search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "S.R.School"

    • எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
    • மாணவர்கள் நடனம், பேச்சு போட்டி போன்றவற்றில் முதல் பரிசினை பெற்றனர்.

    சுரண்டை:

    சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் நெல்லையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கலை கலாச்சார மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டியில் 74 பள்ளிகள் கலந்து கொண்டது. இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியை சேர்ந்த ஒவ்வொரு மாணவர்களும் சிறப்பான முறையில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.

    தனி நடனம், குழு நடனம், ஓவியம் வரைதல், பானையில் ஓவியம் வரைதல்,கோலப்போட்டி ,தமிழ் பேச்சு போட்டி போன்றவற்றில் முதல் பரிசும்,தமிழ் கட்டுரைப் போட்டி, ஆங்கில கட்டுரைப்போட்டி, குழு பாடலில் 2-வது பரிசும் பெற்றுள்ளனர். பள்ளி முழு மைக்கான 2-வது பரிசையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி மற்றும் பள்ளி ஆசிாியா்கள் பாராட்டினா்.

    • இயேசு பிறப்பின் காட்சியை குடிலாக அமைத்து கிறிஸ்துமஸ் மரத்தை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காித்து வைத்தனா்.
    • மாணவா்களின் நடனம், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

    சுரண்டை:

    சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் கலந்து கொண்டனா். இயேசு பிறப்பின் காட்சியை குடிலாக அமைத்து கிறிஸ்துமஸ் மரத்தை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காித்து வைத்தனா். நிகழ்ச்சியில் மாணவா்களின் நடனம், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இயேசு பிறப்பின் செய்தியை மாணவி அழகு காா்த்திகா வழங்கினாா்.

    மாணவன் தனுஷ் வரவேற்புரை வழங்கினாா். தலைமை ஆசிாியா் மாாிக்கனி நன்றி கூறினார். மாணவன் விக்னேஷ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாணவா்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா். ஆசிாியை மொ்லின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாா். ஆசிாியைகள் சகாய நிஷா, தங்கசுபா செல்வரத்தினம், ஆசிாியா் சாம் அலெக்சாண்டா் ஆகியோா் மாணவா்களை ஒருங்கிணைத்தாா்.

    • மாணவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடனம், பாட்டு பாடுதல், ஓவியம் வரைதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை, எஸ்.ஆா்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடனம், பாட்டு பாடுதல், ஓவியம் வரைதல், கதை மற்றும் கவிதை கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிாியா் மாரிக்கனி சிறப்புரையாற்றினார். மாணவி தாரசா மீனாட்சி வரவேற்று பேசினார். வழங்கினாா், மாணவி அழகு லச்சிதா நன்றி கூறினார். மாணவி அஸ்வினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிாியைகள் மகாராணி மற்றும் அபிதா ஆகியோர் செய்திருந்தனா்.

    • துறவி வீரமாமுனிவர் போட்டி தென்காசி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து சுமார் 52 மாணவ- மாணவிகள் 15 போட்டிகளில் பங்கேற்றனர்

    சுரண்டை:

    துறவி வீரமாமுனிவர் போட்டி தென்காசி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து சுமார் 52 மாணவ- மாணவிகள் 15 போட்டிகளில் பங்கேற்றனர். இதில் பேச்சுப் போட்டியில் அக்சயா,அக்ஷரா செண்பா,நிரஞ்சனா, தனிப்பாடல் ஆதர்ஷனா, வரைதல் போட்டியில் நிபாஷினி, கவியரசி ஆகியோரும் குழு நடனத்தில் அக்ஷய்யா ரேணுகா, ஸ்டெனா, ஹரிணி, ராஜலட்சுமி, ருக்ஷானா பவானி, புகழ் பாரதி, தேவி பார்கவி, நித்ய ஸ்ரீ ஆகியோரும் பரிசுகளை வென்றனர்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சிறந்த பள்ளிக்கான சிறப்பு கேடயத்தையும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி மற்றும் பள்ளி ஆசிாியா்கள் பாராட்டினா்.

    ×