என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்வு மையம்"
- நந்திகிராமில் முழங்கால் அளவு வெள்ளத்தில் சிக்கிய பி-டெக் மாணவர்களைக் காவல் துறையினர் மீட்டு உதவியுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, நந்திகிராமுக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின.
இந்நிலையில், என்டிஆர் மாவட்டத்தின் நந்திகிராமில் முழங்கால் அளவு வெள்ளத்தில் சிக்கிய பி-டெக் மாணவர்களைக் காவல் துறையினர் மீட்டு உதவியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பி-டெக் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாது என்ற அச்சத்தில் மாணவர்கள் நந்திகம போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு உதவியாக, நிரம்பி வழியும் நெடுஞ்சாலையை கடந்து, மாணவர்களை தேர்வு மையத்தில் இறக்கிவிட, போலீசார் கிரேன் ஏற்பாடு செய்தனர்.
இதேபோல் தேர்வு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பவும் போலீசார் உதவினர். இந்த மீட்பு குறித்த காணொளியை ஆந்திர காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த கானொலியை காணும் பலர், ஆந்திரா காவல்துறையை பாராட்டி வருகின்றனர்.
- மதுரை மாணவி தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் யு.ஜி.சி. நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மதுரை
தமிழகம் முழுவதும் யு.ஜி.சி. நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக மதுரையில் இருந்து ஒரு மாணவி விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு காலை நேரத்தில் ஒரு கடிதம் வந்தது. அதில் அந்தப் மாணவிக்கு மதுரையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அவருக்கு மாலை நேரத்தில் நுழைவுச்சீட்டு வந்தது. அதில் உங்களுக்கு கன்னியாகுமரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது தொடர்பாக
- விருதுநகர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4ல் அடங்கியுள்ள பதவிக்கான போட்டித்தேர்வு (தேர்வுநாள்: 24.07.2022 முற்பகல்) எழுதும் தேர்வர்களின் அனுமதிச்சீட்டில் ராஜபாளையம் வட்டம் ஹால் எண்:29 சத்யாவித்யாலயா, (சி,பி.எஸ்.இ.) பிள்ளையார்குளம், கே.ஆர் நகர் அஞ்சல் (பெருமாள் தேவன்பட்டி கோவில் அருகில்) - 626137 என உள்ள தேர்வர்கள் ஹால் எண்:29 சத்யாவித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ராஜீவ் காந்தி நகர், கே.ஆர் நகர் அஞ்சல், ராஜபாளையம் வட்டம்- 626108 (வேட்டைப்பெருமாள் திருக்கோவில் அருகில்) என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் திருச்சுழி வட்டம் ஹால் எண் - 005 மருது பாண்டியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (எம்.டி.ஜி.எச்.எஸ்.எஸ். நரிக்குடி) மதுரைரோடு திருச்சுழி வட்டம் என உள்ள தேர்வர்கள் ஹால் எண்:005 மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, நரிக்குடி, மதுரை ரோடு, திருச்சுழி வட்டம் என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்