search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் மீட்டர்கள் மாயம்; 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை
    X

    மின் மீட்டர்கள் மாயம்; 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை

    • மின் மீட்டர்கள் மாயமானது
    • 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை டி.வி.எஸ்.நகர் மின்வாரிய அலுவ லகத்தில் பழைய மின் மீட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை திடீரென மாயமானது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் பதில் இல்லை.

    இதற்கிடையே டி.வி.எஸ்.நகர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து சிலர் தனியார் வாகனங்களில் பழைய மின் மீட்டர்களை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மதுரை சத்ய சாய்நகர், ரோஜா தெருவை சேர்ந்த என்.ஜி.மோகன் என்பவர், மதுரை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார்.

    இந்த புகார் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திராவின் கவனத்திற்கு வந்தது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது இந்த சம்பவத்தில் 4 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உதவி மின் பொறியாளர் ஆனந்தகுமார், மின் கணக்கீட்டு ஆய்வாளர் ஜவகர், மின் வணிக ஆய்வாளர் தாளமுத்து நேரு ஆகிய 3 பேருக்கான ஓராண்டு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பழைய மின்சார மீட்டர்கள் மாயமான விவகாரத்தில், அதிகாரி சுதந்திர பாண்டியனின் 3 மாத ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் உடனடியாக ரூ. 54 ஆயிரத்து 750 -ஐ அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×