search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "decrease"

    4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 ஆகவும் உள்ளன. #Petrol #Diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல்- டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.

    கடந்த மாதம் தொடர்ச்சியாக 20 நாட்கள் அதிகரித்தால் பெட்ரோல் லிட்டர் 80 ரூபாயையும், டீசல் 73 ரூபாயையும் தாண்டியது.

    இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தன.

    இந்த நிலையில் 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது. கடந்த மாதம் 21-ந்தேதி வரை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.31 ஆகவும், டீசல் ரூ.73.14 ஆகவும் இருந்தன. அவற்றின் விலை 30-ந்தேதி முதல் இன்று வரை படிப்படியாக குறைந்து வருகிறது.

    4 நாட்களாக விலை குறைந்தாலும் விலை உயர்வில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 ஆகவும் உள்ளன.

    கடந்த 30-ந்தேதி பெட்ரோல் ஒரு பைசாவும் டீசல் ஒரு பைசாவும் குறைந்தன. 31-ந்தேதி பெட்ரோல் 7 பைசா, டீசல் 6 பைசாவும் குறைக்கப்பட்டன.

    பெட்ரோல் நேற்று 6 பைசாவும், இன்று 8 பைசாவும் குறைந்துள்ளன. டீசல் 4 பைசா மற்றும் 8 பைசா வீதம் குறைக்கப்பட்டன. 4 நாட்களில் பெட்ரோல் விலையில் 22 காசும், டீசல் விலையில் 19 காசும் குறைந்துள்ளது.

    ஆனால் விலை உயரும் போது 25 பைசா, 30 பைசா, 35 பைசா என அதிகரித்தது. விலை உயர்த்தப்பட்ட அளவிற்கு விலை குறைக்கப்படவில்லை என்று வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,616-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 29-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 920 ஆக இருந்தது. மறுநாள் (30-ந் தேதி) பவுனுக்கு அதிரடியாக ரூ.224 குறைந்து ரூ.23 ஆயிரத்து 696-க்கு விற்றது. நேற்று (31-ந் தேதி) பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 752 ஆக இருந்தது.

    இன்று பவுனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 616 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,952-க்கு விற்கிறது. பங்கு சந்தை முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.80-க்கு விற்கிறது. #Gold
    கடந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் 110 டிகிரியை கடந்து மக்களை சுட்டெரித்தது. இந்தாண்டு மழை குறுக்கிட்டு அக்னி வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
    வேலூர்:

    கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வேலூர் மாவட்டத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. மார்ச், ஏப்ரலில் 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. திருத்தணியில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயில் பயத்தால் மதிய நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர தயங்கினர்.

    வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டனர். பகல், இரவு நேரங்களில் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்விசிறிகளும் அனல் காற்றை கக்கியது. வீடுகளில் தூங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் கோடையின் உக்கிரமான அக்னி வெயில் இம்மாதம் 4-ந் தேதி தொடங்கியது. வெயில் தாண்டவமாட போகிறது என்று வேலூர் மக்கள் அஞ்சினர். ஆனால் மாறாக அக்னி தொடங்கும் முந்தைய நாள் மாலை மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

    அக்னி தொடங்கிய 4-ந் தேதி 95.7 டிகிரி வெயிலும், 5-ந் தேதி 99.7 டிகிரியும் வெயில் அடித்தது. பிறகு வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் மாறி மாறி 100 டிகிரி, 99 டிகிரி என வாட்டியது. 14-ந் தேதி 103 டிகிரிக்கு அக்னி வெயில் கொளுத்தியது.

    பிறகு நடுநடுவே மழை பெய்தது. மாவட்டம் முழு வதும் ஈரப்பதத்துடன் மாலை நேரங்களில் குளிர் காற்றும் வீசியது. கடந்த 19-ந் தேதி திடீரென 104.5 டிகிரிக்கு வெயில் உச்சத்தை எட்டி வாட்டியது. பிறகு, 24-ந் தேதி 98.2 டிகிரி, 25-ந் தேதி 97.9 டிகிரி வெப்பநிலைக்கு குறைந்தது.

    இப்படிப்பட்ட நிலையை உருவாக்கிய அக்னி வெயில் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று 102.6 டிகிரி வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திர காலங்களில் இடைப்பட்ட மழையால், வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கடந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் 110 டிகிரியை கடந்து மக்களை சுட்டெரித்தது. இந்தாண்டு மழை குறுக்கிட்டு அக்னி வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றியது. இதனால் அக்னியில் இருந்து தப்பித்தோம் என பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அக்னி நிறைவு பெற்ற பிறகு, இன்று வெப்பநிலை அதிகரித்துள்ளது. காலையில் இருந்தே வெயில் உக்ரம் அதிகளவில் உள்ளது. மதியம் 12 மணி அளவில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதனால் வேலூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,664-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் கடந்த 24-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 920 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்த 872-க்கு விற்றது.

    இன்று பவுனுக்கு ரூ.208 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 664 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.26 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ2,958-க்கு விற்கிறது.

    பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மீதான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43-க்கு விற்கிறது. #Tamilnews
    கோத்தகிரியில் கேரட் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நெடுகுளா, கூக்கல்தொரை, ஈளடா உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் மலை காய்கறி கேரட், முட்டைகோஸ், உருளைகிழங்கு, பீட்ரூட், மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.

    கணிசமான நிலப்பரப்பளவில் கேரட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டுபாளையம் மண்டிகளுக்கு தான் இங்கு விளைவிக்கப்படும். மலை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ கேரட்டுக்கு அதிக பட்சமாக 8 ரூபாய் விலை மட்டுமே கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    தோட்ட பராமரிப்பு செலவினங்களை கடந்து அறுவடைசெய்த கேரட் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூலி மற்றும் லாரி வாடகை என கணக்கிட்டால் விவசாயிகளுக்கு ஒரு கிலோ கேரட் குறைந்தப்பட்சம் 50 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால் மேட்டுபாளையம் கமி‌ஷன் மண்டியில் 8 ரூபாய்க்கு விலை கிடைப்பதால் செலவிட்ட முதலீடு கூட விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

    பெரும்பாலான தோட்டங்களில் அறுவடைக்கு தயாராகியும் அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மழை பெய்தாலும் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட் தோட்டம் அழுகிவிடும் அபாயம் உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,768-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 10-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 912 ஆக இருந்தது. பின்னர் விலை ஏற்றத்தால் பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ24 ஆயிரத்து 64 ஆக இருந்தது.

    நேற்று ரூ.64 குறைந்து பவுன் ரூ.24 ஆயிரமாக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரு.232 குறைந்து ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 768 ஆக உள்ளது.

    கிராமுக்கு ரூ.29 குறைந் துள்ளது. ஒரு கிராம் ரூ.2,971-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரமாக உளளது. ஒரு கிராம் ரூ.43-க்கு விற்கப்படுகிறது.
    ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைந்தால் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை அளவு குறைவாக இருப்பதாக அடிக்கடி பொதுமக்கள் புகார் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

    இதுதொடர்பாக அங்குள்ள ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், பொருட்களின் அளவு சரியாக இருப்பதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி ரேஷன் கடை முறைகேடுகள் குறித்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குறைதீர்க்கும் அலுவலரான, மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்திற்கு எழுத்து மூலமாகவும், தொடர்பு எண்ணுடனும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    மேலும், 99809-04040 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி புகார் செய்யலாம். இதுபோல் இலவச தொடர்பு எண்ணான 1967, 1800 425 5901 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். 
    ×