search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defence minister"

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பூட்டான், மியான்மர் நாடுகளின் அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையோரத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாடினார். #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பூட்டான், மியான்மர் நாடுகளையொட்டியுள்ள அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நமது தாய்நாட்டை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் காவல் பணியில் இரவு,பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தன்னலம் கருதாத அவர்களின் கடமையை பாராட்டும் வகையில் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அங்கு சென்றார். வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, இனிப்பு வழங்கி அவர்களை மகிழ்வித்தார்.



    எல்லைப்பகுதியில் உள்ள கண்காணிப்பு அரண்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் ராணுவ உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். #NirmalaSitharaman #Diwaliwithjawans #ArunachalPradesh
    ரபேல் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய நிறுவனங்கள் எவை? என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். #NirmalaSitharaman #Rafaledeal
    மும்பை:

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரர் (ஆப்செட் பார்ட்னர்) நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டதிலும் ஊழல் நடந்திருப்பதாக போர்க்கொடி தூக்கி இருக்கின்றன.

    இந்த நிலையில் மும்பையில் நேற்று நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய பங்குதாரர் நிறுவனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ரபேல் விமானம் வினியோகத்தில் டசால்ட் நிறுவனமும், 2 அல்லது 3 இந்திய நிறுவனங்களும் பங்கேற்கின்றன. முதலீடு சார்ந்தோ, உதிரி பாகங்களை வாங்கவோ அல்லது சேவைக்காகவோ எத்தனை எண்ணிக்கையிலும் இந்திய பங்குதாரர் நிறுவனங்களை இணைத்துக் கொள்வது டசால்ட்டின் விருப்பத்தை சார்ந்தது. ரபேல் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டு உள்ள இந்திய பங்குதாரர் நிறுவனங்களிடம் இருந்து எந்த வகையான (முதலீடு, உதிரிபாகங்கள்) சேவையை பெற்றுக்கொண்டோம் என, ரசீதுடன் என்னை அணுகும்போதுதான் அந்தந்த நிறுவனங்கள் குறித்த விவரங்கள் தெரியவரும். அதுவரை ரபேல் ஒப்பந்தத்தில் எத்தனை இந்திய பங்குதாரர் நிறுவனங்களுடன் டசால்ட் நிறுவனம் இணைந்து செயல்படுகிறது என்ற விவரங்களை என்னால் கூற முடியாது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். #NirmalaSitharaman #Rafaledeal


    சிரியா அதிபரின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் சுமார் 88 ஆயிரம் போராளிகளை ரஷியப் படைகள் கொன்று குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Russianforceskilled #88000Syriarebels #rebelsinSyria
    மாஸ்கோ:

    சிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின் விமானப்படைகளும் கிளர்ச்சியாளர்கள் முகாம்மீது வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.

    மேலும்,சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்தின.

    இந்நிலையில், சிரியாவில் கடந்த மூன்றாண்டுகளில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து 1411 குடியிருப்பு பகுதிகள் உள்பட 95 சதவீதம் நிலப்பரப்பு மீட்கப்பட்டதாகவும், இதற்கான தாக்குதலில் 87 ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான கிளர்ச்சியாளர்களை ரஷியப் படையினர் கொன்றதாகவும் ரஷிய ராணுவ மந்திரி செர்கே ஷோய்கு தெரிவித்துள்ளார். #Russianforceskilled #88000Syriarebels #rebelsinSyria 
    எல்லை தாண்டிய பங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என பாகிஸ்தானுக்கு, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். #NirmalaSitharaman #DefenceMinister
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட துல்லிய தாக்குதல் போல எல்லை தாண்டிய பங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என பாகிஸ்தானுக்கு, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தலைநகர் பாரீசில் உள்ள ஆய்வு நிறுவனம் ஒன்றில் நடந்த நிகழ்வில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து விளக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அண்டை நாட்டு (பாகிஸ்தான்) பயங்கரவாத கட்டமைப்புகளும், அரசு ஆதரவு பயங்கரவாதிகளும் இந்தியாவின் பொறுமையை தொடர்ந்து சோதித்து வருகின்றனர். ஒரு பொறுப்புள்ள அரசாக, இந்த அச்சுறுத்தல்களை கையாளுவதில் நாங்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டை பேணி வருகிறோம்.

    எனினும் கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் நுழைந்து எங்கள் ராணுவம் மேற்கொண்ட துல்லிய (சர்ஜிக்கல்) தாக்குதல் மூலம், இத்தகைய எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் புரவலர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எங்களுக்கு உள்ள ஆர்வத்தை நாங்களும் வெளிப்படுத்தி இருக்கிறோம். இது மேலும் தொடரும்.

    தொடர் பயங்கரவாத அச்சுறுத்தல் அல்லது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அரங்கேறும் பயங்கரவாத தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதமாக மிக துல்லியமாக கூறமுடியும். நாட்டின் பாதுகாப்புக்கு இதுவே முதன்மையான அச்சுறுத்தல் ஆகும். அரசு மற்றும் அரசு சாதார நிறுவனங்கள், பினாமிகள் மூலம் அடிக்கடி நிகழ்த்தும் வன்முறைகள் அச்சுறுத்தலை அதிகரிக்கின்றன.

    தொடர் வன்முறை மற்றும் நிலைத்தன்மையற்ற பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதி, அதைப்போல மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் பயங்கரவாதத்தின் பிறப்பிடமாக இருக்கின்றன. இத்துடன் வெளிநாட்டு பயங்கரவாதிகள் பிரச்சினை மற்றும் கட்டுப்பாடற்ற இடப்பெயர்வு போன்றவைதான் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் நிலைத்தன்மைக்கு தெளிவான அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். #NirmalaSitharaman #DefenceMinister 
    ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #Rafale #DefenceMinister #NirmalaSitharaman #RahulGandhi
    புதுடெல்லி:

    ‘ரபேல்’ போர் விமான கொள்முதல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து புகார் கூறி வருகிறார். அதை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுத்தும் வருகிறார்.

    இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், ‘ரபேல்’ போர் விமானத்தை தயாரிக்கிற தகுதித்திறனை பெற்றிருக்கவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.



    ஆனால் அதை அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரான டி.எஸ். ராஜூ மறுத்தார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “ரபேல் போர் விமானத்தை இந்தியாவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்க முடியும். அதற்கான தகுதித்திறன், எங்களுக்கு இருந்தது” என்று கூறினார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், “ஊழலை பாதுகாக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள ரபேல் மந்திரி (நிர்மலா சீதாராமன்) பொய் சொல்லி இப்போது அகப்பட்டுக்கொண்டு விட்டார். ரபேல் போர் விமானத்தை தயாரிக்கிற திறன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு கிடையாது என அவர் கூறியதை அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜூ மறுத்துள்ளார். எனவே அவரது நிலை ஏற்கத்தக்கது அல்ல. அவர் பதவி விலக வேண்டும்” என்று கூறி உள்ளார்.  #Rafale #DefenceMinister #NirmalaSitharaman #RahulGandhi
    “காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்டதை விட 9 சதவீதம் விலை குறைவாக நாங்கள் ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குகிறோம்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார். #Rafale #Congress #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் உள்ள ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், 126 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2012-ம் ஆண்டு பேச்சுவார்த்தை தொடங்கியது. பறக்கும் நிலையில் 18 விமானங்களை டசால்ட் ஏவியேசன் நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும் என்பதும், மீதி விமானங்களை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன் (எச்.ஏ.எல்.) இணைந்து டசால்ட் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்பதும் திட்டம் ஆகும்.



    இதுபற்றி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் போதிய திறனை பெற்று இருக்கவில்லை என்று உணர்ந்தது. மேலும், இந்தியாவில் தயாரித்தால், ஒப்புக்கொண்டதை விட செலவு அதிகரிக்கும் என்றும் கருதியது.

    இந்தியாவில் தயாரிக்க வேண்டுமானால், அதன் தரம் குறித்து உத்தரவாதம் வழங்க வேண்டும். ஆனால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் உத்தரவாதம் வழங்க முன்வரவில்லை. இதனால், டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடரவில்லை.

    அத்துடன், 2013-ம் ஆண்டு, செலவு குறித்த பேச்சுவார்த்தை குழு, இந்த பேரத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தபோது, அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியின் எப்போதும் இல்லாத தலையீட்டால், ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமலே போய்விட்டது. அவர் நினைத்திருந்தால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு அரசு நிதியை அளித்து, அதை பலப்படுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

    ஆனால், நாங்கள் 2016-ம் ஆண்டு, 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடி செலவில் கொள்முதல் செய்ய பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இதில்தான், ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது.

    தலா ரூ.526 கோடிக்கு காங்கிரஸ் வாங்க நினைத்த போர் விமானங்கள், வெறுமனே பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் மட்டுமே உரியவை. ஆனால், நாங்கள் வாங்குவது, போர் தளவாடங்கள், இதர தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானங்கள். இவை அதைவிட உயர் தரத்துடன் இருக்கும்.

    காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்த விலையை விட 9 சதவீதம் விலை குறைவாகவே இவற்றை வாங்குகிறோம். இந்த விமானங்கள், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்மிடம் ஒப்படைக்கப்படும்.

    இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை. இப்பிரச்சினைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் ஊழல்வாதி அல்ல என்று அவர்களுக்கு தெரியும்.

    இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் கவலைகளை போக்க அவர்களை அழைத்துப்பேச போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல், குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்கள். விமானப்படை குறித்தும் அவர்களுக்கு அக்கறை இல்லை.

    சொல்வதற்கு பிரச்சினை எதுவும் இல்லாததால், இதைப்பற்றி பேசி வருகிறார்கள். ராணுவ அமைச்சகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல், தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தியாவின் தூய்மையான அரசுகளில் இதுவும் ஒன்று.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். #Rafale #Congress #NirmalaSitharaman 
    பாகிஸ்தான் எல்லை அருகே சட்லஜ் நதியின் குறுக்கே பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த புதிய பாலத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். #NirmalaSitharaman #Hussainiwala
    பெரோஸ்பூர்:

    பஞ்சாப்பின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி உசைனிவாலா கிராமம் உள்ளது. சட்லஜ் நதிக்கு அந்த கரையில் அமைந்திருக்கும் இந்த பகுதியை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் நதியின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது.

    கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது, எதிரி நாட்டுப்படைகள் முன்னேறாமல் இருப்பதற்காக இந்த பாலம் தகர்க்கப்பட்டது. பின்னர் போர் முடிவடைந்ததும் அங்கு 280 அடி தூரத்துக்கு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.

    இந்த தற்காலிக பாலத்தை மாற்றிவிட்டு 82.40 மீட்டர் தொலைவுக்கு நிரந்தர பாலம் அமைக்கும் பணிகளை எல்லையோர சாலை அமைப்பிடம் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இந்த பாலப்பணிகள் தொடங்கி முடிவடைந்தது.

    பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புதிய பாலத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சுதந்திர போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருடன் தொடர்புடைய பூமியாகும், உசைனிவாலா. இந்த புனித பூமியில் பணியாற்றும் அரிய வாய்ப்பு பெற்றிருப்பதை, இங்கு பணியமர்த்தப்பட்டு உள்ள ராணுவ வீரர்கள் மனதில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.  #NirmalaSitharaman #Hussainiwala  #tamilnews 
    டெல்லியில் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று சந்திக்க முடியாமல் சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #ADMK #OPS
    சென்னை:

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். தனது டெல்லி வருகை தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், ‘இந்த பயணம் முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணம். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என் சகோதரர் மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ராணுவ விமானம் அளித்தனர். எனவே, இதற்கு நன்றி தெரிவிக்க மட்டுமே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளேன். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை’ என தெரிவித்திருந்தார்.

    ஆனால், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டது. அதிமுக எம்.பி மைத்ரேயனை சந்திப்பதற்காக மட்டும் நிர்மலா சீதாராமன், இன்று நேரம் ஒதுக்கியிருந்தார். ஓ.பன்னீர் செல்வம் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர் செல்வத்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா கூறியுள்ளார்’ என ஒற்றை வரியில் பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.  #OPS #NirmalaSitharaman
    ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. #RafaleDeal #PMModi #NirmalaSeetharaman
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதற்கு அதில் ஊழல் நடந்திருப்பதே காரணம் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா, ரன்தீப் சூரஜ்வாலா ஆகியோர் செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர்.



    பின்னர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து ரகசியம் காப்பதுடன், நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது, அதில் தவறு நடந்துள்ளதையே காட்டுகிறது. அவர்கள் தொடர்ந்து அதை மறைப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    அரசு போர் விமானத்தின் விலையை தொடர்ந்து ரகசியமாக வைத்திருக்க முடியாது. தலைமை கணக்காயர் மற்றும் நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வில் அம்பலமாகி விடும். இந்த ஒப்பந்தத்தில் அரசு நிறுவனத்தை புறக்கணித்து விட்டு அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு விமான பாகங்களை இணைக்கும் ஒப்பந்தம் கொடுத்திருப்பது ஏன் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதற்கு இதுவே உதாரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ஆனந்த் சர்மா கூறுகையில், பிரதமர் மோடியும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமான விவகாரம் குறித்து பதில் அளிக்கையில், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது குறித்து ஏன் என்பதை விளக்க வேண்டும். போர் விமான விலையை வெளியிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என பிரான்ஸ் அரசு தெரிவித்து இருக்கிறது. இதை ராகுல் காந்தியிடம், பிரான்ஸ் அதிபர் தெரிவித்து இருக்கிறார். அப்போது மன்மோகன் சிங், நான் (ஆனந்த் சர்மா) உள்ளிட்டோர் உடன் இருந்தோம் என்றார்.

    பின்னர் ரன்தீப் சூரஜ்வாலா கூறும்போது, நாடாளுமன்றத்தில் போர் விமானம் குறித்து மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது உரிமை மீறல் பிரச்சினை ஆகும். இருவருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் முடிவு எடுப்பார் என்றார்.  #RafaleDeal #PMModi #NirmalaSeetharaman
    ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்து உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிர்மலா சீதாராமன் மீது குற்றம் சாட்டியுள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #RahulGanthi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்து உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

    நாடாளுமன்றத்தில் 20-ந் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்று பேசியபோதும், “ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் பிரதமரிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களிடம் உண்மையைப் பேசவில்லை” என்று சாடினார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். திரும்பவும் ரபேல் போர் விமான பேர பிரச்சினையை எழுப்பி இருக்கிறார்.

    அதில் அவர், “நமது ராணுவ மந்திரி ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் ரகசியம் ஏதும் இல்லை. அதை சொல்வேன் என்றார். ஆனால் இப்போது சொல்ல மாட்டேன் என்கிறார். இதில் ரகசியம் இல்லை என்று சொல்லி விட்டு இது மிகப்பெரிய ரகசியம் என்று நிலை மாற்றி பேசுகிறார். ரபேல் போர் விமானத்தின் விலை பற்றி நான் கேட்டால் பிரதமர் நெளிகிறார். என்னை நேருக்கு நேர் பார்க்க மறுக்கிறார். இதில் நிச்சயம் ஊழல் நடந்து உள்ளது” என்று கூறி உள்ளார்.  #RafaleDeal #NirmalaSitharaman #tamilnews 
    இந்தியா-சீனா இடையேயான சுமுக உறவு மேம்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். #DefenceMinister #NirmalaSitharaman
    சென்னை:

    சீன நாட்டு படிப்புகளுக்கான சென்னை மையம், தேசிய கடல்வழி அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் சீனாவின் செயல்பாடு, மாற்றம் மற்றும் வணிகம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு முன்பு வரை சீனா பல்வேறு துறைகளில் வெகுவான வளர்ச்சியை எட்டி இருந்தது. இப்போது ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை சீனா புகுத்தி உள்ளது. விமானப்படை, கடலோர காவல்படை, ராக்கெட் ஏவுதளம் போன்ற பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்துள்ளது. இவற்றையெல்லாம் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    பாகிஸ்தான்-சீனா இடையேயான உறவை இந்தியா-சீனாவுடனான உறவுடன் ஒப்பிடக்கூடாது. பிரதமர் மோடி, சீன அதிபரை சந்தித்து பேசி உள்ளார். இதன்மூலம் இந்தியா-சீனா இடையேயான சுமுக உறவு மேம்பட்டு வருகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் இன்னும் மேம்பாடு ஏற்படும்.

    சீனாவில் ஏற்பட்டுள்ள தொழில் மேம்பாடு காரணமாக அங்கு மனிதவளம் குறைந்து எந்திரமயம் அதிகமாகி வருகிறது. இந்தியா விவசாயம், தொழில்நுட்பம், மென்பொருள் போன்ற துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சிக்காக இந்தியாவில் ஆண்டுக்கு பல லட்சம் கோடி செலவிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவின் தொழில் வளர்ச்சி குறித்து சிறந்த முறையில் கட்டுரை எழுதிய கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நிர்மலா சீதாராமன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் கணபதி, சீன நாட்டு படிப்புகளுக்கான சென்னை மையத்தின் நிர்வாகிகள் ராகவன், சூரியநாராயணன், ஆர்.எஸ்.வாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #DefenceMinister #NirmalaSitharaman
    ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடைபெறவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதா ராமன் திட்டவட்டமாக கூறினார். #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    ராணுவ அமைச்சகத்தின் 4 ஆண்டுகால சாதனைகள் பற்றி துறைக்கான மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்டை நாட்டுடன் (பாகிஸ்தானுடன்) 2003-ம் ஆண்டு ஏற்படுத்திய போர் நிறுத்த உடன்பாட்டை இந்தியா மதித்து நடக்கிறது. அதே நேரத்தில், அத்துமீறி தாக்குதல் நடத்தப்படுகிறபோது, அதற்கு பதிலடி கொடுக்கிற உரிமை நமது ராணுவத்துக்கு உண்டு.

    பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது.

    ரம்ஜானையொட்டி பிரதமர் மோடி அறிவித்த போர் நிறுத்தம் வெற்றியா என்று கேட்கிறீர்கள். அது வெற்றியா, இல்லையா என்று பார்ப்பது ராணுவ அமைச்சகத்தின் வேலை அல்ல.

    எங்கள் வேலை, நமது எல்லைகளை பாதுகாப்பதுதான். எங்களைத் தூண்டினால், நாங்கள் (பதிலடி தராமல்) நின்றுவிட மாட்டோம். அத்துமீறிய தாக்குதல் எதுவும், தகுந்த பதிலடி தராமல் விடுபட்டு விடக்கூடாது என்பதில் நாம் உஷாராக இருக்க வேண்டும். இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருப்பது எங்கள் கடமை.

    தற்போது போர் நிறுத்தம் ரம்ஜான் வரைதான் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோது, வெடிமருந்துகள் தட்டுப்பாடு நிலவியது. எங்களை குற்றம் சாட்டுகிற நபர்கள், இந்த தட்டுப்பாடு எங்கே இருந்து வந்தது என்பதை சொல்ல வேண்டும்.  இப்போது நான் சொல்கிறேன். தற்போது வெடிமருந்து தட்டுப்பாடு இல்லை.

    பிரதமர் மோடி, வூகனுக்கு சென்று சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசி வந்து இருக்கிறாரே, டோக்லாம் முற்றுகைக்கு பிந்தைய இந்திய சீன உறவு நிலவரம் எப்படி உள்ளது? என்று கேட்கிறீர்கள். அதற்கு பதில், இரு நாடுகளின் உறவு, சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதுதான்.

    காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியபடி ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடைபெறவில்லை. இது தொடர்பான முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்பதை விளக்குவதற்காக நாங்கள் நேரம் செலவிட்டோம்.

    அது இரு அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் ஆகும். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

    எஸ்-400 ஏவுகணை பேரம் தொடர்பாக ரஷியாவுடன் நடத்தி வருகிற பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது.

    அமெரிக்காவுடனான நமது அனைத்து பேச்சிலும், இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையேயான ராணுவ உறவு பல்லாண்டு காலமாக இருந்து வருவதை சுட்டிக்காட்டி வந்து உள்ளோம். இது காலத்தை கடந்து வந்து உள்ள உறவு. இதில் இந்தியா நிறைய சொத்துகள், உதிரிபாகங்கள், சேவைகளை பெற்று உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NirmalaSitharaman
    ×