search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் மீட்டர்"

    • வரி வசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.
    • தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர்

    இரணியல் :

    திங்கள்நகர் பேரூராட்சி மார்க்கெட் வரி வசூல் செய்வதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரி வசூல் மையம் மார்க்கெட் நுழைவு சாலையில் உள்ளது. அங்கு உயர்கோபுர மின் விளக்கு, மின் மீட்டர் பெட்டி உள்ளது. வரி வசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.

    நேற்று நள்ளிரவு இந்த மின் மீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு மீட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் ரோந்து வந்தார். அவர் மின் மீட்டர் தீயில் எரிவதை பார்த்து உடனே திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கும், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டருக்கும் தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தார். இன்ஸ்பெக்டர் பெருமாள், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜாண் வின்ஸ் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பரவும் தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மின் மீட்டர் தீப்பிடித்து எரிந்ததில் தக்க நேரத்தில் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி மேற்கொண்ட டி.எஸ்.பி. தங்கராமனை அப்பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

    திங்கள் நகர் பேரூராட்சி பகுதியில் மின் விநியோகம் நடைபெறும் மின்கம்பிகள் முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் மீட்டர்கள் மாயமானது
    • 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை டி.வி.எஸ்.நகர் மின்வாரிய அலுவ லகத்தில் பழைய மின் மீட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை திடீரென மாயமானது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் பதில் இல்லை.

    இதற்கிடையே டி.வி.எஸ்.நகர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து சிலர் தனியார் வாகனங்களில் பழைய மின் மீட்டர்களை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மதுரை சத்ய சாய்நகர், ரோஜா தெருவை சேர்ந்த என்.ஜி.மோகன் என்பவர், மதுரை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார்.

    இந்த புகார் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திராவின் கவனத்திற்கு வந்தது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது இந்த சம்பவத்தில் 4 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உதவி மின் பொறியாளர் ஆனந்தகுமார், மின் கணக்கீட்டு ஆய்வாளர் ஜவகர், மின் வணிக ஆய்வாளர் தாளமுத்து நேரு ஆகிய 3 பேருக்கான ஓராண்டு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பழைய மின்சார மீட்டர்கள் மாயமான விவகாரத்தில், அதிகாரி சுதந்திர பாண்டியனின் 3 மாத ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் உடனடியாக ரூ. 54 ஆயிரத்து 750 -ஐ அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தா விட்டால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

    மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் என்று தேர்தல் வாக்குறுதி தந்த தி.மு.க. அந்த வாக் குறுதியை இன்னமும் நிறைவேற் றவில்லை. இது ஒரு புறம் இருக்க 60 நாட் களுக்கு சரியாக ரீடிங் எடுப்பதிலும் குளறு படி நடக்கிறது. பல இடங்களில் காலம் தள்ளி வந்து கணக்கெ டுக்கிறார்கள். அதன் காரணமாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் யூனிட் கூடி விடுகிறது.

    இதன் காரணமாக கட்டண விகிதமும் தாறு மாறாக எகிறுகிறது. ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தா விட்டால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டுமென விதிகள் உள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதில் மக் கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

    அதே வேளை நுகர்வோருக்கு மின்வாரியத்தால் ஏற்படுகிற பாதிப்புகளுக்கு எந்தவித நிவாரணமும் இல்லை. மொத்தத்தில் இந்த ஆட்சியில் மக்கள் எல்லா வகை யிலும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
    • வன காவலர் பிரவீன் சுமார் 1½ அடி நீளம் கொண்ட விஷ பாம்பினை லாவகமாக பிடித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சாதிக். இவரது வீட்டின் மின்மீட்டரில் பாம்பு ஒன்று புகுந்ததை பார்த்துள்ளார். உடனே இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் வேட்டை தடுப்பு வன காவலர் பிரவீன் அங்கு விரைந்து வந்தார்.அவர் மின்வாரிய ஊழியர் சதீஷ்குமார் துணையுடன் மின்மீட்டரில் மறைந்திருந்த சுமார் 1½ அடி நீளம் கொண்ட விஷ பாம்பினை லாவகமாக பிடித்தார்.

    பின்னர் அவர் அந்த விஷபாம்பை வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு போய் விட்டார்.

    ×