search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பத்தாயிரம் காய்ச்சல் முகாம்கள்- அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
    X

    பத்தாயிரம் காய்ச்சல் முகாம்கள்- அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

    • சென்னையில் ஒரு மண்டலத்துக்கு 3 என்ற வீதத்தில் 45 மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
    • பெரும்பாலான முகாம்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் மழைக்கால நோய்களும் பரவி வருகின்றன. இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது.

    சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் இந்த மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள், வைரஸ் காய்ச்சல், சேற்றுப் புண், தொண்டை வலி ஆகியவை வருவது வழக்கம்.

    தற்போது இந்த நோய் பரவல்கள் உள்ளது. வருமுன் காக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க பொது சுகாதாரத் துறை நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துகிறது.

    இன்று முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை 10 ஞாயிற்றுக் கிழமைகளில் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    சென்னையில் ஒரு மண்டலத்துக்கு 3 என்ற வீதத்தில் 45 மருத்துவ முகாம்கள் நடக்கிறது.

    மழைக்கால நோய்களுக்கு தேவையான அனைத்து விதமான மருந்துகளும் முகாம்களில் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

    காலை 9 மணிக்கு முகாம் தொடங்கியது. மாலை வரை நடக்கிறது. பெரும்பாலான முகாம்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×