search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் நாளை முதல்காய்ச்சல் பரவலை தடுக்க75 சிறப்பு மருத்துவ  முகாம்கள்
    X

    சேலம் மாவட்டத்தில் நாளை முதல்காய்ச்சல் பரவலை தடுக்க75 சிறப்பு மருத்துவ முகாம்கள்

    • வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
    • அதனை தடுக்க கொசு ஒழிப்பு உள்பட பல்வேறு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.

    அதனை தடுக்க கொசு ஒழிப்பு உள்பட பல்வேறு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். மேலும் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தி உள்ளது.

    தனி வார்டுகள்

    இது ேபால கொசு உற்பத்திக்கு வித்திடும் வகையில் தண்ணீரை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.மேலும்டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் 610 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இது வரை 4 ஆயிரத்து 454 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் உள்பட மர்ம காய்ச்சல்களை கட்டுப்படுத்தும வகையில், அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடவும் , நாளை முதல் தமிழகம் முழுவதும் 1000-த்திற்கும் மேற்பட்ட காயச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

    75 முகாம்கள்

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் சுகாதாரத்துறை சார்பில் 75 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களை பள்ளிகூடங்கள் மற்றும் கிராமங்களில் அதிக அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை களை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும் காய்ச்சல், இருமல், சளி தொல்லை உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

    பொதுவாக கொசுக்கள் தண்ணீரில் அதிக அளவில் உற்பத்தியாவதால் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கா தவாறு பார்த்து கொள்ள வேண்டும், வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், குளிர் சாதன பெட்டியின் பின் பகுதிகள், ஆட்டு உரல், உரல் மற்றும் பாத்தி ரங்களில் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×