search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "competitions"

    • 750 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை, 75 மின்விளக்குகள், 75 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    • மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரு.5 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து முடிந்தன.

    தஞ்சை மாநகர மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் ரூ.3 கோடி மதிப்பில் 1200 மீட்டர் தூரத்திற்கு நடைபாதை, 750 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை, 75 மின்விளக்குகள், 75 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.2 கோடியில் திறந்தவெளி ஸ்கேட்டிங் தளம், கையுந்து பந்து மைதானம் மேம்படுத்துதல், கழிவறை வசதி அமைத்தல், நுழைவு வாயில் அமைத்தல் போன்ற பணிகளு முடிக்கப்பட்டுள்ளன.

    இந்த மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல் வரவேற்றார்.

    விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்னை சத்யா அரங்கில் முடிக்கப்பட்டுள்ள ரூ.5 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்தார்.

    முதலில் ஸ்கேட்டிங் மைதானத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் பயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் நடைபாதை, கையுந்துபந்து மைதானத்தை திறந்து வைத்து மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி.கே.ஜி.நீலமேகம் , கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித்தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு சென்று மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா படத்தை திறந்து வைத்தார்.

    முன்னதாக தஞ்சைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விளாங்குடி, பள்ளியக்கிரஹாரம் பிரிவு சாலை, கரந்தை பஸ் நிறுத்தம், கொண்டிராஜபாளையம் ரவுண்டானா, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை, புதுஆற்றுப்பா லம், அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    • கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
    • முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு பொது நூலகத்துறை சார்பில் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய 5 இடங்களில் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

    இதில் தஞ்சை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவிரி இலக்கியத் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி முதல் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கூடலரங்கில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.

    இதில் கவிதைப் போட்டி "காவிரியைப் போற்றுவோம்" என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டி"தமிழ் இலக்கியங்களில் தமிழர் மரபு என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி"தமிழர் பண்பாடே சமுத்துவப் பண்பாடு" "நாணி போற்றும் தமிழர் பண்பாடு" என்ற தலைப்பிலும் பாட்டுப்போட்டி" மண்ணின் மணம் கமழும் மக்கள் பாடல்கள்" "சோழமண்டல நாட்டுப்புறப் பாடல்கள்" என்ற தலைப்பிலும் நடைபெறுகிறது. கல்லூரி மாணவர்கள் ஒரு போட்டிக்கு ஒரு கல்லூரியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே பங்கு பெறலாம்.

    இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ -மாணவிகள் தங்களது பெயரினை இன்றுக்குள் (திங்கட்கிழமை) ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சலில் sathiyamoorthy6932@gmail.com அனுப்ப வேண்டும்.

    போட்டி நடைபெறும் நாளன்று காலை 10 மணிக்குள் கல்லூரி கலையரங்கத்திற்கு மாணவர்கள் வர வேண்டும்.

    இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பொது நூலகத்துறை சார்பில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

    இப்போட்டி குறித்த விவரங்களை 9751806932 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது.
    • மாணவ, மாணவி களிடையே ஒவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி முதல்வர் சூரியகாந்தி தலைமையில் நடந்தது.

    விழாவில் மண்ணின் இசை பாடல்கள், கவிச்சரம், நாட்டுப்புற பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, மருவரசி, சிவரஞ்சனி, கவிஞர் கண்ணையன், பத்மஜா, பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    மேலும் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், வேதாரண்யம் சங்க தலைவர் ரமேஷ் உட்பட கல்லூரி மாணவ- மாணவிகளும், பேராசிரியர்கள் பிரபாகரன், அர்ஜூனன், மாரிமுத்து, இளையராஜா, முத்துகிருஷ்ணன் உட்பட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    மேலும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆவராணி ஆனந்தன் நடுவராக கொண்டு கல்லூரி மாணவிகளின் பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தது.

    பேராசிரியர் ராஜா வரவேற்றார்.

    எழுத்தாளர்கள் சங்க செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.

    இதேபோல் வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் மகளிர் தின விழா பள்ளிச்செயலர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

    மாணவ, மாணவி களிடையே ஒவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்ப ட்டது.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், வச ந்தா,ரவீ ந்திரன் சந்திரசேகரன், சரண்யா, இலக்கி யா,வி ஜயலக்ஷ்மி, ஆனந்தன் ஓய்வு பெற்ற தலை மையா சிரியர் சித்தி ரவேல் உட்பட கல்விக்கு ழுவினரும் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் ரேஸ் போட்டிகளில் சாதனை படைத்தனர்.
    • மெனு ஸ்போர்ட்ஸ் அகாடமி நாமக்கலுக்கு அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்க செய்தனர்.

    கீழக்கரை

    தமிழ்நாடு ரோலர் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் மற்றும் நவோதயா அகாடமி இணைந்து நாமக்கல் நவோதயா அகடாமி மைதானத்தில் தேசிய அளவிலான போட்டிக்கான தேர்வு செய்வதற்கான ஸ்கேட்டிங் ரேஸ் போட்டி நடந்தது.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து ஸ்கேட்டிங் ரேஸ் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசாக தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கீழக்கரையில் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி உள்பட 3 பள்ளி மாணவர்களில் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து ராமநாதபுரம் மெனு ஸ்போர்ட்ஸ் அகாடமி நாமக்கலுக்கு அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்க செய்தனர்.

    பல்வேறு பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் கீழக்கரை இஸ்லாமிய பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் முஹம்மது பஹத் (9-ம் வகுப்பு), முஹம்மது முஆத் (5-ம் வகுப்பு) ஆகியோர் 2-வது இடமும், முஹம்மது அஹ்ஷன் (9-ம் வகுப்பு) 3-வது மற்றும் 5-வது இடமும், மோஹித் ராஜ் (2-ம் வகுப்பு) முதல் மற்றும் 2-வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

    அவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், கல்விக்குழு நிர்வாகிகள், முதல்வர் மேபல் ஜஸ்டஸ், மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • ராஜபாளையத்தில் கிராமப்புற பண்பாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

    ராஜபாளையம்

    விவேகானந்தக் கேந்திரமும், ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் ராஜபாளையம் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவில் கிராமப்புற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கிளைத் தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கேந்திரக்கிளைப் பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு இடையேயான ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார். 32 பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் 80 மாணவ மாணவியர்கள் பரிசுகள் பெற்றனர். கோவில்பட்டி கேந்திர கிளை ஒருங்கிணைப்பாளர் பரமகுரு ேபசினார்.

    போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
    • மாணவர்கள் நடனம், பேச்சு போட்டி போன்றவற்றில் முதல் பரிசினை பெற்றனர்.

    சுரண்டை:

    சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் நெல்லையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கலை கலாச்சார மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டியில் 74 பள்ளிகள் கலந்து கொண்டது. இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியை சேர்ந்த ஒவ்வொரு மாணவர்களும் சிறப்பான முறையில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.

    தனி நடனம், குழு நடனம், ஓவியம் வரைதல், பானையில் ஓவியம் வரைதல்,கோலப்போட்டி ,தமிழ் பேச்சு போட்டி போன்றவற்றில் முதல் பரிசும்,தமிழ் கட்டுரைப் போட்டி, ஆங்கில கட்டுரைப்போட்டி, குழு பாடலில் 2-வது பரிசும் பெற்றுள்ளனர். பள்ளி முழு மைக்கான 2-வது பரிசையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி மற்றும் பள்ளி ஆசிாியா்கள் பாராட்டினா்.

    • மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில், பள்ளி கல்வித் துறை சார்பில் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்தது. கீழப்பழுவூரில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 14, 17, 19 வயதுடைய பள்ளி மாணவ, மாணவிகள் 3,500 பேர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, படிப்புடன் இதர திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில் தனித் திறன்கள் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குநர் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர்கள் அருண்மொழி, ரமேஷ், திருமூர்த்தி, சேகர், ஷாயின்ஷ, ரவிச்சந்திரன், மோகன்தாஸ், மரிய பிரிட்ஜித், வீரபாண்டியன், பாண்டியன், ஜாக்குலின் உஷா, மேரி, கரோலின், கண்ணன், சுப்ரமணியன், குறிஞ்சிவேந்தன், வினோத்குமார், தர்மலிங்கம் வந்தியத்தேவன், ரவி, அறிவழகன் ஆகியோர் செய்திருந்தனர்.


    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விருதுநகர் மாவட்டம் சார்பில் பொதுப்பிரிவு பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.

    போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் வீரர்/வீராங்கனைகளின் தனி நபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தங்களின் அனைத்து விபரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    இந்த போட்டிகளுக்கு இணைதளத்தில் விண்ணப்பிக்க நாளை (17-ந்தேதி) கடைசிநாள் ஆகும். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவருக்கான பரிசுத் தொகை விபரம் முதல் பரிசு ரூ.3ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.ஆயிரம் ஆகும்.

    இதில் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து, கிரிக்கெட், தடகளம், கூடைபந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேஜைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் 100 மீட்டர் ஓட்டம், அடேப்டட் வாலிபால், மன வளர்ச்சி குன்றியோர்- 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து. செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் - 100மீட்டர் ஓட்டம், கபடி. (உ) அரசு ஊழியர்கள் விளையாட்டு போட்டிகள், வயது வரம்பு இல்லை.

    மேலும் விபரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணை அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விபரங்கள் www.sdat.tn.gov.in என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் இட்டனர்.
    • தொடர்ந்து பானை உடைக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் இன்று பழைய பஸ் நிலையம் அருகே தூய்மை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இதற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பொங்கல் விழாவில் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தஞ்சைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் இட்டனர்.

    தொடர்ந்து பானை உடைக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பாடலுக்கு நடனமாடி கொண்டாடினர். அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    • மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் பிப்ரவரி 21-ந் தேதி அன்று நடத்தப்பட உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்வது குறித்து, மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் லலிதா தலைமை தாங்கி பேசியதாவது ;-

    இந்த கூட்டத்தில் போட்டிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளுக்கு மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் 2.2.2023 முதல் 4.2.2023 வரை தேதிகளிலும்,

    கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள், 13.02.2023 மற்றும் 14.02.2023 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

    பொதுப்பிரிவினர் ஆடவர் மற்றும் மகளிருக்கு (15 முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் 23.02.2023 அன்றும், மாற்றுத் திறனாளிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ ஓட்டம் மற்றும் இறகுபந்து போட்டிகளும், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் அடாப்டட் வாலிபால் போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீ ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவிதிறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், கபடி ஆகிய போட்டிகள் 17.02.2023 அன்றும் நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் 21.02.2023 அன்றும் நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

    மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ள www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர்குமரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் நெல்லை அரசு அருங்காட்சியகம் இணைந்து தேசிய நுகர்வோர் உரிமை தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டியும், கல்லூரி மாணவ-மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஆகிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

     நெல்லை:

    நெல்லை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் நெல்லை அரசு அருங்காட்சியகம் இணைந்து தேசிய நுகர்வோர் உரிமை தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.

    விழிப்புணர்வு போட்டிகள்

    இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டியும், கல்லூரி மாணவ-மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஆகிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு அருங் காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை மாநில தலைவர் வக்கீல் ஜாபர் அலி போட்டிகளை தொடங்கி வைத்தார். கவிஞர் கணபதி சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.

    போட்டி நடுவர்களாக கவிஞர் சுப்பையா, ம.தி.தா. இந்து கல்லூரி கலை ஆசிரியை சொர்ணம் ஆகியோர் செயல்பட்டனர். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை(திங்கட்கிழமை) மாலை கலெக்டர் விஷ்ணு வழங்குகிறார்.

    ஏற்பாடுகளை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் வள்ளிக்கண், தாசில்தார் கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள் நாளை நடைபெறும் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
    • கலை பயிற்சிகள் பெரம்பலூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட அளவில் 5 முதல் 8 வயது வரை, 9 முதல் 12 வயது வரை, 13 முதல் 16 வயது வரை ஆகிய வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவர்களுக்கான கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரத நாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை), குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலை போட்டிகள் நாளை (சனிக்கிழமை) பெரம்பலூர் மதனகோபாலபுரம் 4-வது தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு நாளை காலை 9 மணிக்கு வருகை தர வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனிக்கிழமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் போன்ற கலை பயிற்சிகள் பெரம்பலூரில், மாவட்ட அரசு இசை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் சிறுவர்-சிறுமிகள் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


    ×