search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.எம்.எஸ்"

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ், செல்போன் இணையதள சேவை இலவசமாக வழங்கப்படும் 

    மேலும், கொச்சி விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த விமான ஓடுதளத்துக்கு பதிலாக கொச்சி கடற்படை விமான ஓடுதளம் பயன்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    வெள்ளம் சூழ்ந்ததால் கொச்சி விமான நிலையம் 26-ம் தேதி வரை மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaRain
    ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைந்தால் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை அளவு குறைவாக இருப்பதாக அடிக்கடி பொதுமக்கள் புகார் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

    இதுதொடர்பாக அங்குள்ள ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், பொருட்களின் அளவு சரியாக இருப்பதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி ரேஷன் கடை முறைகேடுகள் குறித்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குறைதீர்க்கும் அலுவலரான, மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்திற்கு எழுத்து மூலமாகவும், தொடர்பு எண்ணுடனும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    மேலும், 99809-04040 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி புகார் செய்யலாம். இதுபோல் இலவச தொடர்பு எண்ணான 1967, 1800 425 5901 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். 
    ×