search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயிலில்"

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
    • 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    நாகர்கோவில்:

    தேரூர் பகுதியை சேர்ந்த வர் ஆறுமுகம் வன ஊழியர். இவரது மனைவி யோ கேஸ்வரி. கணவன்-மனைவி இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு திருமண வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தேரூர் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தலைமறைவாக இருந்தவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதாசிவம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருவது தெரிய வந்தது. அங்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதாசிவத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சதாசிவம் சென்னை பகுதியில் தனது பெயரை மாற்றிக்கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதா சிவத்தை நாகர்கோவில் ஜே.எம். 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தேரூர் இரட்டை கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு பிறகு தேரூர் இரட்டை கொலை வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    • போக்சோ வழக்கில் கைதாகி தஞ்சாவூர் சீர்திருத்த பள்ளியில் இருந்தவன்
    • மேட்டுப்பாளையம் பஸ்சுக்குள் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்

    கோவை,

    தஞ்சாவூர் அருகே உள்ள சோழன் நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் கடந்த மாதம் 17-ந் தேதி போக்சோ வழக்கில் வைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடந்த 23-ந் தேதி தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    சீர்திருத்த பள்ளியில் இருந்த சிறுவன் கடந்த 31-ந் தேதி மதியம் 1 மணி யளவில் பள்ளியில் இருந்து தப்பி வெளியே வந்தார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சீர்திருத்த பள்ளி யில் இருந்து தப்பிய சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்தநிலையில் சிறுவன் திருப்பூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் பஸ்சில் செல்வதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தஞ்சாவூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், இதுகுறித்து கோவை மேட்டுப்பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தார்.

    மேட்டுப்பாளையம் போலீசார் பஸ் நிலையத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சிறுவனை போலீசார் பஸ்சில் வைத்து மீண்டும் கைது செய்தனர். பின்னர் போலீசார் சிறுவனை கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    • முத்துசாமி (65). இவர் தனது உறவினர் அய்யனார், அவரது மனைவி லதா ஆகியோருடன் சேர்ந்து நிலம் வாங்க முடிவு செய்தார்.
    • அசல் பத்திரத்தை கேட்டபோது இருவரும் பத்திரத்தை தராமல் ரூ.20 லட்சம் கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று மிரட்டல் விடுத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கண்ணந்தேரி அடுத்த கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (65). இவர் தனது உறவினர் அய்யனார், அவரது மனைவி லதா ஆகியோருடன் சேர்ந்து நிலம் வாங்க முடிவு செய்தார்.

    இதையடுத்து மகுடஞ்சாவடியை சேர்ந்த அய்யண்ணன், அவரது மகன் ஜெகன் மூலம் மகுடஞ்சாவடி பழைய சந்தைப்பேட்டையை சேர்ந்த நிலத்தரகர்களான கோபால கண்ணன் (53), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (49) ஆகியோர் அறிமுகமாகினர்.

    ரூ.55 லட்சம்

    இவர்கள் மகுடஞ்சாவடி அருகே கூடலூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான சங்ககிரி மெயின் ரோட்டில் உள்ள 1.47 ஏக்கர் நிலத்தை தாங்கள் கிளை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறி ரூ.55 லட்சத்திற்கு விலை பேசினர்.

    பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தின் உரிமையாளர் நடராஜன் மூலம் முத்துசாமி, அவரது உறவினரின் மனைவி லதா ஆகியோர் பெயரில் கிரையம் செய்து கொடுத்தனர்.

    இந்த கிரையத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட கோபாலகண்ணன் சார்பதிவாளர் அலுவ லகத்தில் பத்திரத்தை பெற்றுக்கொண்டு முத்துசாமியிடம் கிரையம் செய்யப்பட்ட நிலத்திற்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்து தருவதாக கூறி ரூ.75 ஆயிரத்தையும் பெற்றுக் கொண்டனர்.

    மிரட்டல்

    இந்த நிலையில் முத்துசாமி, லதா தரப்பினர் கோபால கண்ணன், சரவணன் ஆகியோரிடம் வழங்கிய அசல் பத்திரத்தை கேட்டபோது இருவரும் பத்திரத்தை தராமல் ரூ.20 லட்சம் கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் மனு அளித்தார்.

    சிறையில் அடைப்பு

    இதுகுறித்து விசா ரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு கோபால கண்ணன், சரவணன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாழப்பாடிக்கு நேற்று மதியம் டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.
    • அப்போது பயணம் செய்த நபர் ஒருவர் திடீரென பஸ்சில் இருந்து பாதியிலேயே கீழே இறங்கினார்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாழப்பாடிக்கு நேற்று மதியம் டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் கண்டக்டராக குப்பனூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (வயது 36) என்பவர் பணியாற்றினார். 2-வது அக்ரஹாரம் ராஜகணபதி கோவில் அருகே பஸ் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது பயணம் செய்த நபர் ஒருவர் திடீரென பஸ்சில் இருந்து பாதியிலேயே கீழே இறங்கினார்.

    இதை பார்த்த கண்டக்டர் அந்த நபரிடம் ஏன் பயணச்சீட்டு எடுக்காமல் கீழே இறங்குகிறீர்கள்? என கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர் நடுரோட்டில் வைத்து லட்சுமிகாந்தனை தாக்கினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நின்றன.

    தகவல் கிடைத்ததும் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கண்டக்டர் லட்சுமிகாந்தனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து கண்டக்டருடன் தகராறு செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ் (52) என்பது தெரியவந்தது. மேலும் லட்சுமிகாந்தனை தாக்கியதுடன் அவரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக சதீசை போலீசார் கைது செய்தனர். இதை யடுத்து அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு, ஜெயிலில் அடைக் கப்பட்டார்.

    • கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • ன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள சித்தன்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன்.

    இவர் கடந்த 11-ந்தேதி மதியம் தனது மோட்டார் சைக்கிளை சாமிதோப்பு பகுதியில் ஒரு ஓட்டல் அருகே சாவியுடன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை கீழமணக்குடி சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்த போது அதில் வந்தவர்கள் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 26), மாடம்பிள்ளை தர்மத்தை சேர்ந்த மகேந்திரன் (20) என்பதும், இவர்கள் சாமி தோப்பில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதில் சிறையில் அடைக் கப்பட்ட கண்ணன் மீது தென் தாமரைகுளம், அஞ்சு கிராமம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் தந்தைக்கு தீவிர சிகிச்சை
    • நான் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை பெருங் கடையை சேர்ந்தவர் பவுல் (வயது 73). இவரது மனைவி அமலோற்பவம் (70). இவர்களுக்கு மோகன்தாஸ் (52) என்ற மகனும் 2 மகள் களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    மோகன்தாஸ் தொழி லாளியாக வேலை செய்ததுடன் ஆட்டோவும் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். மோகன்தாஸ் தாய்-தந்தையுடன் வசித்து வந்தார். சொத்து பிரச்சினை காரணமாக மோகன்தாசுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று முன்தினம் இரவு மோகன் தாஸ் குடிபோதையில் தாய்-தந்தை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அமலோற்பவம் சம்பவ இடத்திலேயே பலியானார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பவுலை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்தாஸ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதனால் எனக்கும், எனது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அவரது சொத்துக்களை எனக்கு தரவில்லை.

    எனது சகோதரிகளுக்கு மட்டும் கொடுத்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முக்கடல் அணை பகுதியில் கிடந்த நிலம் ஒன்றை விற்பனை செய்தார். அதன் மூலமாக ரூ.30 லட்சம் கிடைத்தது. அந்த பணத்தில் ரூ.15 லட்சத்தை எனது சகோதரிகளுக்கு கொடுத் தார். மீதமுள்ள பணத்தை அவர் வைத்திருந்தார்.

    நான் அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்தேன். ஆனால் அவர் பணம் தரவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தந்தை பவுல், தாயார் அமலோற்பவத்தை வெட்டினேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட மோகன்தாஸை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி னார்கள். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் புகழேந்தி (வயது 21). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சிறுமியை கடத்திய புகழேந்தி மீது, பரமத்தி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். 

    • 6 வயதான சிறுமியை சில்மிஷம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). இவர், 6 வயதான சிறுமியை சில்மிஷம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கோவிந்தராைஜ கைது செய்தனர். கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சேலம் மத்திய ெஜயிலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி போலீசார், பலத்த பாதுகாப்புடன் கோவிந்தராஜை அழைத்துச் சென்று சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 4- வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி.

    இவரது2-வது மனைவி அலமேலு ( வயது 46). இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று கண்ணன் - அலமேலு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு, ஒருவரை–யொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. அந்த சமயம் கண்ணனுக்கு ஆதரவாக அவரது தம்பி குமார் மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த குமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து பெற்று வருகிறார்.

    இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்ன–தானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் அலமேலுவை கைது செய்து சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைந்தனர்.

    ×