என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வயிற்று போக்கு, காய்ச்சல் பாதிப்பை தடுக்க சென்னையில் 121 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள்
    X

    வயிற்று போக்கு, காய்ச்சல் பாதிப்பை தடுக்க சென்னையில் 121 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள்

    • மழைக்கால காய்ச்சல் முகாம்கள் கடந்த 17-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
    • பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலும் தற்போது அதிகரித்துள்ளது.

    மழையினால் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

    மழைக்கால காய்ச்சல் முகாம்கள் கடந்த 17-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரையில் 627 நிலையான மருத்துவ முகாம்களும் 217 நடமாடும் மருத்துவ முகாம்களும் என மொத்தம் 844 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 36 ஆயிரத்து 353 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    இன்று திருவொற்றியூர், மணலி, தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் 116 சிறப்பு முகாம்கள் நடந்தன. தற்போது வாந்தி, வயிற்றுப் போக்கு, தொண்டை வலி, சளி, இருமல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதால் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் நடக்கின்றன. பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

    இன்று நடக்கும் முகாம்களுடன் சேர்த்து 40 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு முகாமில் ஒரு மருத்துவர், நர்சு மற்றும் உதவியாளர் வீதம் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×