என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெட்ரோல் கட்டண உயர்வால் தமிழக அரசுக்கு ஒரே மாதத்தில் ரூ.470 கோடி வருவாய் அதிகரிப்பு
சென்னை:
சர்வதேச விலைக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் தினமும் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90-ஐ நெருங்கும் நிலையில் உள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் போது மத்திய-மாநில அரசுகளின் வாட் வரியும் அதிகரிக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது.
தமிழக அரசுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ. 470 கோடிக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்துடன் வரி வருவாய் ரூ. 2,255.80 கோடியாக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.67.71 ஆக இருந்தது. இபோது பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 80-ஐ தாண்டிய நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் வரி வருவாய் ரூ.2,725.80 கோடியாக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் ரூ.500 கோடி கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. தமிழக அரசு பெட்ரோலிய பொருட்களின் மீது 32 சதவீத வாட் வரி விதிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. அமல் படுத்தப்பட்டபின்பு தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மற்றும் மது விற்பனை ஆகியவற்றுக்கு மட்டுமே வாட் வரி விதித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. #PetrolDiesel #PetrolPriceHike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்