search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Examination Centre"

    • நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 7 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
    • தேர்வையொட்டி மொத்தம் 586 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக பாளை ஜான்ஸ் கல்லூரி, ஜான்ஸ் பள்ளி, சேவியர் பள்ளி உள்பட 7 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நேற்றே முடிக்கப்பட்ட நிலையில் இன்று காலை எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் இருந்து இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மெயின் தேர்வும், மதியம் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தேர்வும் நடைபெற்றது. தேர்வர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.இதனையொட்டி மாவட்டத்தில் உள்ள 7 மையங்க ளிலும் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்வையொட்டி மொத்தம் 586 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளனர். கடுமையான பரிசோதனை களுக்கு பின்னரே தேர்வறை க்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி மஞ்சம்மாள் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 இடங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு மையங்களில் இன்று காலை முதலே தேர்வர்கள் குவிந்தனர். ஆண்கள், பெண்கள் என மொத்தம் 4,311 பேருக்கு தேர்வெழுத அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது.

    தேர்வுக்காக வந்திருந்த தேர்வர்கள் அழைப்பு கடிதம் இருந்தால் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தேர்வறைக்குள் செல்லும்போது புகைப்ப ட்டத்துடன் கூடிய அடையாள அட்டை, பரீட்சை அட்டை, ஊதா அல்லது கருமை நிற பேனாவை தவிர வேறு எந்த பொருளையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வுக்காக 5,144 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நடைபெற்றது.

    இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. முன்னதாக நேற்று தேர்வு மையங்களை தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ள நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    தேர்வு அறைக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளுடூத் உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதுவும் எடுத்துச்செல்ல தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    • தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா மற்றும் காவல்துறை பாதுகாப்பு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.
    • அந்தியூர் பகுதியில் 6139 பேர் 17 சென்டர்களில் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வு நடைபெறுகிறது.

    இதையடுத்து தேர்வு எழுதும் மையங்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டு வருகிறார்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை பார்வையிட்டு பள்ளி கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளதா அடிப்படை வசதி இருக்கின்றதா மின்விளக்குகள் சரிவர வேலை செய்கின்றதா ? என்று ஆய்வு செய்தார்.

    மேலும் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா மற்றும் காவல்துறை பாதுகாப்பு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், அந்தியூர் டவுன் கிராம நிர்வாக அலுவலர் யசோதா மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி வந்திருந்தனர்.

    அந்தியூர் பகுதியில் 6139 பேர் 17 சென்டர்களில் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×