வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை கிரேன் மூலம் மீட்டு தேர்வு மையத்தை அடைய வைத்த ஆந்திரா போலீஸ்

நந்திகிராமில் முழங்கால் அளவு வெள்ளத்தில் சிக்கிய பி-டெக் மாணவர்களைக் காவல் துறையினர் மீட்டு உதவியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை கிரேன் மூலம் மீட்டு தேர்வு மையத்தை அடைய வைத்த ஆந்திரா போலீஸ்
Published on

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, நந்திகிராமுக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின.

இந்நிலையில், என்டிஆர் மாவட்டத்தின் நந்திகிராமில் முழங்கால் அளவு வெள்ளத்தில் சிக்கிய பி-டெக் மாணவர்களைக் காவல் துறையினர் மீட்டு உதவியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பி-டெக் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாது என்ற அச்சத்தில் மாணவர்கள் நந்திகம போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, அவர்களுக்கு உதவியாக, நிரம்பி வழியும் நெடுஞ்சாலையை கடந்து, மாணவர்களை தேர்வு மையத்தில் இறக்கிவிட, போலீசார் கிரேன் ஏற்பாடு செய்தனர்.

இதேபோல் தேர்வு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பவும் போலீசார் உதவினர். இந்த மீட்பு குறித்த காணொளியை ஆந்திர காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த கானொலியை காணும் பலர், ஆந்திரா காவல்துறையை பாராட்டி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com