search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabled persons"

    • இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதற்கட்டமாக ரூ.15.86 லட்சம் மதிப்பீட்டில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கைபேசி என மொத்தம் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
    • சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுமைக்கும், உடல் இயக்க குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மற்றும் மன வளாச்சி குன்றியோர்களுக்கு கல்விக்காக, பணிபுரிவ தற்காக, பயிற்சிபுரிவதற்காக மற்றும் பயனுள்ள கார ணத்திற்காக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவ னத்திற்கு சென்று வர இலவச பஸ் பயண சலுகை பெற்று பயனடையும் வித மாக சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

    பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 23, 24-ந்தேதியும் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

    ஏற்கனவே இலவச பயண அட்டை பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, பழைய பஸ் பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் மேற்கண்ட தேதிகளில் மதுரை எல்லீஸ் நகர், அன்சாரி நகர் 7-வது தெருவில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ. மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளியில் நடைபெறவுள்ள இலவச பஸ் பயண சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
    • அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் மேனகா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
    • 1 முதல் 18 வயதுக்குள்பட்டோர் 209 பேர் பங்கேற்று பயன்பெற்றனா்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தாா்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மருத்துவா்கள் சீனிவாசன் (மனநலம்),சுரேஷ் (எலும்பு முறிவு), ரமேஷ் பாபு (காது, மூக்கு, தொண்டை), பாஸ்கரன் (கண்) ஆகியோா் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்கினா்.

    மேலும் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல், புதுப்பித்தல், உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்கு பதிவு செய்தல், ரெயில் மற்றும் பஸ் பயண கட்டணச்சலுகை பெறுதல், மருத்துவரின் ஆலோசனை ஆகிய சேவைகள் வழங்கப் பட்டன.

    முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து 1 முதல் 18 வயதுக்குள்பட்டோர் 209 பேர் பங்கேற்று பயன்பெற்றனா். இதில் தேசிய அடையாள அட்டை 60 பேருக்கும், ரெயில் மற்றும் பஸ் பயண கட்டணச் சலுகை 180 பேருக்கும், உதவி உபகரணங்கள் 34 பேருக்கும் வழங்கப்பட்டன.

    • 4,348 மாற்றுத்திறனாளிகளுக்கு நீலநிற வேலை அட்டையை கலெக்டர் வழங்கினார்.
    • ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட கலெக் டர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ள நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4.348 மாற்றுத் திறனாளிகளுக்கு நீலநிற வேலை அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளது குறைகள் தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்க்கிழமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்சி முகமை முன்னிலையில் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 10 வரை ராமநா தபுரம் மாவட்டத்தி லுள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சார்ந்த ஊராட்சி மன்ற அலுவல கத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற அட்டையினை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    இந்த துறையின் அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் முன்னோடி முயற்சியாகும்.

    இந்த திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய தேதி வரை 4 ஆயிரத்து 796 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை முன்னதாக வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் மாதந்தோறும் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்கிழமை திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையிலும் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று (1-ந்தேதி) தொடங்கி 10-ந்தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 10-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறையின் அரசாணை (நிலை) எண் 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள்: 25.6.2012-ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் முன்னோடி முயற்சியாகும்.

    இது குறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்ட வேலை அட்டைகோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நாளது வரை 5 ஆயிரத்து 170 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் வகையில் பிரதி மாதம் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்கிழமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னிலையிலும் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று (1-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன்பெறலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் கடந்த ஜனவரி 27ந் தேதி தொடங்கி நடைபெற்றது.
    • ஒன்றிய அளவிலான முகாம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் ஒன்றிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் கடந்த ஜனவரி 27ந்தேதி ெதாடங்கி நடைபெற்றது.

    திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி, மடத்துக்குளம், காங்கயம், குண்டடம், ஊத்துக்குளி, குடிமங்கலம், பொங்கலூர்,வெள்ளகோவில், மூலனூர் ஒன்றியங்களில் முகாம் நடத்தப்பட்டது.அந்தந்த ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று, அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், வங்கி கடன் கேட்டு விண்ணப்பங்கள் அளித்தனர்.

    கண், எலும்பு முறிவு, காது - மூக்கு - தொண்டை, நரம்பியல், மனநல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டைக்கு பரிந்துரைத்தனர். ஒன்றிய அளவிலான முகாம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்கும்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 27 முதல் இம்மாதம் கடந்த 14ந் தேதி வரை முகாம் நடத்தப்பட்டுள்ளது.

    முகாமில் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 349 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்காக 430 விண்ணப்பங்கள், 21வகையான உதவி உபகரணங்கள் கேட்டு 112 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொழில் துவங்குவதற்கான வங்கி கடன்கள் கேட்டு 32 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.

    • மாற்றுத்திறனாளிகள் ரூ.5 கோடி வரை மானியத்துடன் சுயதொழில் கடனுதவி பெறலாம்.
    • திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லாத மாற்றுதிறனாளிகள் மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் பெற்று சுயதொழில் தொடங்கலாம்.

    வேலையில்லாத திண்டாட்டத்தினை போக்கு வதற்காக தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் சுயதொழில் கடனுதவி திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி தொழில் முனைவோர்களாக திகழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை நிறைவேற்றிட தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுதிறனாளிகள், 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.75லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையினை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.

    பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைத்தொழில் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை.

    மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் மற்றும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையில் திட்ட மதிப்பீடாக கொண்டு வரலாம்.

    இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 விழுக்காடு மானியமாக ரூ.17.50 லட்சம் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மானியமாக வழங்கப்படு கிறது. திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்கு தகுதியான கடனுதவி திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மானியங்களை பெற்று பயனடையுமாறும் மற்றும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 8925534036 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.
    • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறு வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், மாற்றுத்திறனா ளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் கீழ்காணும் விவரப்படி நடைபெற உள்ளன.

    வருகிற 4-ந்தேதி போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 5-ந்தேதி பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 11-ந்தேதி நயினர்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 13-ந்தேதிமுதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 18-ந்தேதி கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 19-ந்தேதி கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 25-ந்தேதி ஆர்.எஸ்.மங்களம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

    பிப்ரவரி 7-ந்தேதி திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 7-ந்தேதி திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 14-ந்தேதி மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 16-ந்தேதி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.

    இதில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு, ஆதார் அட்டை பதிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்து வக்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வட்டாரந்தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திற னாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், மாற்றுத்தி றனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அனைத்து வட்டார அளவிலும் நடைபெற உள்ளது.

    முதலில் 3.1.2023 அன்று திருப்புவனம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 6.1.2023 அன்று மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 10.1.2023 அன்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 12.1.2023 அன்று காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 13.1.2023 அன்று கண்ணங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 20.1.2023 அன்று தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 24.1.2023 அன்று சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 27.1.2023 அன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 31.1.2023 அன்று எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், முகாம்கள் நடக்கிறது.

    1.2.2023 அன்று சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 3.2.2023 அன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 8.2.2023 அன்று சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்களில் 8 மார்பளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜாஜி பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    • இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித கட்டணமுமின்றி அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 6 மாதமாக மாற்றுத்திறனாளிகள் கண்டிப்பாக நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    25 ஆண்டுகளுக்கு மேலாக கட்டணமின்றி சென்று வந்ததைபோன்று மீண்டும் மாற்றுத்திறனாளிகள் பூங்காவிற்கு இலவசமாக செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ×