search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corporation meeting"

    • வளர்ச்சி பணிகள் குறித்து மட்டும் பேசுங்கள் என கமிஷனர் கூறினார்.
    • தி.மு.க. கவுன்சிலர்கள் அஜய், கிட்டு, ஆகிய 2 பேரும் பேசும் போது, மேயர் அறையில் மக்களுக்கு தேவையான பணிகள் நடைபெறவில்லை என்பது உள்பட பல்வேறு புகார்களை கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் ரவீந்தர் பேசுகையில், மேயர் அறையில் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பல மணி நேரம் இருந்து கொண்டு கமிஷன் பேசுகிறார்கள். அதனால் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என புகார் கூறி பேசினார்.

    இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே கமிஷனர் தலையிட்டு வளர்ச்சி பணிகள் குறித்து மட்டும் பேசுங்கள். பிற சம்பவங்கள் குறித்து மாமன்ற கூட்டத்தில் பேச வேண்டாம் என அனைவரையும் அமைதிப்படுத்தினார்.

    இதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் அஜய், கிட்டு, ஆகிய 2 பேரும் பேசும் போது, மேயர் அறையில் மக்களுக்கு தேவையான பணிகள் நடைபெறவில்லை என்பது உள்பட பல்வேறு புகார்களை கூறினார்.

    மேலும் இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

    வாக்குவாதம்

    அப்போது 2 தரப்பு தி.மு.க. கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, பவுல்ராஜ், கோகுலவாணி சுரேஷ், முத்துலட்சுமி சண்முக பாண்டி, கருப்பசாமி கோட்டையப்பன், உலகநாதன், சந்திரசேகர், அனுராதா சங்கர பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.
    • நகர்புற வாழ்வாதார மையம் மூலம் 12 பேர் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அவர் பேசிய தாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது கடற்கரைச்சாலை, பாளையங்கோட்டை ரோடு, அண்ணாநகர், சத்திரம் தெரு, சிதம்பரம் நகர், முனியசாமிபுரம், செல்வநாயகபுரம், செயின்ட் தாமஸ், குருஸ்புரம், போல்டன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது.

    இதற்கான உந்து சக்தி நிலையங்களில் பராமரிப்பு செய்து பம்ப் இயக்குவதற்கு நகர்புற வாழ்வாதார மையம் மூலம் 12 பேர் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    மாநகரில் உள்ள பக்கிள் ஓடை சுத்தம் செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்று தல், தெருக்களில் உள்ள மண்மேடுகளை அகற்று தல், கட்டுமான கழிவுகளை அகற்றுதல், மாநகராட்சி பூங்காக்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஜே.சி.பி. எந்திரத்தை இயக்குவதற்கு நிரந்தர ஓட்டுநர்கள் இல்லாத தால் கூடுதலாக பணி யாற்றுவதற்கு செலவினை தொகையை அனுமதித்தல் குறித்து விவாதித்தல்.தெற்கு மண்டலம் 57-வது வார்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 501 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர் 53 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தப் பள்ளிக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க வரி விலக்கு அனுமதி கோருதல்,

    தூத்துக்குடி மாநகராட்சி யில் உள்ள 60 வார்டுகளிலும் தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் 2,887 எல்.இ.டி. விளக்குகள் அமைக்க ரூ.5கோடியே 53 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள 15-ம் நிதிக்குழு மானிய நிதியில் இருந்து மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.

    மேலும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் தருவை பகுதியில் 2 நுண் உரம் மையம் ரூ.115 லட்சத்தில் மேற்கொள்ள ரூ.63 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மற்றும் தனிநபர் கழிப்பிடம், வீட்டு கழிப்பிடம், சிறுநீர் கழிப்பிடங்கள், சமுதாய மற்றும் பொது கழிப்பிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ்,அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி,நகரமைப்பு குழு தலைவர் ராம கிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, வெற்றிச் செல்வன், ஜெயலட்சுமி சுடலை மணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சி லர்களும்,மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவி யாளர் துரைமணி, அதிகாரி கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், சேகர், ஹரி கணேஷ், ராஜபாண்டி உட்பட அதிகாரிகள், அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.  

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது
    • நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் சாலைகளில் தங்கும் நிலை உள்ளது. எனவே அவர்களுக்காக பஸ் நிலைய முதல் தளத்தில் ஓய்வறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடிநீர் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு

    கூட்டத்தில் நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்த்துவதற்கு இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் இதற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கட்டண உயர்வு தீர்மானம் ஒத்திவைக்கப்பட்ட.து.

    பின்னர் மேயர் சரவணன் பேசியதாவது:-

    பொங்கல் பண்டிகையை யொட்டி ரேஷன் அட்டைதா ரர்களுக்கு ரூ.1,000 அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அமைச்சராக பதவி ஏற்றுள்ள தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் சாலைகளில் தங்கும் நிலை உள்ளது. எனவே அவர்களுக்காக பஸ் நிலைய முதல் தளத்தில் ஓய்வறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவதை யொட்டி குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்த்துவற்கு இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.

    ஆனால் பெரும்பாலான கவுன்சிலர்கள், பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்ப தால் அதனை ஒத்தி வைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் பேசும் போது, ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் எனது வார்டு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது.

    அங்கு தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேடு அறை அமைக்க வேண்டும், பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கூறினார்.

    கவுன்சிலர் ரசூல் மைதீன் பேசும் போது, மேலப்பா ளையம் கன்னிமார் குளத்தில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுப்ப தற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கூறினார்.

    கவுன்சிலர் முத்து சுப்பிர மணியன் கூறும்போது, மாநக ராட்சிக்கு சொந்த மான ஏராளமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்க வேண்டும். குடிநீர் கட்டணத்தை உயர்த்த கூடாது என கோரிக்கை விடுத்தார்.

    32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் பேசும் போது, குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பணியை தொடங்க வேண்டும். பாளை பஸ் நிலையத்தில் மீண்டும் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டை அமைக்க வேண்டும் என கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் தச்சை சுப்பிர மணியன், சுதா மூர்த்தி, கிட்டு என்ற ராம கிருஷ்ணன், கருப்ப சாமி கோட்டையப்பன், உலகநாதன், ரவீந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.

    கமிஷனர் பேச்சு

    தொடர்ந்து கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி பேசியதாவது:-

    2008-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் பாபநாசத்தில் இருந்து மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது. பின்னர் 2011-ம் ஆண்டு அரியநாயகிபுரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு இதற்காக ரூ.230 கோடி ஒதுக்கப்பட்டது.

    இதில் 10 சதவீத தொகையை மாநகராட்சி செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. 30 சதவீத தொகை வெளிநாடு வங்கி களிடம் இருந்து கடன் பெற முடிவு செய்யப்பட்டது.

    இந்த திட்டம் 2018-ம் ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும். சில காரணங் களால் தாமதமாகி உள்ளது. இந்த தாமதத்தால் வட்டியுடன் சேர்த்து தற்போது திட்டத்திற்கு ரூ.332 கோடி தேவைப்படுகிறது.

    மேலும் முதலில் மாநகராட்சி பகுதிக்கு மட்டும் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. தற்போது வி.எம். சத்திரம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதனால் மாநகராட்சி ரூ.332 கோடி ரூபாய் கடனில் உள்ளது. எனவே கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி உள்ளது.

    ரூ.35.63 கோடியில் முறப்பநாட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் வெற்றி பெற்றால் விரிவாக்க பகுதிகளுக்கு எளிதில் தண்ணீர் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
    • ஓரிரு மாதங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணன் பேசியதாவது:-

    சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சிறப்பு நிதியில் இருந்து சாலை புனரமைப்பு, பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணித திறனை ஊக்குவிக்கும் வகையில் வானவில் மன்றம் அமைத்ததற்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி. காமிரா

    பொது மக்களின் நலன் கருதி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பணி நடைபெறும் இடத்தில் இருந்த மணல்கள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படும்.

    மாநகராட்சி பகுதியில் உள்ள 32 அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தொடர்ச்சி யாக 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாத அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முத்து லட்சுமி, ஜெகநாதன் என்ற கணேசன், அமுதா ஆகிய 3 பேர் தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் இதுதொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குடிநீர் பற்றாக்குறை

    தொடர்ந்து கவுன் சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக்கைகள் தொட ர்பாக பேசினர். மேலப்பா ளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா பேசும்போது, தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதி களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

    இதுதொடர்பாக கவுன்சிலர்களை சந்தித்து பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். மேலும் பாதாள சாக்கடைக்கு மூடிகள் அமைக்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

    அப்போது பேசிய கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். இதனால் கடந்த ஒரு மாதமாக சாக்கடை அடைப்புகள் ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்றார்.

    28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் பேசும்போது, சுந்தரர் தெரு கழிவு நீர் அடைப்புகளை உடனடியாக சரி செய்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்கள் பகுதியில் ரூ.4.60 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அது குறித்து விளக்கங்கள் வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் முழங்கால் அளவுக்கு கழிவு நீர் தேங்கி உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.

    30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகநாதன் என்ற கணேசன் பேசும்போது, எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சந்திப்பு பஸ் நிலையம், மாநகராட்சி மெயின் கட்டிடம், சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளிட்டவைகள் உள்ளது. தைக்கா தெருவில் 5 வருட மாக குடிநீர் மாநகராட்சி லாரிகள் மூலம் வினியோ கிக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீபுரத்தில் கடந்த 5 வருடமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.

    50-வது வார்டு த.ம.மு.க. கவுன்சிலர் ரசூல் மைதீன் பேசும்போது, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை தவிர்க்க மாநகராட்சி புதிய நடைமுறையை கையாண்டதற்கு நன்றி தெரிவித்தார்.

    32-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் பேசும்போது, எங்கள் வார்டில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கேட்டால் மோட்டார் பழுது சரி செய்ய 4 நாட்கள் ஆகிறது என தெரிவிக்கின்றனர். எனவே மாற்று மோட்டார் வைக்க வேண்டும், புதுப்பேட்டை தெருவில் விரைவில் சாலைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து ம.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா கூறும்போது, மாநகராட்சி விரிவாக்க பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர்

    இதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, ரூ.35 கோடியில் விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, உலகநாதன், கருப்ப சாமி கோட்டையப்பன், பவுல்ராஜ்,கிட்டு என்ற ராம கிருஷ்ணன், முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.4.½ கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிக்கு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடை பெற்றது.

    மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணன் பேசியதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.4.½ கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மாநகராட்சி விரிவாக்க பகுதிகளுக்கு ரூ.38.62 லட்சம் மதிப்பீட்டில் மின் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.5 கோடி மதிப்பில் மாநகர பகுதிக்கு புதிதாக 1050 மின் கம்பங்கள், மின் விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாக துறைக்கு ஒப்புதல் கோரி மனு அனுப்பப்பட்டுள்ளது.

    பருவமழை

    வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிக்கு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்.இதில் சுழற்சி முறை யில் பணியாளர்கள் ஈடுபடு வார்கள். மேலும் 1800 420 420 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கண்டறிய மாநகராட்சி பகுதியில் விரைவில் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, கிட்டு, பவுல்ராஜ், சந்திரசேகர், முத்துலெட்சுமி, ஜெகநாதன் என்ற கணேசன், ரவீந்தர், கருப்பசாமி கோட்டையப்பன், உலகநாதன் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்தும், புகார்கள் குறித்தும் பேசினர். பெரும்பாலானவர்கள் சாலைகளில் மாடுகள், நாய் உள்ளிட்டவைகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் உள்ளதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    தொடர்ந்து சீரான குடிநீர் வழங்க கோரியும், அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகளுக்கு பொருத்தப்படும் மீட்டர்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்தனர்.

    பின்னர் மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மானிய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
    • மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுதல், முத்தம்மாள் காலனியில் புதிய ரேஷன் கடை கட்டுதல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மான்ய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    உள்ளாட்சி அமைப்பு திட்டப் பணிகளுக்கு மானியம் பெறுவதற்கு மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

    எனவே சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கு மாநகராட்சி பகுதிகளில் கட்டப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு அவற்றின் அமைவிடம், கட்டுமானத்தின் தன்மை அடிப்படையில் பரப்பளவிற்கு ஏற்றவாறு 4 வகைகளாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்ய வேண்டும்.

    அதன்அடிப்படையில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி தீர்மானத்தின்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் 1-4-2022 முதல் காலிமனை வரி உயர்வு செய்து பொது சீராய்வு மேற்கொள்ள மண்டலங்கள் வாரியாக புதிய வரியும், பொது சீராய்வு மேற்கொள்ள அனுமதி கோருதல்,

    உள்ளாட்சி அமைப்பு களில் நிர்வாகத்தை வலுப்ப டுத்தவும், பொதுமக்களின் பங்கேற்பு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தவும் மாநகராட்சி சட்டப்பிரிவுகளின்படி வார்டு குழு மற்றும் பகுதிசபா அமைக்கவும் அதற்கு வார்டு கவுன்சிலர் தலைவராகவும் வாக்குரிமை பெற்ற பகுதி வாசிகள் பகுதிசபா குழு உறுப்பினர்களாகவும் மாநகராட்சி அனுமதி பெற்று நியமித்திடவும் இந்தக் குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படவும் அதற்கான அஜெண்டா தயாரிக்கவும் கவுன்சிலர் கூட்டம் நடத்த தவறினால் ஆணையாளர் கூட்டத்தை நடத்தவும் அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே வார்டு குழு மற்றும் பகுதிசபா 60 வார்டுகளிலும் அமைக்க அரசாணை மற்றும் அரசிதழ் அறிக்கையினை மாமன்றத்தில் சமர்ப்பித்தல் உட்பட பல தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது,

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், குழு தலைவர்கள் ராமகிரு ஷ்ணன், கீதாமுருகேசன், சுரே ஷ்குமார், அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கசாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன்சுரேஷ், பொன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    • நெல்லை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் வைத்து இன்று நடைபெறும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது
    • அ.தி.மு.க. கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்திருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் வைத்து இன்று நடைபெறும் என மாநகராட்சி மேயர் சரவணன் தரப்பில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டிருந்தது.

    தகுதி நீக்க தீர்மானத்துக்கு தடை

    இந்த கூட்டத்தில் தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு மேல் பங்கேற்காத முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன் மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர் முத்துலட்சுமி ஆகியோர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஜெகநாதன் மற்றும் முத்துலட்சுமி தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று நடக்கும் கூட்டத்தின் போது அ.தி.மு.க. கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்திருந்தது.

    கூட்டம் ஒத்திவைப்பு

    இதற்கிடையே இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் திடீரென 10 மணிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி மேயர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் குழப்பம் அடைந்தனர். இதை எடுத்து மேயர் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், தி.மு.க. வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் இறந்துவிட்டதாகவும், இதனால் அதில் பங்கேற்க வேண்டும் என்று பெரும்பான்மையான தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் மாநகராட்சி கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது மேலும் கூட்டம் வருகிற 28-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அதில் கூறப்பட்டிருந்தது.

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மைய மண்டபத்தில் நடைபெற்றது
    • குப்பைகளை சேகரிக்க ரூ.8.45 கோடியில் உபகரணங்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மைய மண்டபத்தில் நடை பெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    பின்னர் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாநகர பகுதியில் 22 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கும், ரூ.370 கோடியில் மேற்கு புறவழிச்சாலை திட்டம் தந்தமைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

    மாநகரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாதாள சாக்கடை திட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தின் கீழ் ரூ.91.91 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    குப்பைகளை சேகரிக்க ரூ.8.45 கோடியில் உபகரணங்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    மண் சாலை

    தார் சாலையாக மாற்றம்

    மாநகராட்சிக்குட்பட்ட 57.36 கிலோ மீட்டர் சாலை களில் மழை காலங்களில் போக்கு வரத்துக்கு சிரமமாக உள்ளதால் 37.78 கிலோ மீட்டர் நீளமுள்ள மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்ற ரூ.77.67 கோடியில் மதிப்பீடு தயார் செய்து நிர்வாக அனுமதி வழங்குவது,

    மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து தலைமை நீரேற்றும் நிலையங்களிலும் குடிநீர் நீரேற்றும் பணிகள் தடையின்றி நடைபெற கூடுதலாக 55 மாற்று மின் இயக்கிகள் ரூ.3.79 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்வது, சிந்துபூந்துறை மற்றும் வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடையை ரூ.1 கோடி மதிப்பீட்டில் திரவ பெட்ரோலிய வாயு (எல்.பி.ஜி.) தகன மேடையாக மாற்றி அமைத்தல், மேலப்பாளையம் 52-வது வார்டுக்குட்பட்ட மயானத்தின் அருகில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக திரவ பெட்ரோலிய வாயு தகன மேடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல்,

    வேய்ந்தான்குளம் சீரமைப்பு

    வேய்ந்தான்குளத்தை ரூ.71.40 லட்சத்திலும், காந்திநகர் பம்பன்குளத்தில் ரூ.1.92 கோடியிலும் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பேசிய மேயர் சரவணன், மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவுற்றுள்ளது. தற்போது சோதனை ஓட்டமாக அனைத்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் நீரேற்றம் செய்தும், அதன்மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தும் சோதனை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இன்னும் ஓரிரு வாரங்களில் பணிகள் அனைத்தும் முடிவுற்று பொதுமக்களுக்கு தேவை யான தண்ணீர் தடையின்றி வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் குறித்து பேசினர்.

    12-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி கூறும ்போது, உடையார்பட்டி எரிவாயு தகனமேடையின் மேற்கூரை இடிந்துள்ளது. அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மதுரை ரோட்டில் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படால் உள்ள கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    6-வது வார்டு கவுன்சிலர் பொன்ராஜ் கூறும்போது, மின் பராமரிப்பு பணியின் போது சாலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டும் பணியாளர்கள் அதனை அப்படியே விட்டு செல்கின்றனர். எனவே அதனை அகற்ற வேண்டும் என கூறினார்.

    இதே போல் பல்வேறு வார்டு உறுப்பினர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    • கூட்டத்தில் திருக்குறள் வாசித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • 55-வது வார்டில் அவிநாசி சாலை செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது.

    கோவை

    கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. துனை மேயர் வெற்றிசெல்வன், கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருக்குறள் வாசித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல் முறையாக மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கமிஷனர் பிரதாப்புக்கு மேயர் கல்பனா மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் 44-வது ஒலிம்பியாட் போட்டியை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். 18 மாதங்கள் நடக்க வேண்டிய பணிகளை 4 மாதங்களில் முடித்து காட்டியுள்ளார். இது இந்தியாவிற்கு பெருமை ஏற்படுத்தி உள்ளது.

    அனைத்து மண்டலங்களிலும் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார பணியாளர்களை புதிதாக நியமனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கிழக்கு மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில், விமான நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கழிவுநீர் புகுந்து தேங்கி நிற்கிறது இது மழைக்காலங்களில் ஊருக்குள் போகும் வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 55-வது வார்டில் அவிநாசி சாலை செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.

    வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பேசும் போது, வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்படும் போது அந்த பகுதியில் உள்ள மற்ற குழாய்கள் உடைந்து சேதமடைகிறது இதனால் அடிக்கடி நீர் வெளியேறுகிறது.

    எனவே அதனை சரி செய்ய வேண்டும்.மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மேயர் வீட்டுக்கு ஒரு கோடி செலவு செய்யப்பட்டு பணம் வீணாக்கப்படுகிறது என அ.தி.மு.க கவுன்சிலர் தெரிவித்துள்ளார் அதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கல்வி குழு தலைவர் மாலதி பேசும்போது பூங்காக்கள் கல்வி விளையாட்டு மைதானம் எங்களது குழுவில் உள்ளது. ஆனால் தற்போது மாமன்ற செயலாளர் கல்வி மட்டும் தான் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் எங்களுக்கு வராது என கூறுகிறார். இது எங்களது உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே இதற்கு உடனடி தீர்வு வேண்டும் என்றார் இதனால் மாவட்ட கூட்டத்தில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது இது எடுத்து மேயர் 4 நாட்களில் இதற்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

    இதேபோல் கோவை மாநகரில் கடந்த 3 மாத காலத்தில் மட்டும் ரூபாய் 161 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையாளர்.பிரதாப் தெரிவித்தார்.

    • ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது.
    • கூட்டதிதல் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதற்கு எதற்கு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது. துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருளையும் கூறினார். அதனைத் தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக நடத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேப்போல் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரும் பல்வேறு பணிகள் குறித்து 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதன் பின்னர் அ.தி.மு.க மாநகராட்சி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ் பேசும்போது, 31-வது வார்டில் ஏற்கனவே 11 போர்வெல்கள், மாநகராட்சி சார்பில் 4 போர்வெல்கள் என மொத்தம் 20 போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவற்றுக்கு முறையான டேங்க் ஆப்ரேட்டர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் கூட்டத்தொடரில் கவுன்சிலர்கள் பேசுவது பதிவு செய்யப்படுகிறதா? என்று தெரியவில்லை.

    ஏற்கனவே கவுன்சிலர்கள் புகைப்படம் எங்கு வைக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். அதை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் போதுமான தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று பேசினார்.

    அப்போது இடையில் தி.மு.க. கவுன்சிலர் பேசினார். இதனால் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இடைய காரசார விவாதம் நடைபெற்றது.

    தொடர்ந்து அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசுகையில், மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழு நேரமும் டாக்டர்கள் நியமிக்கப்படாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாக்கடைகள் முறையாக தூர்வரப்படுவதில்லை, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறினார்.

    மேலும் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த மின் கட்டண அறிவிப்பு மக்களை பாதிக்கும். எனவே இதற்கு நாங்கள் எதற்கு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

    அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், கவுன்சிலர்கள் தங்கவேல், நிர்மலா தேவி, ஹேமலதா, பாரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகளை குறித்து விரிவாக பேசினர்.

    • திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்
    • தற்போது அந்த தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற காரணத்தினால் மலைக்கோட்டை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது

    திருச்சி

    திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது. துணை மேயர் திவ்யா, மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ் பேசும்போது, மாவடி குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும். சாலைகளில் ஆங்காங்கே கேபிள் ஒயர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

    இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடனே இதை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை முற்றிலுமாக முடித்து விட்டு சாலைகளை போட வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் பன்னீர்செல்வம் பேசும்போது, சத்திரம் பகுதியில் பழைய கரூர் ரோட்டில் அடிக்கடி பாதாள சாக்கடை பழைய குழாய்கள் வெடித்து விடுகின்றன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

    தி.மு.க. கவுன்சிலர் ராமதாஸ் பேசும்போது, கருமண்டபம் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 4, 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். லாரி தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்படவில்லை என செல்கிறார்கள் என்றார்.

    19-வது வார்டு திமுக கவுன்சிலர் சாதிக் பாட்ஷா பேசும் போது, எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு மரக்கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    தற்போது அந்த தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற காரணத்தினால் மலைக்கோட்டை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதனால் தேவையான தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள் எனவே தண்ணீர் திறப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றார். இவ்வாறு பல்வேறு கவுன்சிலர்களும் தங்கள் வார்டுக்கு உட்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி பேசினர்.

    பின்னர் மேயர் அன்பழகன் பேசும்போது, பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து சாலைகளும் போடப்படும்.

    கருமண்டபம் பகுதியில் சில வார்டுகளை சேர்த்து தண்ணீர் சப்ளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

    • திண்டுக்கல் மாநகராட்சி சிறப்பு கூட்டம் இன்று மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது.
    • 129 தீர்மானங்கள் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின்பு நிறைவேற்றப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி சிறப்பு கூட்டம் இன்று மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ராஜப்பா, கமிஷனர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் இதில் பெரும்பாலான தி.மு.க. உறுப்பினர்கள் வராததால் மன்றம் வெறிச்சோடி காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினராக வரத் தொடங்கினர்.

    104 பொது தீர்மானம் மற்றும் 15 சிறப்பு தீர்மானங்கள் என மொத்தம் 129 தீர்மானங்கள் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின்பு நிறைவேற்றப்பட்டது.

    ஜூலை 1ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாரம் ஒரு முறை சுகாதாரத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள்.

    பிளாஸ்டிக் இல்லாத மாநகராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ×