search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Leader Karunanidhi"

    அற்பமான காரணங்களைக் கூறி மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க அரசு மறுப்பதாக திமுக தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே செய்ய நிலம் ஒதுக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். 

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இரவோடு இரவாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர், வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. 

    மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவிப்பு கொள்கை முடிவு என்பதால் அதனை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. 



    இதற்கிடையே, கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் இருந்த சட்ட சிக்கல்களை போக்கும் வகையில், ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான தொடரப்பட்ட 5 வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

    இதையடுத்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  அத்துடன் திமுக மனு மீதான விசாரணையை தொடங்கினர். அப்போது இந்த வழக்கில் இன்றை தீர்ப்பு வழங்கப்போகிறீர்களா? என நீதிபதிகளிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கேட்டார். நேற்றைய மனு விவரங்கள் மற்றும் அரசு பதில் மனு விவரங்களை பதிவு செய்த பிறகு விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? என்று நீதிபதிகள் கேட்க, எந்த அவசரமும் இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். 

    இதையடுத்து கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்க வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். அப்போது தலைமை செயலாளரின் முடிவை பத்திரிகை செய்தியா, உத்தரவா? என்று பார்க்க வேண்டியதில்லை என்று கூறினார். ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் என்பது வேறு திராவிட சித்தாந்தம் என்பது வேறு எனவும் அவர் கூறினார். 

    ‘எனது வாழ்வும் ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார். 1988ம் ஆண்டே இடக்கம் செய்வதற்காக பகுதியாக அண்ணா சமாதி பகுதி அறிவிக்கப்பட்டது. நினைவிடம் அமைப்பதற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டதால் சட்ட சிக்கல்கள் இல்லை. அற்பமான, சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் அது பாரபட்சம் காட்டுவதாகும். மக்கள் மனம் புண்படும்.’ என்றும் திமுக வாதிட்டது.

    மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ராஜாஜி அரங்கத்தில் திரண்டுள்ள தொண்டர்களும், கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். #Karunanidhi #DMK #RajajiHall #RIPKarunanidhi #MarinaMemorial #Marina4Karunanidhi

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய சிவகார்த்திகேயன் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்துவதே சரி என்று கூறினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இன்று காலை ராஜாஜி அரங்கத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

    முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா, தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா, ஏன் உலக அரசியலில் ஒப்பற்ற தலைவர். அவருக்கு இந்த நேரத்தில் புகழஞ்சலி செலுத்துவது தான் சரியானது. அவருடைய சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை, இனியும் யாரும் செய்யப் போவதில்லை. தமிழ், கலை, இலக்கியம், அரசியல் இவையெல்லாம் இருக்கும் வரை ஐயாவுடைய பெயரும், புகழும் எப்பொழுதும் ஒளிவீசிக் கொண்டே தான் இருக்கும். 95 ஆண்டுகளாக ஓயாமல் உழைத்த சூரியன், இன்று ஓய்வெடுக்கச் சென்றுள்ளது. அவரது உடல் மட்டுமே ஓய்வெடுக்கிறது. அவரது கதிர்வீச்சுகள் இனிவரும் அரசியலும், தமிழும் நிறையவே பேசும் என நினைக்கிறேன். ஐயாவுக்கு எனது புகழஞ்சலி. என்று குறிப்பிட்டார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Sivakarthikeyan

    சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ:

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து அவரது குடும்பத்துடன்நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Vairamuthu
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கிமற்றும் அவர்களது குடும்பத்தினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar  #Vairamuthu

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Prabhu
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் பிரபு, நடிகர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவர்களது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Prabhu

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித் மற்றும் ஷாலினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித், நடிகை ஷாலினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Suriya #Sivakumar

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகிய நிலையில், கருணாநிதி ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து டிரெண்டாகி வருகிறது. #Karunanidhi
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்த மருத்துவமனை இருக்கும் ராயப்பேட்டை பகுதிக்கு வரும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் இரவு பகலாக திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 



    இதற்கிடையே பிராதன சமூக வலைதளமான ட்விட்டரிலும் கருணாநிதி (#Karunanidhi) ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் காவேரி ஹாஸ்பிட்டல் (#KauveryHospital), கனிமொழி (#Kanimozhi) உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. #Karunanidhi #KauveryHospital

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க, நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KarunanidhiHealth
    சென்னை:

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. டார்ஜிலிங் மலைப் பகுதியில் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். 

    அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மீண்டும் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினிகாந்தும், கதாநாயகியாக வரும் சிம்ரனும் நடிக்கும் காட்சிகளையும் படமாக்கினார்கள். சண்டை காட்சிகளையும் எடுத்தனர்.

    டேராடூனில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்று அல்லது நாளை ரஜினிகாந்த் சென்னை திரும்பி காவேரி மருத்துவமனைக்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 



    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ரஜினி ஆலோசிக்க இருக்கிறார். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். #Karunanidhi #KarunanidhiHealth #KauveryHospital #Rajinikanth

    திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள மகன் தமிழரசு வீட்டுக்கு சென்றார். #karunanidhi #Tamilarasu
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு.கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று இரவு காரில் புறப்பட்டார். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள தனது மகன் தமிழரசு வீட்டுக்கு சென்றார். #karunanidhi #Tamilarasu
    ×