search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை சில்மிஷம் செய்த  முதியவர் சேலம் ஜெயிலில் அடைப்பு
    X

    சிறுமியை சில்மிஷம் செய்த முதியவர் சேலம் ஜெயிலில் அடைப்பு

    • 6 வயதான சிறுமியை சில்மிஷம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). இவர், 6 வயதான சிறுமியை சில்மிஷம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கோவிந்தராைஜ கைது செய்தனர். கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சேலம் மத்திய ெஜயிலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி போலீசார், பலத்த பாதுகாப்புடன் கோவிந்தராஜை அழைத்துச் சென்று சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×