என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » death toll rise
நீங்கள் தேடியது "death toll rise"
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. #CaliforniaWildfires
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் கருகின.
தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருவதால் எங்கும் தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயின் உக்கிரத்தை தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
தீப்பிடித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. #CaliforniaWildfires
சோமாலியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. #SomaliaBlasts
மொகடிஷு:
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியது.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல்கட்டமாக தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சோமாலியாவின் மொகடிஷு நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #SomaliaBlasts
டெங்கு, பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary
சென்னை:
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சென்னை சைதாப்பேட்டை தாடண்டன் நகர் அரசு குடியிருப்பில் இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் டெங்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.
அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களிடத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கினார்கள். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் இந்தவிழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
பின்னர் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பன்றி காய்ச்சலை பொறுத்தவரையில் கைகழுவும் பழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தாலே இந்நோயை தவிர்க்கலாம். நல்ல தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உண்டாகிறது. நீரில் கொசுக்கள் உருவாகும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.
பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தான் இவை அதிகமாக பரவுகிறது. அதனால் கை கழுவும் பழக்கத்தை பொதுமக்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
காலை மற்றும் மாலை நேரங்களில் மனிதர்களை கடிக்கும் கருப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முழு கை உடைகளை அணிய வேண்டும்.
பன்றி காய்ச்சலுக்கு இதுவரையில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் 2 பேரும், கோவை, ஈரோட்டில் இருவரும் அறிகுறியுடன் இறந்துள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தால் இறப்பை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு இந்த வருடம் இதுவரையில் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சென்னை சைதாப்பேட்டை தாடண்டன் நகர் அரசு குடியிருப்பில் இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் டெங்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.
அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களிடத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கினார்கள். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் இந்தவிழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
பின்னர் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பன்றி காய்ச்சலை பொறுத்தவரையில் கைகழுவும் பழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தாலே இந்நோயை தவிர்க்கலாம். நல்ல தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உண்டாகிறது. நீரில் கொசுக்கள் உருவாகும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.
பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தான் இவை அதிகமாக பரவுகிறது. அதனால் கை கழுவும் பழக்கத்தை பொதுமக்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
காலை மற்றும் மாலை நேரங்களில் மனிதர்களை கடிக்கும் கருப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முழு கை உடைகளை அணிய வேண்டும்.
கர்ப்பிணிகள், முதியவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எடை அதிகம் உள்ளவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பன்றி, டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம். கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம்.
பன்றி காய்ச்சலுக்கு இதுவரையில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் 2 பேரும், கோவை, ஈரோட்டில் இருவரும் அறிகுறியுடன் இறந்துள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தால் இறப்பை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு இந்த வருடம் இதுவரையில் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. #Odishafloods #CycloneTitli
புவனேஸ்வர்:
வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 19 பேரின் உடல்களை தேடி வருகிறோம். கஜபதி மாவட்டத்தில் அதிகமாக 42 பேரு, கஞ்சம் மாவட்டத்தில் 10 பேரும் பலியாகி உள்ளனர்.
மேலும், பல்லாயிரக்கணக்கான வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 2,770 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Odishafloods #CycloneTitli
அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
அப்போது அந்த தண்டவாளம் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக மோதியது.
இதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், பஞ்சாப் ரெயில் விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Dussehra #Amritsar #TrainAccident
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. #Odishafloods #CycloneTitli
புவனேஸ்வர்:
வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 2,765 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #Odishafloods #CycloneTitli
சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.
அந்த மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.
இந்த ஆலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. அப்போது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டியராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன்குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்பெனியின் ஊழியர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Indonesiaquake
ஜகார்தா:
இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.
சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் பலர் மாயமாகி போயுள்ளனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1944 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 62,359 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை 2,549 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவித்துள்ளனர். #Indonesiaquake
இந்தோனேசியா நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Indonesiaquake
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.
சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1571 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Indonesiaquake
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில்வே நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த பெரிய பேனர் சாலையில் விழுந்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. #Maharashtra
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகர் பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இன்று அதனை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது திடீரென அந்த பேனர் அருகே இருந்த சாலையில் விழுந்தது.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்த பேனரால் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், புனேவில் ரெயில் நிலையம் அருகில் பேனர் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷம்ராவ் கசார் (40), ஷம்ராவ் காசர் (40), ஷிவாஜி பர்தேஷி (40), ஜாவித் கான் (40) ஆகியோர் பலியானது தெரிய வந்தது.
இதில் ஷிவாஜி பர்தேஷி மனைவியின் அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பியபோது விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பேனர் விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. #Maharashtra
டெல்லியில் மூன்றடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. #childrenkilled #Delhibuildingcollapse
புதுடெல்லி:
டெல்லியின் வடமேற்கில் உள்ள அசோக் விஹார் பகுதியில் ஒரு மூன்றடுக்கு மாடி வீடு இன்று காலை 9.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்துவந்த பல குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து சிலரை காயங்களுடன் மீட்டனர். மேலும், 10 வயதுக்குட்பட்ட இரு சகோதர்கள், 5 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரி, ஒரு பெண் ஆகிய 5 பேர் பிரேதமாக மீட்கப்பட்டனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், மூன்றடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இடிபாடுகளில் சிக்கி இறந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, வீடு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தனர்.
சுமார் 20 ஆண்டுகள் பழைமையான அந்த கட்டிடத்தை கடந்த 3 வாரங்களுக்கு முன் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #childrenkilled #Delhibuildingcollapse
தான்சானியா நாட்டின் விக்டோரியா ஏரியில் சென்ற படகு தண்ணீரில் மூழ்கி கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது. #LakeVictoriaFerryAccident
உகாரா:
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் சென்ற சொகுசு படகு ஒன்று உகாரா தீவு அருகே தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
படகு முழுவதும் தண்ணீரில் மூழ்கிய விபத்தில் பலர் பலியாகினர். விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 207 ஆனது என தகவல்கள் வெளியானது. மேலும், உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் சிலரை உயிருடன் மீட்டு வந்தனர்.
இந்நிலையில், தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். படகு மூழ்கி விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். #LakeVictoria #LakeVictoriaFerryAcciden
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X