search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம்

    • மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
    • சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுமைக்கும், உடல் இயக்க குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மற்றும் மன வளாச்சி குன்றியோர்களுக்கு கல்விக்காக, பணிபுரிவ தற்காக, பயிற்சிபுரிவதற்காக மற்றும் பயனுள்ள கார ணத்திற்காக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவ னத்திற்கு சென்று வர இலவச பஸ் பயண சலுகை பெற்று பயனடையும் வித மாக சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

    பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 23, 24-ந்தேதியும் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

    ஏற்கனவே இலவச பயண அட்டை பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, பழைய பஸ் பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் மேற்கண்ட தேதிகளில் மதுரை எல்லீஸ் நகர், அன்சாரி நகர் 7-வது தெருவில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ. மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளியில் நடைபெறவுள்ள இலவச பஸ் பயண சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×