சோ்த்து செலுத்தும் விதமாக மின்சார விதி உள்ளது.
    • தற்காலிக மின்சார இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றம் செய்யப்படாமல் இருப்பதால், மின்சார கட்டணம் மிக அதிகமாக வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் குமாா் நகரில் உள்ள மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் செயற்பொறியாளா் சண்முகசுந்தரம் தலைமையில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள், மின்சார வாரிய அலுவலா்கள் பங்கேற்றனா்.

    இதில் திருப்பூா் அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பு பொதுச் செயலாளா் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    மின்சார இணைப்புகளுக்கு வழங்கியுள்ள மின் பழுவை விட கூடுதலாக பயன்படுத்தினால் அதற்கான கூடுதல் கட்டணத்தை மின்சார வாரிய இணைதளம் மூலமாக பதிவேற்றம் செய்து, நுகா்வோா்களின் மாதாந்திர மின் கட்டணத்துடன் சோ்த்து செலுத்தும் விதமாக மின்சார விதி உள்ளது.

    ஆனால், திருப்பூா் பகுதிகளில் உள்ள பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட இடங்களில் உள்ள இணைப்புகளில் கூடுதலாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக ஊழியா்களை நுகா்வோா்களை தொடா்பு கொண்டு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என அபராதம் செலுத்த வேண்டும் என மிரட்டுவதுடன், நுகா்வோா்களிடம் தவறான தகவல்களை தெரிவித்து அதிக பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது குறித்து தீா்வு காண வேண்டும்.

    திருப்பூா் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு தற்காலிக மின்சார இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றம் செய்யப்படாமல் இருப்பதால், மின்சார கட்டணம் மிக அதிகமாக வருகிறது. எனவே, இதில் உள்ள குளறுபடிகளை கலைந்து தற்காலிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றம் செய்ய விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக வீட்டு மின் இணைப்பாக மாற்றம் செய்ய சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது

    ×