search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confinement"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே 17 வயது சிறுமி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படு கிறது.
    • அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்த சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு, காமராஜர் நகரை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகன் சிவக்குமார் (வயது 23) கூலித்தொழிலாளி.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்த சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கலில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, பரமத்தியில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி அருகே வெய்யகாஞ்சன்புதூர் பகுதியில் விவசாயியை தாக்கியவர் சிறையில் அடைத்தனர்.
    • இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராசு, அங்கு கிடந்த கற்களை எடுத்து பெரியசாமி மீது எறிந்து தாக்கியுள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி அருகே வெய்யகாஞ்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி( வயது 55). விவசாயி. இவர்கள் தோட்டம் அருகாமையில் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராசு(43)என்பவருக்கும் தடப்பிரச்சனை காரணமாக முன் விரோதம் உள்ளது.

    இந்நிலையில் நேற்று பெரியசாமி அவரது தோட்டத்திற்கு சென்றபோது, ராசு அவரை தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராசு, அங்கு கிடந்த கற்களை எடுத்து பெரியசாமி மீது எறிந்து தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியதில் பெரியசாமி பலத்த காயம் அடைந்தார்.

    அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பெரியசாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ராசுவை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனர். 

    • செவ்வாய்பேட்டை லீபஜார் ரோட்டில், பழைய வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த சில நபர்கள் மதிவாணனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.5500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்பேட்டை, சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). சேகோ பேக்டரி உரிமையாளர்.

    இவர் நேற்று செவ்வாய்பேட்டை லீபஜார் ரோட்டில், பழைய வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் மதிவாணனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.5500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட, பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற பக்ருதீன் ( 45), அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செயின், மோதிரம், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்டம்பட்டி, கணக்கன்காடு பகுதியில் நாய்கடி புதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் 3 இளைஞர்கள் நின்று கொண்டு மதுபோதை யில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.
    • அந்த 3 வாலிபர்களையும் அழைத்து இந்த பகுதியில் நிற்க கூடாது, நீங்கள் யார், எந்த ஊர், எதற்காக சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் நீ யார் எங்களை கேட்பது என்று கூறி நாங்கள் அப்படி தான் சத்தம் போடுவோம் என அவரை பேசினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்டம்பட்டி, கணக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 60) விவசாயி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டம்பட்டிக்கு தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    நாய்கடி புதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் 3 இளைஞர்கள் நின்று கொண்டு மதுபோதை யில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

    அப்போது நல்லதம்பி அந்த 3 வாலிபர்களையும் அழைத்து இந்த பகுதியில் நிற்க கூடாது, நீங்கள் யார், எந்த ஊர், எதற்காக சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் நீ யார் எங்களை கேட்பது என்று கூறி நாங்கள் அப்படி தான் சத்தம் போடுவோம் என அவரை பேசினர்.

    மேலும் நல்லதம்பியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து நல்லதம்பி வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நல்ல தம்பியை தாக்கிய நாமக்கல் தாலுகா, கோதூர், அண்ணா நகரை சேர்ந்த துரைசாமி மகன் விக்னேஷ் (24), பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள செருக்கலைபுதுப்பாளை யத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மணி கண்டன்(23), அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மகன் பிரபாகரன் (22) ஆகிய 3 பேர்களையும் வேலக வுண்டம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்தி 3 பேரையும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சேலம் திருவள்ளுவர் நகர் முருகன் கோவில் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த வாலிபரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டார்.
    • இதையொட்டி ராசிபுரம் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். அவரிட மிருந்து திருடப்பட்ட நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்லப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவரது மனைவி வளர்மதி (வயது 54). இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 28-ம் தேதி பகல் நேரத்தில் அந்தப் பகுதியில் வளர்மதி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக முககவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது அவர் வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க தாலிக் கொடியை பறித்துக் கொண்டு சென்று விட்டார். இது பற்றி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், மாணிக்கம் மற்றும் போலீசார் கார்த்திகேயன், புஷ்பராஜன், மோகன் குமார், பாலமுருகன், அருள்குமார், மகாலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் 95-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சுமார் 75 கி. மீ. தூரம் சென்று ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் சேலம் திருவள்ளுவர் நகர் முருகன் கோவில் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (34) என்ற வாலிபரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டார். இதையொட்டி ராசிபுரம் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். அவரிட மிருந்து திருடப்பட்ட நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர் . போலீசார், கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபின் சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் அருகே வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    • இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்த யோகேஸ்வரன், மணிகண்டன் , வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    நாமக்கல்:

    ஈரோடு மாணிக்கம் பாளையத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). இவர் கிச்சன் வேர் என்ற பெயரில் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு குமாரபாளையம் கலைவாணி தெருவை சேர்ந்த யோகேஸ்வரன் (26) என்பவர் பேஸ்புக் மூலம் நண்பராக அறிமுகமானார். இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளாத நிலையில் பேஸ்புக்கில் பழகி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி கோபிநாத் தனது வாடிக்கையாளரை சந்திக்க குமாரபாளையத்திற்கு சென்றார்.இதனை அறிந்த யோகேஸ்வரன், கோபிநாத்தை நேரில் சந்தித்து பேச வேண்டும் என தெரிவித்தார். மேலும் பைபாஸ் ரோட்டில் அருவங்காடு பஸ் நிறுத்தத்தில் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அவரை சந்திக்க கோபிநாத் அருவங்காட்டுக்கு சென்றார். அங்கிருந்த யோகேஸ்வரன், அவரை அங்குள்ள மலைக்கரடு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

    அப்போது அங்கு குமாரபாளையம் ஸ்ரீரங்க செட்டியார் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (27), பண்டாரி கோவில் வீதியை சேர்ந்த வினோத்குமார் (21) ஆகியோர் வந்தனர். 3 பேரும் சேர்ந்து கோபிநாத்தை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின், பாக்கெட்டில் வைத்திருந்த 18,000 பணம், வெள்ளி கொடி ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை அங்கிருந்து அடித்து விரட்டினர்.

    இது குறித்து கோபிநாத், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார் . இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்த யோகேஸ்வரன், மணிகண்டன் , வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர் .பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது இதேபோல மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு சிறையில் அடைத்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • ராஜஸ்தானை சேர்ந்த வர் தர்மிசந்த் (வயது 48). இவர் சேலம் ஆசாரி தெரு வில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • பணம் கொடுக்க மறுத்து உள்ளார். இதையத்து அவர்கள், தர்மிசந்தை சரமாரியாக தாக்கினர்.

    சேலம்:

    ராஜஸ்தானை சேர்ந்த வர் தர்மிசந்த் (வயது 48). இவர் சேலம் ஆசாரி தெரு வில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர், தர்மிசந்தை வழி மறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுத்து உள்ளார். இதையத்து அவர்கள், தர்மிசந்தை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த தர்மிசந்த் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சில வியாபாரிகள், தாக்குதல் நடத்திய ஒருவரை பிடித்து சேலம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அஸ்தம்பட்டி பிள்ளையார் கோவில் ரோடு பகுதியை சேர்ந்த முகமது உக்சா (28) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முகமது உக்சாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • சேலம் மாவட்–டம், ஜல–கண்–டா–பு–ரம் அருகே சவு–ரி–யூ–ரில் நவோ–தயா அரசு மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்–தப் பள்–ளி–யில் 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வரு–கி–றார்.
    • அங்கு மற்ற மாண–வி–கள் யாரும் இல்–லாத நேரத்–தில், கணித ஆசி–ரி–யர் அந்த 9-ம் வகுப்பு மாண–வியை கட்–டி–பி–டித்து பாலி–யல் தொல்லை கொடுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது.

    ஓம–லூர்:

    சேலம் மாவட்–டம், ஜல–கண்–டா–பு–ரம் அருகே சவு–ரி–யூ–ரில் நவோ–தயா அரசு மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்த பள்–ளி–யில் கணித ஆசி–ரி–ய–ராக கன்–னி–யா–கு–மரி மாவட்–டம் நாகர்–கோ–விலை சேர்ந்த சர–வ–ண–கு–மார் (வயது 44) என்–ப–வர் வேலை பார்த்து வரு–கி–றார்.

    இந்–தப் பள்–ளி–யில் 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வரு–கி–றார். இந்–த–நி–லை–யில் நேற்று முன்–தி–னம் மாலை 3 மணி அள–வில் கணித ஆசி–ரி–யர் சர–வ–ண–கு–மார் அந்த மாண–வி–யி–டம் அடை–யாள பதிவு எண் எழுத சோதனை கூடத்–திற்கு அழைத்து உள்–ளார். அங்கு மற்ற மாண–வி–கள் யாரும் இல்–லாத நேரத்–தில், கணித ஆசி–ரி–யர் அந்த 9-ம் வகுப்பு மாண–வியை கட்–டி–பி–டித்து பாலி–யல் தொல்லை கொடுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது.

    இத–னால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, வீட்–டுக்கு சென்று நடந்த விவ–ரங்–களை தனது பெற்–றோ–ரி–டம் கூறி கதறி அழு–துள்–ளார். உடனே அந்த மாண–வி–யின் பெற்–றோர் ஓம–லூர் அனைத்து மக–ளிர் போலீ–சில் புகார் அளித்–த–னர். அதன்–பே–ரில் ஆசி–ரி–யர் சர–வண குமார் மீது போக்சோ சட்–டத்–தின் கீழ் போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து அவரை கைது செய்–த–னர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி சஸ்பெண்டு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

    • 6 வயதான சிறுமியை சில்மிஷம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). இவர், 6 வயதான சிறுமியை சில்மிஷம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கோவிந்தராைஜ கைது செய்தனர். கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சேலம் மத்திய ெஜயிலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி போலீசார், பலத்த பாதுகாப்புடன் கோவிந்தராஜை அழைத்துச் சென்று சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • துப்பாக்கி தயாரித்ததாக கடந்த மே மாதம் ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர் படுத்தினர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த என்ஜி னீயர் சஞ்சய் பிரகாஷ் (வயது 24), எருமாபாளையத்தை சேர்ந்தவர் பி.சி.ஏ.பட்டதாரி நவீன்சக்ரவர்த்தி (25), அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் கபிலன் (25) .

    இவர்கள் துப்பாக்கி தயாரித்ததாக கடந்த மே மாதம் ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறபபு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர் படுத்தினர்.

    அப்போது 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. போலீ சார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசா ரணை வருகிற 16ந் தேதி மீண்டும் சென்னை கோர்ட்டில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து மீண்டும் பலத்த பாதுகாப்புடன் சேலத்திற்கு அழைத்து வரப்பட்ட 3 பேரும் சேலம் மத்திய சிறையில் நேற்றிரவு அடைக்கப்பட்டனர். 

    • கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பா–ளையத்தில் உள்ள மாரியம்மன், பாலமுருகன் கோவிலுக்குள் கடந்த 23-ந் தேதி நள்ளிரவு புகுந்க மர்ம நபர் 2 கோவில் உண்டியல்களை உடைத்து ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.

    இது குறித்து கோவில் நிர்வாகிகள் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் உண்டியல் உடைப்பில் ஈடுபட்டது ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த வைரவேல் (20) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வைர வேலை கைது செய்தனர்.

    வைரவேல் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள், கத்தியை காட்டி பணம் பறித்தது, திருட்டு வழக்குகள் உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    ×