search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Branch Jail"

    • மாவட்ட நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
    • சிறப்பு கூட்டம் நடைபெற்றது

    செய்யாறு:

    செய்யாறு ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பி. மதுசூதனன் நேற்று ஆய்வு செய்தார்.

    பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன், சார்பு நீதிபதி குமாரவர்மன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தனஞ்செயன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆயுஷ் பேகம், நீதித்துறை நடுவர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் மாவட்ட நீதிபதியிடம் அளித்த கோரிக்கை மனுவில், செய்யாறில் மூடிய நிலையில் உள்ள கிளை சிறையை மீண்டும் திறக்க வேண்டும்.

    நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீதிமன்ற கட்டிடத்திலே செயல்பட அனுமதிக்க வேண்டும், மூடப்பட்டுள்ள உணவு கட்டிடத்தை (கேன்டீன்) திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்வதாக மாவட்ட நீதிபதி பி.மதுசூதனன் உறுதியளித்தார்.

    இதில் மூத்த வழக்கறிஞர்கள் எம் எஸ் சங்கர பாண்டியன், ஜே. ராமகிருஷ்ணன், நம்பி, சக்தி அண்ணாமலை உள்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் கிளை சிறையில் தேவைகள் குறித்து தி.மு.க. சட்டத்துறை துணை செயலாளர் கண்ணதாசன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
    • அடிப்படை வசதிகளை செய்து தர சட்டத்துறை அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கிளை சிறையில் தேவைகள் குறித்து தி.மு.க. சட்டத்துறை துணை செயலாளர் கண்ணதாசன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து சிறை கட்டிடம் பழமையாக இருப்பதால் கட்டிடத்தை மாற்றி கூடுதல் அறைகள் கட்டி தரவும், சமையல் கூடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர சட்டத்துறை அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர். அப்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், மூத்த உறுப்பினர் சந்திரன், முன்னாள் சேர்மன் பாலசுப்ரமணியன் வக்கீல் ஜெயக்குமார், ஆசிரியர் ஐசக், மாரியப்பன், பிரகாஷ், ஜெயக்குமார் அப்பாஸ் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பா–ளையத்தில் உள்ள மாரியம்மன், பாலமுருகன் கோவிலுக்குள் கடந்த 23-ந் தேதி நள்ளிரவு புகுந்க மர்ம நபர் 2 கோவில் உண்டியல்களை உடைத்து ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.

    இது குறித்து கோவில் நிர்வாகிகள் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் உண்டியல் உடைப்பில் ஈடுபட்டது ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த வைரவேல் (20) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வைர வேலை கைது செய்தனர்.

    வைரவேல் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள், கத்தியை காட்டி பணம் பறித்தது, திருட்டு வழக்குகள் உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    ×