என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - டெல்லியில் இருந்து திரும்பிய ஓ.பி.எஸ் பேட்டி
Byமாலை மலர்24 July 2018 3:17 PM GMT (Updated: 24 July 2018 3:17 PM GMT)
டெல்லியில் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று சந்திக்க முடியாமல் சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #ADMK #OPS
சென்னை:
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். தனது டெல்லி வருகை தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், ‘இந்த பயணம் முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணம். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என் சகோதரர் மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ராணுவ விமானம் அளித்தனர். எனவே, இதற்கு நன்றி தெரிவிக்க மட்டுமே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளேன். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை’ என தெரிவித்திருந்தார்.
ஆனால், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டது. அதிமுக எம்.பி மைத்ரேயனை சந்திப்பதற்காக மட்டும் நிர்மலா சீதாராமன், இன்று நேரம் ஒதுக்கியிருந்தார். ஓ.பன்னீர் செல்வம் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர் செல்வத்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா கூறியுள்ளார்’ என ஒற்றை வரியில் பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். #OPS #NirmalaSitharaman
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X