என் மலர்
இந்தியா

தேர்வு மையத்தில் மாணவர்களின் பூணூலை கழட்ட கூறிய அதிகாரி மீது வழக்குப்பதிவு
- நாங்கள் அனைத்து மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம்.
- நாங்கள் இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
கர்நாடக மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் கர்நாடக பொது நுழைவுத் தேர்வில் (CET) பங்கேற்கும் மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்றகோரிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பூணூலை அகற்றகோரிய தேர்வு நடத்தும் அதிகாரி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய கர்நாடக உயர்கல்வி அமைச்சர் சுதாகர், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 2 தேர்வு மையத்திலிருந்தும் இதுபோன்ற புகார்கள் வந்தது. இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான மையங்களில் தேர்வு சுமூகமாக நடைபெற்றது. நாங்கள் அனைத்து மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். நாங்கள் இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதற்கு தக்க நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.
Next Story






