search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளைச்சிறையை மீண்டும் திறக்க வேண்டும்
    X

    கிளைச்சிறையை மீண்டும் திறக்க வேண்டும்

    • மாவட்ட நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
    • சிறப்பு கூட்டம் நடைபெற்றது

    செய்யாறு:

    செய்யாறு ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பி. மதுசூதனன் நேற்று ஆய்வு செய்தார்.

    பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன், சார்பு நீதிபதி குமாரவர்மன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தனஞ்செயன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆயுஷ் பேகம், நீதித்துறை நடுவர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் மாவட்ட நீதிபதியிடம் அளித்த கோரிக்கை மனுவில், செய்யாறில் மூடிய நிலையில் உள்ள கிளை சிறையை மீண்டும் திறக்க வேண்டும்.

    நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீதிமன்ற கட்டிடத்திலே செயல்பட அனுமதிக்க வேண்டும், மூடப்பட்டுள்ள உணவு கட்டிடத்தை (கேன்டீன்) திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்வதாக மாவட்ட நீதிபதி பி.மதுசூதனன் உறுதியளித்தார்.

    இதில் மூத்த வழக்கறிஞர்கள் எம் எஸ் சங்கர பாண்டியன், ஜே. ராமகிருஷ்ணன், நம்பி, சக்தி அண்ணாமலை உள்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×