search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருணாச்சலப் பிரதேசத்தில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராணுவ மந்திரி
    X

    அருணாச்சலப் பிரதேசத்தில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராணுவ மந்திரி

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பூட்டான், மியான்மர் நாடுகளின் அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையோரத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாடினார். #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பூட்டான், மியான்மர் நாடுகளையொட்டியுள்ள அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நமது தாய்நாட்டை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் காவல் பணியில் இரவு,பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தன்னலம் கருதாத அவர்களின் கடமையை பாராட்டும் வகையில் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அங்கு சென்றார். வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, இனிப்பு வழங்கி அவர்களை மகிழ்வித்தார்.



    எல்லைப்பகுதியில் உள்ள கண்காணிப்பு அரண்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் ராணுவ உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். #NirmalaSitharaman #Diwaliwithjawans #ArunachalPradesh
    Next Story
    ×