search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Camps"

    • சென்னையில் ஒரு மண்டலத்துக்கு 3 என்ற வீதத்தில் 45 மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
    • பெரும்பாலான முகாம்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் மழைக்கால நோய்களும் பரவி வருகின்றன. இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது.

    சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் இந்த மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள், வைரஸ் காய்ச்சல், சேற்றுப் புண், தொண்டை வலி ஆகியவை வருவது வழக்கம்.

    தற்போது இந்த நோய் பரவல்கள் உள்ளது. வருமுன் காக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க பொது சுகாதாரத் துறை நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துகிறது.

    இன்று முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை 10 ஞாயிற்றுக் கிழமைகளில் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    சென்னையில் ஒரு மண்டலத்துக்கு 3 என்ற வீதத்தில் 45 மருத்துவ முகாம்கள் நடக்கிறது.

    மழைக்கால நோய்களுக்கு தேவையான அனைத்து விதமான மருந்துகளும் முகாம்களில் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

    காலை 9 மணிக்கு முகாம் தொடங்கியது. மாலை வரை நடக்கிறது. பெரும்பாலான முகாம்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 38 மாவட்டங்களிலும் நடைபாதைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
    • ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் நடந்து செல்பவர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை:

    நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகரில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் நடைபாதையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் டெங்கு பரவல் உள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

    டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களை கட்டுப்படுத்துவதற்காக வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் டிசம்பர் 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பத்து வாரங்கள் வாரம் தோறும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் வீதம் பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். இந்த முகாம்களில் பொதுமக்கள் இலவசமாக பரிசோதனை செய்வது முதல் மருந்து மாத்திரைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

    நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் என்பது ஜப்பான் நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கு அரசு சார்பில் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கான நடைபாதை சிறப்பாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்த்தேன்.

    அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவர் அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதற்கு உத்தரவிட்டார்.

    அதன்படி 38 மாவட்டங்களிலும் எட்டு கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நடைபாதைகள் குண்டு குழிகள் இல்லாமல் ஏற்ற இறக்கங்களும் சமம் செய்யப்பட்டு நடப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் நடந்து செல்பவர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கைகள் அருகில் அது அமர்வதற்கான இடம் என்பதை குறிக்கும் வகையில் அழகிய சிலை ஒன்றும் அமைக்கப்படும்.

    நடைபாதையில் இரு பக்கமும் பசுமையான மரங்கள் இடம்பெறுகிறது. நடந்து செல்பவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளையும் அழைத்து செல்லலாம் . அதை நினைவுபடுத்தும் வகையில் செல்ல பிராணியுடன் நடந்து செல்வது போன்ற காட்சியும் இடம்பெறும்.

    ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திலும் கிலோமீட்டரை குறிக்கும் அறிவிப்பு பலகை மற்றும் நடந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெறுகிறது. எட்டு கிலோமீட்டர் தூரம் என்று அமைப்பதற்கு காரணம் எட்டு கிலோமீட்டர் தினமும் நடந்தால் 10 ஆயிரம் அடிகள் நடப்பதாகும். இது உடலுக்கு சிறந்த பயிற்சியை தரும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கும்.

    38 மாவட்டங்களிலும் இந்த நடைபாதைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள எட்டு கிலோமீட்டர் நடை பாதையில் சிறிது தூரம் நடந்து சென்று கடற்கரையில் அமைக்கப்படும் மேடையில் இருந்தபடி ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நடைபாதைகளையும் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மற்றும் பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.

    பெசன்ட் நகரில் நடிகர், நடிகைகள், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். பெசன்ட் நகரில் நடந்து செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்தப் பாதையில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
    • அதனை தடுக்க கொசு ஒழிப்பு உள்பட பல்வேறு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.

    அதனை தடுக்க கொசு ஒழிப்பு உள்பட பல்வேறு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். மேலும் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தி உள்ளது.

    தனி வார்டுகள்

    இது ேபால கொசு உற்பத்திக்கு வித்திடும் வகையில் தண்ணீரை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.மேலும்டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் 610 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இது வரை 4 ஆயிரத்து 454 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் உள்பட மர்ம காய்ச்சல்களை கட்டுப்படுத்தும வகையில், அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடவும் , நாளை முதல் தமிழகம் முழுவதும் 1000-த்திற்கும் மேற்பட்ட காயச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

    75 முகாம்கள்

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் சுகாதாரத்துறை சார்பில் 75 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களை பள்ளிகூடங்கள் மற்றும் கிராமங்களில் அதிக அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை களை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும் காய்ச்சல், இருமல், சளி தொல்லை உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

    பொதுவாக கொசுக்கள் தண்ணீரில் அதிக அளவில் உற்பத்தியாவதால் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கா தவாறு பார்த்து கொள்ள வேண்டும், வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், குளிர் சாதன பெட்டியின் பின் பகுதிகள், ஆட்டு உரல், உரல் மற்றும் பாத்தி ரங்களில் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்
    • சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டை கிராமத் தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்ட சத்து பெட்டகங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 முகாம் களை நடத்திட உத்தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மொத்தம் 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 2-வது முகாம் நடந்துள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு நோய்களுக்கான தன்மையை கண்டறிந்து அதுக்கான உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உடல்நலம் சார்ந்த பரிசோதனைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதிவாணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், சன் சீமான் சுப்பு, ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஷ்வரி காளிதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, ஏரியூர் மருத்துவர் பிரேம்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.
    • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறு வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், மாற்றுத்திறனா ளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் கீழ்காணும் விவரப்படி நடைபெற உள்ளன.

    வருகிற 4-ந்தேதி போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 5-ந்தேதி பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 11-ந்தேதி நயினர்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 13-ந்தேதிமுதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 18-ந்தேதி கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 19-ந்தேதி கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 25-ந்தேதி ஆர்.எஸ்.மங்களம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

    பிப்ரவரி 7-ந்தேதி திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 7-ந்தேதி திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 14-ந்தேதி மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 16-ந்தேதி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.

    இதில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு, ஆதார் அட்டை பதிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்து வக்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் அதிகம் கண்டறிய ப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் இன்று சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி வட்டார அளவில் 4 கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்று முகாம் நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகளவில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது.

    இதனை தடுக்க சுகாதார துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் அதிகம் கண்டறிய ப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் இன்று சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வட்டார அளவில் 4 கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்று முகாம் நடத்தி வருகின்றனர்.

    இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல், உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சலின் தன்மை பொறுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சாதாரண காய்ச்சல் என்றால் மருந்து மாத்திரை கொடுக்கப்படும். தொடர் காய்ச்சல் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

    அப்போது அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு என்ன வகையான காய்ச்சல் என கண்டறியப்படும். இதேபோல் பள்ளிகளுக்கு என்று தனியாக மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் மாணவ ர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா? என்று சோதனை செய்வார்கள்.

    இவ்வறாக ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 196 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். 

    ×