search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
    X

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விருதுநகர் மாவட்டம் சார்பில் பொதுப்பிரிவு பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.

    போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் வீரர்/வீராங்கனைகளின் தனி நபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தங்களின் அனைத்து விபரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    இந்த போட்டிகளுக்கு இணைதளத்தில் விண்ணப்பிக்க நாளை (17-ந்தேதி) கடைசிநாள் ஆகும். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவருக்கான பரிசுத் தொகை விபரம் முதல் பரிசு ரூ.3ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.ஆயிரம் ஆகும்.

    இதில் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து, கிரிக்கெட், தடகளம், கூடைபந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேஜைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் 100 மீட்டர் ஓட்டம், அடேப்டட் வாலிபால், மன வளர்ச்சி குன்றியோர்- 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து. செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் - 100மீட்டர் ஓட்டம், கபடி. (உ) அரசு ஊழியர்கள் விளையாட்டு போட்டிகள், வயது வரம்பு இல்லை.

    மேலும் விபரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணை அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விபரங்கள் www.sdat.tn.gov.in என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×