search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி
    X

    வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி

    • ராமநாதபுரத்தில் வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளது.
    • மனை ஒதுக்கீடு செய்வதற்கு குலுக்கல் நடந்தபோது வெளியூர் நபர்களின் விண்ணப்பங்கள் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் வீட்டுமனை திட் டப்பகுதியில் உள்ள 72 மனைகள் மொத்த கொள் முதல் செய்வதற்கு 2022 நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 14-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    1,453 சதுரடி கொண்ட ஒரு மனையின் விலை ரூ.16 லட்சத்து 69 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி உள்ள பகுதி என்பதால் மனை வாங்குவதற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3,093 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    நேற்று ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள தனியார் மகாலில் குலுக்கல் முறையில் மனை கள் ஒதுக்கீடு செய்யும் முகாம் மதுரை கோட்ட மேற்பார்வை பொறியாளர் மூர்த்தி தலைமையில், செயற்பொறியாளர் பாண்டி யராஜ், கண்காணிப்பாளர் நாகராஜன், கலெக்டர் சார்பில் பார்வையாளராக உதவி ஆணையர் குருசந்தி ரன் முன்னிலையில் நடந்தது.

    மனை ஒதுக்கீடு செய்வ தற்கு குலுக்கல் நடந்தபோது வெளியூர் நபர்களின் விண்ணப்பங்கள் உள்ளதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஒரே எண்ணில் 2 டோக்கன் இடம் பெற்றுள்ளதாக கூறி பொதுமக்கள் அதி காரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தொடர்ந்து கூச்ச லிட்டதால் குலுக்கல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் முன்னி லையில் வெளிப்படையாக குலுக்கல் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×