என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Crude Oil"
பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது என்றும், இப்போது முடிவுகள் வெளியாகி விட்டதால் அவற்றின் விலை உயரக்கூடும் என்றும் பேசப்பட்டது. இதற்கு மத்தியில், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நேற்று முன்தினம் 2 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் விலை திடீரென உயர்ந்தது.
இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆக விற்பனை ஆகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து 68.10 காசுகளாக உள்ளது. #PetrolPriceHike
பொன்னேரி:
எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈராக்கில் இருந்து எம்.டி.கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது.
நேற்று முன்தினம் அதிகாலை கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கிய போது இணைப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் சுமார் 2.5 டன் கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கொட்டியது.
இதனால் கப்பலை சுற்றிலும், கடலில் எண்ணெய் படலமாக மிதந்தது. உடனடியாக அது பரவாமல் இருக்க மிதவை தடுப்புகள் போடப்பட்டன. துறைமுக அதிகாரிகளும் கடலோர காவல் படையினரும் விரைந்து வந்து எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை தீவிரப்படுத்தினர்.
ஸ்டிரிம்மர் எனப்படும் உறிஞ்சும் கருவி மூலம் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு பேரல்களில் சேகரிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக இந்த பணி வேகமாக நடந்து வந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் முழுவதும் அகற்றப்பட்டு உள்ளது. குறைந்த அளவில் எண்ணெய் திட்டுக்கள் மிதக்கின்றன. அதனையும் ஊழியர்கள் படகில் சென்று அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக துறைமுக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. ஆங்காங்கே மிதக்கும் எஞ்சிய கச்சா எண்ணெய் கருவிகள் மூலம் ஊழியர்கள் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.
கப்பலில் மொத்தம் 16, 500 டன் கச்சா எண்ணெய் இருந்தது. இதில் 5000 டன் இறக்கப்பட்டுள்ளது.
மீதியுள்ள கச்சா எண்ணெயை இறக்குவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். எண்ணெய் இறக்குவதற்கு பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்த பின்னர் இதுபற்றி முடிவு எடுக்கப்படும்.
விசாகபட்டினத்திலிருந்து சிறப்பு கப்பல் வந்தடைந்துள்ளது. கடலோர பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் பேரலில் அடைக்கபட்டுள்ளன. இவை சுமார் 2 டன் அளவுக்கு குறைவாகத்தான் உள்ளது. அதை சுற்றுசூழல் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #EnnorePort #CoralStars #OilSpill
பொன்னேரி:
எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈராக்கில் இருந்து எம்.டி.கோரன் ஸ்டார் என்ற கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது. கடந்த 14-ந் தேதி இந்த கப்பல் துறை முகத்துக்கு வந்து சேர்ந்தது.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது இணைப்பு குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கப்பலில் நிலை தளத்தின் மீது கொட்டியது. பின்னர் அங்கிருந்து வழிந்து கடலில் கலந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக எண்ணெய் செல்லும் குழாயை அடைத்தனர். இதனால் பெரிய அளவில் கச்சா எண்ணெய் வெளியேறவில்லை.
எனினும் சுமார் 2½டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்து விட்டது. இதனால் கப்பலை சுற்றி எண்ணெய் படலமாக காட்சி அளித்தது. எண்ணெய் படலம் பரவாமல் இருக்க உடனடியாக அவசர மீட்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் மேலும் பரவாமல் இருப்பதற்காகவும், மிதக்கும் எண்ணெயை அகற்ற வசதியாகவும் கப்பலை சுற்றிலிலும் மிதவை தடுப்புகள் போடப்பட்டன.
துறைமுக தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கடலோ பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணூர் துறை முகத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
எண்ணெய் படலத்தை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆகாய மார்க்க மாகவும், கடலில் உள்ளே இருந்தும் எண்ணெய் படலம் எதுவரையில் பரவி இருக்கிறது என்று கணக்கிடப்பட்டது. இதில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு எண்ணெய் பரவியிருப்பது தெரிய வந்தது. துறைமுகத்தை ஒட்டிய கடல் பகுதியில் மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்ட இடத்திற்குள் மட்டும் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து எண்ணெயை உறிஞ்சும் நான்கு பெரிய ஸ்கிம்பர் கருவியை கடலில் இறக்கி எண்ணெய் படலத்தை உறிஞ்சி வருகின்றனர். இன்று 2-வது நாளாக பணி நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மிதவை தடுப்புகள் போடப்பட்ட இடத்தை சுற்றிலும் படகுகள் மூலம் துறைமுக ஊழியர்கள் சுற்றி வந்து கண்காணித்து வருகின்றன. கடலோர காவல் படை படகுகளும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. உறிஞ்சி எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பேரல்களில் சேகரிக்கப்பட்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதற்கிடையே இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான மாசு கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ‘சமுத்ரா பஹேரேதார்’ என்ற கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் படலத்தை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருவதால் விரைவில் இந்த பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து துறைமுக ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது, “கப்பலில் இருந்து கொட்டிய கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. மிதவை போடப்பட்ட இடத்திற்குள்ளேயே எண்ணெய் மிதக்கிறது.
மேலும் அது பரவ வாய்ப்பு இல்லை. எனவே பெரிய அளவில் கடலில் மாசு ஏற்படாது. 50 சதவீத எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கச்சா எண்ணெய் கொட்டியது. இதில் எண்ணூரில் இருந்து நீலாங்கரை வரையிலும் பரவியிருந்தது. இதனால் கடலில் மாசு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆண்டுகளில் எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணை கொட்டு வது இது 2-வது முறை ஆகும். #EnnorePort #OilSpill
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.
சவுதி அரேபியாவும் அடுத்த மாதத்துக்குள் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினந்தோறும் 5 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். #Saudiminister #1mlnbpd #oiloutputcut
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பதுடன், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா சமீபத்தில் கூறியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் இந்தியா சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த நிபந்தனைக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் இறுதி முடிவைத்தவிர வேறு எந்த நாட்டின் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட முடியாது என்பது இந்தியா கடைபிடித்துவரும் வெளியுறவுத்துறை கொள்கையாக உள்ளது.
முன்னர் இருந்த அளவை விட ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் அளவை இந்தியா ஓரளவுக்கு குறைத்து கொண்டுள்ளது. ஆனால், உள்நாட்டு நுகர்வுத் தேவையை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இதற்கிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இன்று முதல் இந்த தடைகள் அமலுக்கு வந்தது.
இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், ஈரானிடம் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு தற்காலிக விலக்கு அளிக்க அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மைக் பாம்ப்பியோ சீனா, இந்தியா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் துருக்கி ஆகிய 8 நாடுகளுக்கு இந்த தற்காலிக விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். #USexemptIndia #Iranoilsanctions #MikePompeo
மேலும் ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பேரலுக்கு 100 டாலருக்கு மேல் விலை ஏறும்பட்சத்தில் சவுதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் ‘ஓபேக்‘ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் எண்ணெய் விலை குறையும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு சவுதி அரேபியா ஒத்துக் கொள்ளவில்லை.
அப்போது தனது நட்பு நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியா குறித்து பேசினார். மேலும் மற்றொரு நட்பு நாடான சவுதி அரேபியா குறித்து குறிப்பிடும்போது மன்னரை கடுமையாக தாக்கினார்.
மக்களின் கரகோஷத்துக்கு இடையே பேசிய அவர், “பணக்கார நாடாக இருந்தாலும் சவுதி அரேபியாவை நாம்தான் பாதுகாக்கிறோம். நான் அந்நாட்டு மன்னர் சல்மான் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன்.
மன்னரே உங்களை நாங்கள் (அமெரிக்கா)தான் பாதுகாக்கிறோம். எங்களது ராணுவத்தின் தயவு இன்றி உங்களால் அங்கு 2 வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாது” என்று எதைப்பற்றியும் பகிரங்கமாக குறிப்பிடாமல் மிரட்டல் விடுத்தார். #USPresident #DonaldTrump #SaudiArabiaKing
சென்னை:
சர்வதேச விலைக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் தினமும் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90-ஐ நெருங்கும் நிலையில் உள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் போது மத்திய-மாநில அரசுகளின் வாட் வரியும் அதிகரிக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது.
தமிழக அரசுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ. 470 கோடிக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்துடன் வரி வருவாய் ரூ. 2,255.80 கோடியாக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.67.71 ஆக இருந்தது. இபோது பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 80-ஐ தாண்டிய நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் வரி வருவாய் ரூ.2,725.80 கோடியாக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் ரூ.500 கோடி கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. தமிழக அரசு பெட்ரோலிய பொருட்களின் மீது 32 சதவீத வாட் வரி விதிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. அமல் படுத்தப்பட்டபின்பு தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மற்றும் மது விற்பனை ஆகியவற்றுக்கு மட்டுமே வாட் வரி விதித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. #PetrolDiesel #PetrolPriceHike
பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 மாதங்களாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகிய இரு காரணங்கள்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இவற்றோடு மத்திய - மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் பெட்ரோல் டீசல் விலையை உச்சத்தில் வைத்துள்ளன.
இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில் 83 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்கு வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை தான் கைகொடுப்பதாக உள்ளது. இந்த கச்சா எண்ணையில் பெரும்பகுதியை ஈரான் நாடு நமக்கு வழங்கி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் கச்சா எண்ணை விஷயத்தில் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதோடு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை வாங்காதீர்கள் என்று இந்தியா உள்பட பல நாடுகளை அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தபடி உள்ளது. இந்த விவகாரம் தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரிப்புக்கு வழி வகுத்து விட்டது.
அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக ஈரான் நாடு, தனது கச்சா எண்ணை உற்பத்தியை கணிசமாக குறைத்து விட்டது. இதனால் ஈரானில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் கச்சா எண்ணை அளவு 12 சதவீதம் குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளிடம் உற்பத்தி அளவை அதிகரிக்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்தது.
ஆனால் அமெரிக்காவின் இந்த வேண்டுகோளை எண்ணை தயாரிக்கும் எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தினமும் தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது. நேற்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 80 டாலரை கடந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 81 டாலரைக் கடந்தது. இந்த நிலையில் ரஷியா தலைமையிலான கச்சா எண்ணை ஏற்றுமதி நாடுகள் தங்களது கச்சா எண்ணை உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 90 டாலராகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 100 டாலரையும் எட்டும் என்று யூகங்கள் நிலவுகின்றன.
இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 13 காசாக உயர்ந்துள்ளது. அதுபோல இன்று டீசல் விலை 10 காசுகள் அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.78.36 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் வரியில் வாட் வரிக்கு ஏற்ப விலையில் ஏற்றத்தாழ்வு உள்ளது.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது 32.16 சதவீதமும், டீசல் மீது 24.08 சதவீதமும் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மும்பையில்தான் அதிகபட்சமாக பெட்ரோலுக்கு 39.12 சதவீதமும், டீசலுக்கு 38.11 சதவீதமும் வாட் வரி விதிக்கப்படுகிறது. இதனால் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டி விட்டது.
தமிழ்நாட்டிலும் அடுத்த வாரம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்து விடும் என்று தெரிகிறது. கடந்த 9 மாதங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 14 ரூபாயும், டீசல் 15 ரூபாயும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக லாரி உரிமையாளர்களுக்கு மாதத்துக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் லாரி சரக்கு கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் தினமும் பருப்பு வகைகள், தண்ணீர், சிமெண்ட், அரிசி மற்றும் இரும்புப் பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்கின்றன.
லாரி சரக்கு புக்கிங் கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் விலை தானாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சரக்கு புக்கிங் கட்டண உயர்வு நேற்றே உடனே அமலுக்கு வந்து விட்டது.
எனவே விரைவில் அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகளின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளன.
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. #FuelPrice #PetrolDiesel #PetrolPriceHike
இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில் 83 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையைச் சார்ந்தே உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்தாலோ அல்லது கச்சா எண்ணை இறக்குமதி குறைந்தாலோ... அது பெட்ரோல், டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அது போல டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விடுகிறது.
தற்போது கச்சா எண்ணை விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ரூபாய் மதிப்பிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து பெட்ரோல், டீசல் விலையை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன.
கடந்த மாதம் முழுக்க பெட்ரோல், டீசல் விலை தினமும் 10 காசு, 20 காசு என்று உயர்ந்தபடி இருந்தது. இந்த மாதமும் கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு சற்று அதிகமாக உள்ளது.
பெட்ரோல் விலை 84 ரூபாயை நெருங்கி விட்ட நிலையில் நாளை விலை உயரும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 84 ரூபாயை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலுக்கு இணையாக டீசல் விலையும் அதிகரித்தப்படி இருக்கிறது.
இன்று டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்தது. இதனால் விற்பனை நிலையங்களில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.76.98-க்கு விற்கப்படுகிறது.
நாளை விலை உயரும் பட்சத்தில் டீசல் விலை ரூ.77-ஐ கடக்க வாய்ப்புள்ளது. #PetrolPriceHike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்