search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திங்கள்நகரில் மின் மீட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
    X

    திங்கள்நகரில் மின் மீட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    • வரி வசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.
    • தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர்

    இரணியல் :

    திங்கள்நகர் பேரூராட்சி மார்க்கெட் வரி வசூல் செய்வதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரி வசூல் மையம் மார்க்கெட் நுழைவு சாலையில் உள்ளது. அங்கு உயர்கோபுர மின் விளக்கு, மின் மீட்டர் பெட்டி உள்ளது. வரி வசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.

    நேற்று நள்ளிரவு இந்த மின் மீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு மீட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் ரோந்து வந்தார். அவர் மின் மீட்டர் தீயில் எரிவதை பார்த்து உடனே திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கும், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டருக்கும் தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தார். இன்ஸ்பெக்டர் பெருமாள், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜாண் வின்ஸ் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பரவும் தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மின் மீட்டர் தீப்பிடித்து எரிந்ததில் தக்க நேரத்தில் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி மேற்கொண்ட டி.எஸ்.பி. தங்கராமனை அப்பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

    திங்கள் நகர் பேரூராட்சி பகுதியில் மின் விநியோகம் நடைபெறும் மின்கம்பிகள் முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×