search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் நகை பறிப்பு, கைதான சேலம் வாலிபர் ெஜயிலில் அடைப்பு
    X

    பெண்ணிடம் நகை பறிப்பு, கைதான சேலம் வாலிபர் ெஜயிலில் அடைப்பு

    • சேலம் திருவள்ளுவர் நகர் முருகன் கோவில் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த வாலிபரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டார்.
    • இதையொட்டி ராசிபுரம் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். அவரிட மிருந்து திருடப்பட்ட நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்லப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவரது மனைவி வளர்மதி (வயது 54). இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 28-ம் தேதி பகல் நேரத்தில் அந்தப் பகுதியில் வளர்மதி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக முககவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது அவர் வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க தாலிக் கொடியை பறித்துக் கொண்டு சென்று விட்டார். இது பற்றி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், மாணிக்கம் மற்றும் போலீசார் கார்த்திகேயன், புஷ்பராஜன், மோகன் குமார், பாலமுருகன், அருள்குமார், மகாலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் 95-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சுமார் 75 கி. மீ. தூரம் சென்று ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் சேலம் திருவள்ளுவர் நகர் முருகன் கோவில் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (34) என்ற வாலிபரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டார். இதையொட்டி ராசிபுரம் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். அவரிட மிருந்து திருடப்பட்ட நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர் . போலீசார், கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபின் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×