search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டணம் வசூல்"

    • காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
    • தியாகராயா சாலையில் ஒருமணி நேரத்துக்கு மோட்டார் சைக்கிள் நிறுத்த ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் வாகனங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து நெரிசல் பெருகி வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    மேலும் வணிகப்ப குதிகளில் முக்கியமான சாலைகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே இதை முறைப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் 80 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள தியாகராயா சாலையில் ஒருமணி நேரத்துக்கு மோட்டார் சைக்கிள் நிறுத்த ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தி.நகரில் உள்ள பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5-ம், கார்களுக்கு ரூ.20-ம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தவிர மற்ற இடங்களில் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.5, கார்களுக்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை சென்னை மாநகராட்சியின் ஜிசிசி ஸ்மார்ட் பார்க்கிங் என்னும் செயலி மூலம் செலுத்தலாம்.

    • வாகனங்களுக்கு திடீரென கட்டணம் வசூலிக்க ப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
    • இந்த தொகை கோவிலின் வளர்ச்சிக்காகவும், சுற்றுசூழல் பாதுகாப்பு செலவுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள முத்தம்பட்டியில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் உள்ளது.

    இங்கு விசேஷ நாட்கள் மட்டுமின்றி தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, தெலுங்கா னா,உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களும் பஸ்கள், வேன்கள் மூலம் இக்கோவிலுக்கு வந்து வழிபடுவார்கள்.

    இந்நிலையில் இந்த கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு திடீரென கட்டணம் வசூலிக்க ப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    இருசக்கர வாகனங்க ளுக்கு ரூ.20, கார்களுக்கு ரூ.50, வேன்கள், பஸ்கள் ஆகியவற்றுக்கு ரூ.100 என்று நிறுத்த கட்டணம் வசூலிக்கின்றனர்.

    இது குறித்து இக்கோவிலின் பலவருட பக்தர்கள் சிலர் கூறுகையில் 10 வருடங்களுக்கு மேலாக இந்த கோவிலில் வந்து அனுமனை வழிபட்டு செல்கிறோம்.

    இதுவரை இவ்வாறு வாகனங்களுக்கு நிறுத்த கட்டணம் வசூலித்தது இல்லை.இப்போது புதிதாக வசூல் செய்கின்றனர்.

    ஆனால் இந்த கோவிலு க்கென்று பிரத்தியேகமாக வாகன நிறுத்தும் இடங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வனத்துறை ஏற்பாட்டின்படிதான் தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    அந்த பொறுப்பை கிராம நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தொகை கோவிலின் வளர்ச்சிக்காகவும், சுற்றுசூழல் பாதுகாப்பு செலவுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பது பக்தர்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ராஜாஜி பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    • இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித கட்டணமுமின்றி அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 6 மாதமாக மாற்றுத்திறனாளிகள் கண்டிப்பாக நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    25 ஆண்டுகளுக்கு மேலாக கட்டணமின்றி சென்று வந்ததைபோன்று மீண்டும் மாற்றுத்திறனாளிகள் பூங்காவிற்கு இலவசமாக செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அபிராமம் பகுதியில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று பாமர மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.

    அபிராமம்

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    இதை சாதகமாக பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் உள்ள தனியார் கணினி மையங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் பாமர மக்களிடம் அடாவடி வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

    மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்றும் பொதுமக்களை குழப்பி வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி தனியார் கணினி மையங்கள் வைத்துள்ள வர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதலாக பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், அபிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, இதை சாதகமாக பயன்படுத்தி அபிராமத்தில் உள்ள கணினி மையம் வைத்துள்ள தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று பாமர மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.

    இதை கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×