search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேகோ பேக்டரி உரிமையாளரிடம் வழிப்பறி கைதான 2 பேர் சிறையல் அடைப்பு
    X

    சேகோ பேக்டரி உரிமையாளரிடம் வழிப்பறி கைதான 2 பேர் சிறையல் அடைப்பு

    • செவ்வாய்பேட்டை லீபஜார் ரோட்டில், பழைய வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த சில நபர்கள் மதிவாணனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.5500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்பேட்டை, சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). சேகோ பேக்டரி உரிமையாளர்.

    இவர் நேற்று செவ்வாய்பேட்டை லீபஜார் ரோட்டில், பழைய வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் மதிவாணனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.5500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட, பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற பக்ருதீன் ( 45), அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செயின், மோதிரம், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×