search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்ப்பு முகாம்"

    • ஒவ்வொரு மாதமும், 15-ந் தேதி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
    • வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டுகிறோம்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு மாதமும், 15-ந் தேதி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் நாளை 15-ந் தேதி சுதந்திரதினம் விடுமுறை என்பதால், அன்றைய தினம் நடைபெறவேண்டிய மக்கள் குறைதீர்ப்பு முகாம், இம்மாதம் 17-ந் தேதி நடைபெறும். முகாமில், வழக்கம் போல், அனைத்து அரசுத்துறை அதிகாகள் முன்னிலையில், கலெக்டர் குலோத்துங்கன் காலை 9.30 மணி முதல், பிற்பகல் 10 மணி வரை மக்கள் குறைகளை கேட்பார். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
    • அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் மேனகா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • 2.0 மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறை தீர்க்கும் முகாம்’ என்ற திட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.
    • சீர்திருத்தங்கள் தொடர்பான தகவல்களை பரப்பும் தளமாகவும் அமையும்.

    ஊட்டி,

    ஊட்டி மாவட்ட அலுவலகம் அமலாக்க அதிகாரி மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் சட்டரீதியாக இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் 'நிதி ஆப்கே நிகட் 2.0 - மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறை தீர்க்கும் முகாம்' என்ற திட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.

    இது ஒரு ஒத்திசைவான, விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய செயல்முறையாக இருக்கும், இது குறை தீர்க்கும் தளமாகவும், பணியாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான தகவல் பரிமாற்ற மேடையாகவும் செயல்படும்.

    நீலகிரி மாவட்டத்திற்கான 'நிதி ஆப்கே நிகட் 2.0' வருகிற 27-ந் தேதி தோட்டக்கலை வளாகம் சார்ரிங் கிராஸ், ஊட்டி என்ற முகவரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    இந்த மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறை தீர்க்கும் முகாமின் ஒரு பகுதியாக, வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டம் 1952, அதன் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்கள், தொழிலாளிகள் மற்றும் முதலாளிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதலாளிகள், முதன்மை முதலாளிகள்*, ஒப்பந்ததாரர்களுக்குக் கிடைக்கும் ஆன்லைன் சேவைகள் குறித்த விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்படும்.

    வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் புதிய முன்முயற்சிகள், சீர்திருத்தங்கள் தொடர்பான தகவல்களை பரப்பும் தளமாகவும் அமையும்.

    தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் கவனித்து அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவார்கள்.

    நிதி ஆப்கே நிகட்டில் பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலாளர்கள், முதலாளிகள் இன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


     

    ×