search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "decrease"

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,848-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 320 ஆக இருந்தது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்தது. உச்சக்கட்டமாக 5-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 64 ஆக இருந்தது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதே விலைக்கு தான் தங்கம் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரே நாளில் அதிரடியாக ரூ.216 குறைந்தது.

    ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 848 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.27 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,981-க்கு விற்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு போன்ற காரணங்களால் தங்கம் விலை குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்றது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,232-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 600 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் 25-ந்தேதி பவுன் ரூ.23 ஆயிரத்து 544-க்கு விற்றது. தொடர்ந்து விலை சரிந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.23 ஆயிரத்து 432 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.200 குறைந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,904-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் ரு.40.20 ஆகவும் உள்ளது. #Gold
    டீசல் விலை ஏற்றத்தால் மீண்டும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #DieselPriceHike #MTC #ChennaiBus
    சென்னை:

    டீசல் விலை உயர்வால் தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

    இதை சமாளிக்க போக்குவரத்து கழகங்களுக்கு அரசு டீசல் மானியம் அளித்து வந்தது. இந்த மானியத்தையும் அரசு குறைத்து விட்டது. இதனால் போக்குவரத்து கழகங்கள் மேலும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.

    இதுபற்றி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை ஏற்றத்தாலும், மாநில அரசின் டீசல் மானியம் குறைக்கப்பட்டதாலும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் பஸ் சர்வீஸ் குறைக்கப்பட்டது. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் டீசல் விலை ஏற்றத்தால் மீண்டும் போக்குவரத்து கழகங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் போக்குவரத்து கழகங்கள் புறநகர் பஸ்களின் எண்ணிக்கையை 1000 வரை குறைத்து விட்டன. இதேபோல் சென்னையில் மாநகர பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


    போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து லிட்டருக்கு ரூ.16 வரை அதிகரித்து இருப்பதால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.100 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு ஆகும் செலவில் 27 சதவீதம் டீசலுக்கு செலவிடப்படுகிறது.

    செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக தற்போது மாநகர பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சில வழித்தடங்களில் சிறிய அளவிலும், நஷ்டத்தில் இயங்கும் வழித்தடங்களில் பாதி அளவுக்கும் பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் பஸ்கள் செல்லும் இடைவெளி நேரம் அதிகரித்துள்ளது. 30 நிமிடத்துக்கு மேல்தான் பஸ்கள் வருகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுகிறார்கள்.

    டீசல் விலை ஏற்றத்தால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்த நிலையில், பஸ்களின் எண்ணிக்கை குறைப்பு பயணிகளை மேலும் சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.

    நாட்டிலேயே தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள்தான் எரிபொருள் சேமிப்பில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

    அரசு பஸ்கள் சீராக இயக்கப்படுவதால் லிட்டருக்கு 5 கி.மீ.க்கு மேல் கிடைக்கிறது. தனியார் பஸ்களில் லிட்டருக்கு 4 கி.மீ. அளவில் தான் ஓடுகிறது. அரசு பஸ் ஓட்டுனர்களால்தான் சாதனை இலக்கை எட்ட முடிகிறது என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. #DieselPriceHike #MTC #ChennaiBus
    கடந்த 2 நாட்களில் சேர்வலாறு அணையில் மட்டும் 16 அடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழுதுபார்க்க குறைக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் தெரியவில்லை.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பு நிலையை விட அதிக அளவு பெய்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் 9 அணைகள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பிரதான கால்வாய்களின் நேரடி பாசன விவசாயம் நடைபெற்று வருகிறது.

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். ஆனால் ஆவணி இறுதியிலேயே நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கி விட்டது. கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே சாரல்மழை பெய்தது. நேற்று நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது.

    கொடுமுடியாறு பகுதியில் அதிகபட்சமாக 45 மில்லிமீட்டரும் அம்பையில் 28 மில்லிமீட்டர் மழையும் பாபநாசத்தில் 20 மில்லிமீட்டர் மழையும் சேரன்மகாதேவியில் 16 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற இடங்களில் குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 672 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசன கால்வாயில் வினாடிக்கு 20 கனஅடி தண்ணீரும், கீழ்அணையில் இருந்து ஆற்றில் 1004 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 105.50 அடியாக இருந்தது. அது இன்று சற்று உயர்ந்து 106 அடியாக அதிகரித்துள்ளது.

    ஆனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 99 அடியாக இருந்தது. அது நேற்று 91.70 அடியாக குறைந்தது. இன்று மேலும் குறைந்து 84.91 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் சேர்வலாறு அணையில் மட்டும் 16 அடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழுதுபார்க்க குறைக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் தெரியவில்லை.

    மணிமுத்தாறு அணையில் 84.95 அடியும், கடனாநதியில் 68.80 அடியும், ராமநதி 55.25, கருப்பாநிதி-58.89, குண்டாறு-33.38, வடக்கு பச்சையாறு -20, நம்பியாறு-20, கொடுமுடியாறு-37.50, அடவிநயினார்-97.75 அடியாகவும் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த ஒரு நாள் மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    அம்பை - 28.4
    சேரன்மாதேவி - 15.8
    மணிமுத்தாறு - 14.4
    பாளை - 4.2
    நெல்லை - 3.2
    ராதாபுரம் - 2.2
    சிவகிரி - 1
    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. #Rupee #Rupeeversusdollar #USdollar
    சென்னை:

    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி வர்த்தக நேர இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.71.73 ஆக இருந்தது.

    இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 45 காசுகள் சரிந்து ரூ.72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் 3 காசுகள் சரிந்து ரூ.72.18 ஆனது.

    இது வரலாறு காணாத சரிவாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 6-ந்தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.11 என்ற அளவில் இருந்தது. அதுவே உச்சபட்ச சரிவாக இருந்தது.


    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக எண்ணை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், அமெரிக்க டாலரை அதிகம் வாங்குகின்றனர். டாலரின் தேவை அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

    மற்றநாடுகளின் நாணயங்கள் அமெரிக்க டாலரை ஆதரித்து வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் தீவிரம் அடைந்தால் ரூபாய் மதிப்பு மேலும் சரியும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். #Rupee #Rupeeversusdollar  #USdollar
    மேட்டூர் அணையில் இருந்து 14ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6ஆயிரத்து 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் அந்த அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 15ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 8ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 14ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6ஆயிரத்து 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 13ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகனேக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் மெயின் அருவி சேதம் அடைந்திருப்பதாக கூறி, அதில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற அருவிகளிலும், காவிரி கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள்.

    வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்படுகிறது. இதனால் உற்சாகமாக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #MetturDam
    ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    2 அணைகளில் இருந்தும் இன்று காலை 7 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று 23 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 24 ஆயிரத்து 712 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 13 ஆயிரத்து 901 கன அடியாக சரிந்தது.

    அணையில் இருந்து நேற்று 24 ஆயிரத்து 215 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 17 ஆயிரத்து 825 கன அடியாக குறைக்கப்பட்டது.

    கடந்த 22-ந் தேதி மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பிய நிலையில் நேற்று வரை அணையின் முழு கொள்ளளவான 120 அடிக்கும் மேல் நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து குறைந்ததால் இன்று நீர்மட்டம் 119.82 அடியாக சரிந்தது.

    இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. #MetturDam
    தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஊட்டியில் ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலைசிகரம், தேயிலை பூங்கா, மூலிகை பண்ணை, ரெயில் நிலையம், படகு இல்லம், கேர்ன்ஹில் வனப்பகுதி உள்ளது.

    ஊட்டி வெளிவட்டாரங்களில் பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. சீசன் காலங்கள், தொடர் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள்.

    இதனால் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் சீசன் இல்லாத காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமான அளவில் இருக்கும். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக ஊட்டி, கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்தது.

    இதனால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அடிக்கடி மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் கடுங்குளிர் நிலவியது.

    இதனால் விடுமுறை காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா மலர் பூங்கா, படகு இல்லம் உள்பட பல முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் கமர்சியல், எட்டின்ஸ், சேரிங்கிராஸ் உள்ளிட்ட சாலைகளில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இயக்கப் படுகிறது.

    சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பெருமளவு இல்லாததால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இல்லை. தாவரவியல் பூங்காவில் மட்டும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.

    ஆனால் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அடியோடு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போதிய வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தாவரவியல் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சராசரியாக 2 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் இதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

    இதனிடையே ஊட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட், மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குடைகளை பிடித்தபடி பொதுமக்கள் நடந்து சென்றனர். 
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,792-க்கு விற்பனையாகிறது.

    சென்னை, ஜூலை. 18-

    தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பவுன் ரூ.23 ஆயிரத்தை கடந்து விற்று வந்தது. இந்த நிலையில் இன்று விலை அதிரடியாக சரிந்து ரூ.23 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. கடந்த 9-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 416 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிந்து நேற்று பவுன் ரூ.23 ஆயிரஹ்து 16 ஆக இருந்தது. இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.224 குறைந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 792 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,849-க்கு விற்கிறது.

    வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.500 குறைந் துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 700 ஆகவும் ஒரு கிராம் ரூ.41.70-க்கு விற்கப்படுகிறது.

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
    ராயபுரம்:

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்கியது. இது நாளையுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்கிறார்கள். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் செல்வதால் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தடைகாலத்தில் ஏற்கனவே பழுதான படகுகள், வலைகளை சீரமைத்திருந்தனர். தற்போது கடலுக்கு செல்ல தேவையான ஐஸ்கட்டிகள், டீசல், உணவு பொருட்களை ஏற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் மீனவர்கள் உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.

    தடைகாலம் நிறைவடைந்து மீன் பிடிக்க செல்வதால் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

    கடந்த 2 மாதமாக மீன் விலை உச்சத்தில் இருந்தது. வஞ்சிரம், வவ்வால் மீன்கள் கிலோ ரூ. 900 வரை விற்கப்பட்டது. தற்போது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    வழக்கமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகே கரை திரும்புவார்கள். ஆனால் சிறிய வகை படகுகளில் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீன் விலை விரைவில் குறையும் என்று மீன் பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். #Tamilnews
    இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இரு வாரமாக தினமும் விலையை குறைத்து வருகின்றன. இன்று 13-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. #Petrol #Diesel
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது.

    பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85 வரை அதிகரித்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி உருவானது.

    இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரி வரி விதிப்பு திட்டமான ஜி.எஸ்.டி. திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால் விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.

    அதன் பேரில் இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இரு வாரமாக தினமும் விலையை குறைத்து வருகின்றன. இன்று (திங்கட்கிழமை) 13-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.


    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 21 காசுகள் குறைக்கப்பட்டது. டீசல் விலையில் 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.48க்கு விற்பனையானது. டீசல் விலை லிட்டர் ரூ.71.73 ஆக உள்ளது.

    பெட்ரோல், டிசல் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Petrol #Diesel
    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது.
    நாமக்கல்:

    நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் தினமும் 20 லட்சத்துக்கும் கூடுதலாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நாமக்கல்லில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் உள்ள கறிக்கோழிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக தினமும் அனுப்பப்படுகின்றன.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்களின் வரத்து மார்க்கெட்டுகளில் வெகுவாக குறைந்தது. டேம் மற்றும் ஏரி மீன்கள் விற்பனைக்கு வந்தன. கடல் மீன்கள் இல்லாத காரணத்தினால் டேம் மற்றும் ஏரி மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. ஆனால் அந்த மீன்களை விரும்பாதவர்கள் கறிக்கோழிகள் வாங்கினார்கள்.

    மேலும் கோடை விடுமுறை என்பதால் கறிக்கோழிகள் விற்பனை அதிகமானது. இதனால் அதன் விலை உயர தொடங்கியது. கடந்த மாதம் 1 கிலோ கறிக்கோழி உயிருடன் 180-க்கும், தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-க்கும் விற்பனையானது.

    தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாலும், பல்வேறு இடங்களில் திருவிழா தொடங்கி இருப்பதாலும், முக்கியமாக 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் நீங்கி இருப்பதாலும் கறிக்கோழியின் விற்பனை குறைந்ததால் விலை குறைய தொடங்கி உள்ளது.

    கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது. இதுபோல் தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-ல் இருந்து ரூ.20 குறைந்து ரூ.190-க்கு விற்பனையாகிறது. கறிக்கோழியின் விலை குறைந்துள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். #Tamilnews
    ×